அந்த சந்தோஷத்துடன் ட்விட்டரில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதில், "இன்று நிம்மதியாகத் தூங்குவேன். இந்தக் கோடையின் கடைசிப் படமும் வெளியாகிவிட்டது. கடந்த 8 மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன. அந்த இக்கட்டான நிலைமைகளைச் சமாளித்துவிட்டேன். இந்தச் சமயத்தில் எனக்கு ஆதரவளித்த என் குடும்பத்துக்கு நன்றி. இக்காலங்களில் நான் நல்ல மகளாக, நண்பராக, கேர்ள்ஃபிரண்டாக இல்லை. இதைச் சரிகட்ட, இனி வேகமாக எதையும் செய்யப்போவதில்லை. சிறிது காலத்துக்கு எந்தவொரு புதிய படத்தையும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை," என்று கூறியுள்ளார்.
இதனால் சினிமாவிலிருந்து சமந்தா விலக எண்ணுகிறாரா, அதெப்பட்டி ஒரு முன்னணி நடிகை புதுப்படங்களை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று கூறமுடியும் என்கிற கேள்விகள் எழுந்தன.
இதுகுறித்து இப்போது மீண்டும் விளக்கம் அளித்துள்ளார் சமந்தா. அதில், "நிச்சயமாக சினிமாவிலிருந்து நான் விலகவில்லை. கடந்த எட்டு மாதங்களாக ஓய்வில்லாமல் நடித்து வருவதால் தற்போதைக்கு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடிப்பதாக உள்ளேன்.
அதிகப் படங்களில் நடிக்காமல், தேர்ந்தெடுத்து நிதானமாக நடிக்கப் போகிறேன் என்றுதான் சொல்லியிருந்தேன். அது புரியாமல் எனக்கு ஓய்வு கொடுத்துவிட்டன பத்திரிகைள்.
ஜனதா கராஜ் படத்தில் தற்போது நடித்து வருகிறேன். அடுத்ததாக வட சென்னையில் நடிக்கப் போகிறேன். பொதுவாக நான் ஒரேசமயத்தில் ஐந்து படங்களில் நடித்துக்கொண்டிருப்பேன். அதற்குப் பதிலாக குறைந்த படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
எனவே புதிய படங்களில் நடிப்பதற்கு முன்பு நடித்துவரும் படங்களை முடிக்க எண்ணுகிறேன். அக்டோபரிலிருந்துதான் புதிய படங்களை ஒப்புக்கொள்ள ஆரம்பிப்பேன்," என்று கூறியுள்ளார்.