சென்னை: பள்ளிப் பருவத்திலே திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இது ஒரு கிராமப் பள்ளியின் ஆசிரியர், தன்னிடம் படித்த மாணவர்களை உலகின் தலை சிறந்த மாணவர்களாக உருவாக்கியதைப் பற்றி பேசும் படம் என்று இந்த படத்தின் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் கூறியுள்ளார்.
'பள்ளிப் பருவத்திலே' திரைப்படம் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என அதன் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் கூறியுள்ளார். ஒரு தலைமை ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவர்களை படிப்பிலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்குகிறார்.
அவரிடம் படித்த அத்தனை மாணவர்களும் உலகம் முழுக்க சிறந்த நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்புகளில் பதவி வகிக்கின்றனர். அதைப் பற்றி பேசும் படம்தான் பள்ளி பருவத்திலே.
பல மாணவர்களை உயர்ந்த பொறுப்புக்கு வழிநடத்தியவர் கிராம பள்ளி தலைமை ஆசிரியர் சாரங்கன். அவரது வாழ்க்கையை மையமாக கொண்டு இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 30 வருடமாக என் மனதில் இழையோடிக்கொண்டிருந்த சம்பவங்களின் தொகுப்புதான் இந்தப் படம். தலைமை ஆசிரியராக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கிறார். நாயகனாக நந்தன்ராம் அறிமுகமாகிறார். இவர் இசை அமைப்பாளர் சிற்பி மகன். நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார்.
இவர் சென்னை கான்வென்ட்டில் படித்தவர். அசல் கிராமத்து மாணவியாக வேடம் ஏற்றிருக்கிறார். தம்பிராமையா, ஊர்வசி, ஆர்.கே.சுரேஷ், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கோலிசோடா பாணியில் யதார்த்தமான ஸ்டண்ட் அமைத்திருக்கிறார் சுப்ரீம் சுந்தர். வைரமுத்து, வாசு கோகிலா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர் என்றார் அவர்.
'பள்ளிப் பருவத்திலே' திரைப்படம் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என அதன் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் கூறியுள்ளார். ஒரு தலைமை ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவர்களை படிப்பிலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்குகிறார்.
அவரிடம் படித்த அத்தனை மாணவர்களும் உலகம் முழுக்க சிறந்த நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்புகளில் பதவி வகிக்கின்றனர். அதைப் பற்றி பேசும் படம்தான் பள்ளி பருவத்திலே.
பல மாணவர்களை உயர்ந்த பொறுப்புக்கு வழிநடத்தியவர் கிராம பள்ளி தலைமை ஆசிரியர் சாரங்கன். அவரது வாழ்க்கையை மையமாக கொண்டு இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 30 வருடமாக என் மனதில் இழையோடிக்கொண்டிருந்த சம்பவங்களின் தொகுப்புதான் இந்தப் படம். தலைமை ஆசிரியராக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கிறார். நாயகனாக நந்தன்ராம் அறிமுகமாகிறார். இவர் இசை அமைப்பாளர் சிற்பி மகன். நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார்.
இவர் சென்னை கான்வென்ட்டில் படித்தவர். அசல் கிராமத்து மாணவியாக வேடம் ஏற்றிருக்கிறார். தம்பிராமையா, ஊர்வசி, ஆர்.கே.சுரேஷ், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கோலிசோடா பாணியில் யதார்த்தமான ஸ்டண்ட் அமைத்திருக்கிறார் சுப்ரீம் சுந்தர். வைரமுத்து, வாசு கோகிலா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர் என்றார் அவர்.