WELCOME
PROMOTION
வணக்கம் ,
சினிமாத்துறை சார்ந்த செய்திகள், தகவல்கள் மற்றும் நுணுக்கங்களை தெரிந்துகொள்ளவும், திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள், கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம்.

ஃபிலிம்ஸ் ஆப் இந்தியாவில் உறுப்பினராக இணைவதன் மூலம் உங்கள் கருத்துக்களை நேரடியாக படைப்பாளர்களின் பார்வைக்கு கொண்டுசெல்ல முடியும். மேலும் உங்களுடைய சிறந்த பங்களிப்பு மற்றும் உதவியோடு வரும் காலங்களில் சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை ஊக்குவிக்கும் விதமாக "ஃபிலிம்ஸ் ஆப் இந்தியா"வின் உயர்ந்த விருதுகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Films of India இந்த விருதுகள் இந்திய திரைப்படத் துறையில் ஒரு சிறந்த அம்சமாக விளங்குவதற்கு உங்கள் பங்களிப்பே காரணமாக இருக்க முடியும். எனவே இன்றே "ஃபிலிம்ஸ் ஆப் இந்தியா"வில் இணையுங்கள். திரைப்படங்கள் பற்றிய உங்கள் விமர்சனங்களையும், உங்களைக் கவர்ந்த அல்லது நீங்கள் ரசிக்கும் திரைக் கலைஞர்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சினிமாத்துறையை மதிப்பு கூட்டும் இந்த முயற்சியில் நீங்களும் பங்குகொள்ளுங்கள்...

* திரைப்பட விமர்சனங்கள்
* உயர்ந்த சினிமா விருதுகள்
* சினிமா வாய்ப்புகள்
* திரைப்பட விளம்பரங்கள்

இந்த முயற்சியில் பங்கெடுக்கவும், தளத்தில் இணைந்துகொள்ளவும் விரும்புபவர்கள் பின் வரும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

* திரைக்கலைஞர்கள் பற்றி ஒருமையிலோ அல்லது அநாகரீகமாகவோ எழுதுதல் கூடாது.
* சினிமா விமர்சனங்களில் குறைகளை சுட்டிக்காட்டும் உரிமை அனைவருக்கும் உண்டு.
* எந்த ஒரு கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்கக் கூடாது.

இணையும் உறுப்பினர்கள் அனைவரும் சினிமாவை மதிப்பு கூட்டும் முயற்சியில் பங்கெடுக்க வேண்டும்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி. நீங்கள் அனைவரும் இந்த புதிய முயற்சியில் பங்கு பெறுவீர்கள் என்று நம்புகிறோம். மேலும் இந்த அறிவிப்பு குறித்த உங்கள் கருத்துக்களும், ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது...

- Films of India.

CLOSE THIS BOX

Welcome to Films of India:

வணக்கம்
ஃபிலிம்ஸ் ஆப் இந்தியாவில் உறுப்பினராக இணைவதன் மூலம் உங்கள் கருத்துக்களை நேரடியாக படைப்பாளர்களின் பார்வைக்கு கொண்டுசெல்ல முடியும். மேலும் உங்களுடைய சிறந்த பங்களிப்பு மற்றும் உதவியோடு வரும் காலங்களில் சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை ஊக்குவிக்கும் விதமாக "ஃபிலிம்ஸ் ஆப் இந்தியா"வின் உயர்ந்த விருதுகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விருதுகள் இந்திய திரைப்படத் துறையில் ஒரு சிறந்த அம்சமாக விளங்குவதற்கு உங்கள் பங்களிப்பே காரணமாக இருக்க முடியும். எனவே இன்றே "ஃபிலிம்ஸ் ஆப் இந்தியா"வில் இணையுங்கள். திரைப்படங்கள் பற்றிய உங்கள் விமர்சனங்களையும், உங்களைக் கவர்ந்த அல்லது நீங்கள் ரசிக்கும் திரைக் கலைஞர்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இந்த முயற்சியில் பங்கெடுக்கவும், தளத்தில் இணைந்துகொள்ளவும் விரும்புபவர்கள் பின் வரும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

* திரைக்கலைஞர்கள் பற்றி ஒருமையிலோ அல்லது அநாகரீகமாகவோ எழுதுதல் கூடாது.
* சினிமா விமர்சனங்களில் குறைகளை சுட்டிக்காட்டும் உரிமை அனைவருக்கும் உண்டு.
* எந்த ஒரு கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்கக் கூடாது.

இணையும் உறுப்பினர்கள் அனைவரும் சினிமாவை மதிப்பு கூட்டும் முயற்சியில் பங்கெடுக்க வேண்டும்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி. நீங்கள் அனைவரும் இந்த புதிய முயற்சியில் பங்கு பெறுவீர்கள் என்று நம்புகிறோம். மேலும் இந்த அறிவிப்பு குறித்த உங்கள் கருத்துக்களும், ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது...

CLOSE THIS BOX

WELCOME
PROMOTION
Hello ,
Many believe that a browser is a search engine, it is total browser gresit.Un program that access one or more pages internet.Fiecare operating system has a default browser, such as Windows XP is a popular operating system us, many have default browser from him, namely Internet Explorer 6, which is the worst browser on piata.

Digg Foarte many large sites such as youtube.com, begin to withdraw support for him, that was no longer struggling to configure the site to IE6, so we recommend that users encounter dificultati.De to navigate a modern browser (preferably not an IE), we put just above some of the most used browsers in the world.

- Films of India.

CLOSE THIS BOX


LATEST TOPICS

» பள்ளிப் பருவத்திலே - அரசு பள்ளியில் நடக்கும் கதை!
by Selva Kumar

» வெளிவரவிருக்கும் திரைக்கு வராத கதை
by Admin

» கோடான கோடி ரசிகர்களைக் கொண்ட ரஜினி, சிந்துவின் ரசிகரா... நெகிழ்ந்து கண்ணீர் விட்ட தாயார்
by Selva Kumar

» செவாலியே கமலுக்கு குவியும் வாழ்த்துக்கள்
by Selva Kumar

» கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் ‘செவாலியே விருது’ அறிவிப்பு
by Selva Kumar

» 'செவாலியே' பெறும் 2வது நடிகர் கமல்
by Selva Kumar

» கங்கையில் சமாதி ஆகிறேன்.. வேந்தர் மூவிஸ் மதன் கடிதத்தால் பரபரப்பு!!
by Selva Kumar

» ரசிகர்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் - ஸ்ருதிஹாசன்
by Selva Kumar

» ஜாக்கி சான் சட்டையில் "கபாலி".. அடங்காமல் வாலாட்டும் போட்டோஷாப் புலிகள்!
by Selva Kumar

» விஜய் 60: மீண்டும் அழகிய தமிழ் மகனாக மாறும் விஜய்?
by Selva Kumar

» பிரியா மணி - முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம் முடிந்தது!
by Selva Kumar

» இது நம்ம ஆளு- விமர்சனம்
by Selva Kumar

» வட, தென் ஆற்காடு தவிர, சென்னை செங்கல்பட்டு மற்றும் தமிழகமெங்கும் வெளியானது இது நம்ம ஆளு!
by Selva Kumar

» பாபி சிம்ஹாவுக்கு இதே வேலையா போச்சு!
by Selva Kumar

» வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... 7 புதுப் படங்கள் இன்று ஒரே நாளில்!
by Selva Kumar

» 'இது நம்ம ஆளு' ஹிட்டடிக்கும்!
by Selva Kumar

» 'கத்திச்சண்டை'யால் காயம் பட்ட விஷால்... படக்குழுவினர் அதிர்ச்சி!
by Selva Kumar

» 'சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி சும்மா அள்ளுது'... பாராட்டும் ரசிகர்கள்!!
by Selva Kumar

» தென்னிந்திய சினிமா முயற்சிகளுக்கு அமெரிக்கா நல்ல ஆதரவு தருகிறது! - கமல் ஹாஸன்
by Selva Kumar

» அம்மா வேடத்தில் பூமிகா... எம்எஸ் டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி!
by Selva Kumar

» கோடை ஓய்வுக்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த்!
by Selva Kumar

» குமுதாவை மட்டும் அல்லாமல் ரசிகர்களையும் ஹேப்பியா வச்சுக்க வேணாமா அண்ணாச்சி?
by Selva Kumar

» கத்துக்க எளிதான மொழி தமிழ்தான்!- 'தமிழச்சி' தமன்னா புகழாரம்
by Selva Kumar

» நான் ஏன் 2.0-வில் ரஜினியுடன் நடிக்க ஒப்புக்கல தெரியுமா? - கமல் ஹாஸன்
by Selva Kumar

» அரை நூற்றாண்டுகள் தமிழ் சினிமாவை ஆண்ட 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று!
by Selva Kumar

 
 
-Selva Kumar Share this topic

-on April 14th 2017, 18:49
-

பள்ளிப் பருவத்திலே - அரசு பள்ளியில் நடக்கும் கதை!

சென்னை: பள்ளிப் பருவத்திலே திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இது ஒரு கிராமப் பள்ளியின் ஆசிரியர், தன்னிடம் படித்த மாணவர்களை உலகின் தலை சிறந்த மாணவர்களாக உருவாக்கியதைப் பற்றி பேசும் படம் என்று இந்த படத்தின் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் கூறியுள்ளார்.

'பள்ளிப் பருவத்திலே' திரைப்படம் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என அதன் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் கூறியுள்ளார். ஒரு தலைமை ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவர்களை படிப்பிலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்குகிறார்.

அவரிடம் படித்த அத்தனை மாணவர்களும் …


[ Full reading ]

Comments: 0

 
 
-Admin Share this topic

-on October 5th 2016, 19:01
-

வெளிவரவிருக்கும் திரைக்கு வராத கதை

நதியா நடிக்கும் புதிய படத்துக்கு, திரைக்கு வராத கதை என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தை மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் படங்களை இயக்கிய துளசிதாஸ் என்பவர் இயக்குகிறார். இவர் தமிழுக்கு அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.குமார் பாடல்களுக்கு இசையமைக்க ஆரோல் கொரோலி பின்னணி இசையமைக்கிறார்.

Films of India - Sign of Cinema - Portal Thiraikku-varatha-kathai_1475557275190


இப்படத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இப்படத்தில் ஒரேயொரு காட்சியில் கூட ஆண்கள் நடிக்கவில்லை என்பதுதான்.

கதையின் போக்கில் ஏற்படும் சம்பவங்கள் உண்மை சம்பவங்களாக மாறுகிறது. இதன் பின்னணியில் திரில்லர் கதையோட்டத்துடன் சஸ்பென்ஸ், அதிரடி கலந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இம்மாதம் இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Films of India - Sign of Cinema - Portal Thiraikku-varatha-kathai_1475557275200


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on August 21st 2016, 20:41
-

கோடான கோடி ரசிகர்களைக் கொண்ட ரஜினி, சிந்துவின் ரசிகரா... நெகிழ்ந்து கண்ணீர் விட்ட தாயார்

ஹைதராபாத்: கோடான கோடி ரசிகர்களைக் கொண்ட நடிகர் ரஜினி, தன்னை சிந்துவின் ரசிகர் எனக் கூறி இருப்பது தன்னை நெகிழ வைத்து விட்டதாக ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றுள்ள பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவின் தாயார் பெருமையுடன் கூறியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. இவரின் சாதனையை பிரதமர் உட்பட பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில், நடிகர் ரஜினியும் சிந்துவைப் பாராட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், 'சிந்து நான் உங்கள் ரசிகர் …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on August 21st 2016, 20:39
-

செவாலியே கமலுக்கு குவியும் வாழ்த்துக்கள்

சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளதற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கெட்டப்புகளாகட்டும், நடிப்பாகட்டும் வித்தியாசத்தை நாடுபவர் உலக நாயகன் கமல் ஹாஸன். இந்நிலையில் அவருக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளது.

இதையடுத்து ட்விட்டரில் கமலுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on August 21st 2016, 20:20
-

கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் ‘செவாலியே விருது’ அறிவிப்பு

சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் எனப் பலமொழிகளில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் கமல். தமிழில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

ஏற்கனவே, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூசன் மற்றும் மாநில அரசின் கலைமாமணி போன்ற விருதுகளைப் பெற்றவர் கமல். இதுதவிர தேசிய விருது 3 முரையும், 19 முறை பிலிம்பேர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

மிக உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாச்சாரத்துறை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பாற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

முன்னதாக கடந்த 1997ம் ஆண்டு மறைந்த நடிகர் சிவாஜிகணேன் இந்த விருது பெற்றார். தற்போது அவரது கலையுலக வாரிசாகக் கருதப்படும் கமலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

செவாலியே விருது குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து கமலுக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கமல் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on August 21st 2016, 20:18
-

'செவாலியே' பெறும் 2வது நடிகர் கமல்

சென்னை: தமிழ் சினிமாவில் செவாலியே விருது பெறும் இரண்டாவது நடிகர் என்ற பெருமை நடிகர் கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக இந்த உயரிய விருது மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கு கிடைத்தது. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது செவாலியே. சிறந்த நடிப்பாற்றலுக்காக நடிகர் கமல் இந்த விருதுக்கு தற்போது தேர்வாகியுள்ளார்.

இந்தியாவில் இந்த விருதை சினிமா பிரபலங்களான நான்கு பேர் இதுவரை பெற்றுள்ளனர். ஐந்தாவதாக இந்த விருதுப் பட்டியலில் கமல் தற்போது இணைந்துள்ளார். இதேபோல், தமிழில் இந்த விருது கடந்த 1997ம் ஆண்டு மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கு கிடைத்தது. தற்போது அவரது கலையுலக வாரிசான கமலுக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் செவாலியே விருது பெறும் இரண்டாவது நடிகர் என்ற பெருமையையும் கமல் பெற்றுள்ளார்.

இதுவரை செவாலியே விருது பெற்ற இந்திய திரைப்பிரபலங்களின் விபரமாவது:

1987ம் ஆண்டு வங்காளத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே

1997ம் ஆண்டு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

2007ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப்

2014ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான்

2016 ஆண்டு நடிகர் கமல்ஹாசன்



Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 27th 2016, 14:49
-

வட, தென் ஆற்காடு தவிர, சென்னை செங்கல்பட்டு மற்றும் தமிழகமெங்கும் வெளியானது இது நம்ம ஆளு!

சென்னை: வட, தென்னாற்காடு ஏரியாக்களில் இது நம்ம ஆளு படத்தை வெளியிடக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று சென்னை உள்ளிட்ட பிற ஏரியாக்களில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

நீண்ட நாட்களாக கிடப்பிலிருந்த படம் இது நம்ம ஆளு. சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான படம் இது.

Films of India - Sign of Cinema - Portal 25up4z9


பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பல முறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட இந்தப் படம் ஒருவழியாக இன்று வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை திரையிட தடை விதிக்கக் கோரி புரசைவாக்கத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார் லால்வானி …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 27th 2016, 14:41
-

பாபி சிம்ஹாவுக்கு இதே வேலையா போச்சு!

மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாபி சிம்ஹா. சில தினங்களுக்கு முன் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று ஒரு படம் வந்தது. அந்தப் படத்தில் பாபி சிம்ஹாதான் பிரதான வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் தான் அந்தப் படத்தில் நடிக்கவே இல்லை என்றார். பின்னர் அதிக சம்பளம் கேட்டு, அதை தயாரிப்பாளர் தராததால் டப்பிங் பேச வராமல் தகராறு செய்தார் பாபி என்ற உண்மை வெளியில் வந்தது.

அடுத்து இப்போது மீரா ஜாக்கிரதை. இந்த படத்தில், பாபிசிம்ஹா முக்கிய வேடத்தில் நடித்து இருப்பதாக அவரது படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், ‘மீரா ஜாக்கிரதை' படத்தில் நான் …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 27th 2016, 14:36
-

வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... 7 புதுப் படங்கள் இன்று ஒரே நாளில்!

சென்னை: இந்த வெள்ளிக்கிழமை மட்டும் 7 புதிய படங்கள் வெளியாகின்றன.

தேர்தல் பரபரப்பு காலத்தில் தியேட்டர்களுக்கு கூட்டம் வராது என்பதால், பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை திரைக்கு கொண்டு வரும் தேதியை சில வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். விஜய்யின் ‘தெறி,' உதயநிதியின் ‘மனிதன்,' சூர்யாவின் ‘24' ஆகிய படங்கள் மட்டும் தேர்தலுக்கு மத்தியில் வெளியானது. தற்போது தேர்தல் முடிந்ததை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட பல படங்கள் திரைக்கு வருகின்றன. விஷாலின் ‘மருது' படம் ஓட்டு எண்ணிக்கை முடிந்த மறுநாளான கடந்த 20-ந்தேதி வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

‘இது நம்ம ஆளு,' ‘உரியடி,' …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 27th 2016, 14:32
-

'இது நம்ம ஆளு' ஹிட்டடிக்கும்!

சென்னை: சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, ஜெய், சூரி இணைந்து நடித்திருக்கும் இப்படத்துக்கு குறளரசன் இசையமைத்திருக்கிறார்.
பாண்டிராஜ்-டி.ராஜேந்தர் இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்நிலையில் பாக்ஸ் ஆபீஸில் இப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும்.

3 வருடங்கள் கடந்தாலும் கூட சிம்பு-நயன்தாராவின் கெமிஸ்ட்ரியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருவரும் ஏற்கனவே நிஜமான காதலர்கள் என்பது தான் ரசிகர்களின் இந்த அபரிமிதமான …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 27th 2016, 14:29
-

'கத்திச்சண்டை'யால் காயம் பட்ட விஷால்... படக்குழுவினர் அதிர்ச்சி!

சென்னை: 'கத்திச்சண்டை' படத்தின் சண்டைக் காட்சியில் நடித்த விஷாலுக்கு தோள்பட்டையில் அடிபட்டது. எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மருதுவைத் தொடர்ந்து விஷால் தற்போது சுராஜ் இயக்கத்தில் 'கத்திச்சண்டை' படத்தில் நடித்து வருகிறார்.இதில் விஷாலுடன் இணைந்து தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Films of India - Sign of Cinema - Portal 2q2mt86


இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கியபோது விஷாலின் தோள்பட்டையில் அவருக்கு அடிபட்டது. இதனைத் தொடர்ந்து அருகிலிருந்த மருத்துவமனையில் விஷாலுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. காயம் பட்டாலும் கூட படப்பிடிப்பில் விஷால் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

இந்த விபத்து குறித்து விஷால் ''தோள்பட்டையில் அடிபட்டுள்ளது. பெரிய அளவில் காயமில்லை. மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். அடிபட்டும் விஷால் படப்பிடிப்பில் கலந்து கொண்டது படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்றொருபுறம் விஷாலின் மருது, 'ராயுடு' என்ற பெயரில் இன்று தெலுங்கு மொழியிலும் வெளியாகியிருக்கிறது. 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ராயுடுவுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 27th 2016, 14:27
-

'சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி சும்மா அள்ளுது'... பாராட்டும் ரசிகர்கள்!!

சென்னை: ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'இது நம்ம ஆளு' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கம், சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி போன்ற காரணங்களால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. பல்வேறு தடைகளைத் தாண்டி வெளியான இது நம்ம ஆளு ரசிகர்களைக் கவர்ந்ததா? என்று பார்க்கலாம்.

'சண்டைக் காட்சி இல்லாவிட்டாலும் இது நம்ம ஆளு படம் நன்றாக இருக்கிறது. சிம்பு நாயகனாக ஜெயித்து விட்டார்' என்று ராஜேஷ் பாராட்டியிருக்கிறார்.

'சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி சூப்பர். மொத்தத்தில் இது நம்ம ஆளு நன்றாக இருக்கிறது' என விஜேஷ் கூறியிருக்கிறார். 'சிம்பு-சூரி காமெடியும், சுவாரசியமான திரைக்கதையும் சூப்பர்' என ஜோஷ் மனமாரப் பாராட்டியிருக்கிறார்.

'கண்ணாமூச்சி ரே ரே' அஜீத் ரெபரன்ஸ் படத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி மகிழ்ந்திருக்கிறார் அஜித்சதா.

'இது நம்ம ஆளு முதல் பாதி ஜாலியா இருக்கு. குறிப்பா சூரி-சிம்பு காமெடி சூப்பர்' என்று மகிழ்ச்சியுடன் ஹரி திவாகர் கூறியிருக்கிறார். மொத்தத்தில் 'இது நம்ம ஆளு' நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மேலும் பல ரசிகர்களின் பதிவுகளால் #idhunammaaalu ஹெஷ்டேக் தற்போது தேசிய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 27th 2016, 14:25
-

தென்னிந்திய சினிமா முயற்சிகளுக்கு அமெரிக்கா நல்ல ஆதரவு தருகிறது! - கமல் ஹாஸன்

தென்னிந்திய சினிமா கலைஞர்களின் நேர்மையான முயற்சிகளுக்கு அமெரிக்கர்கள் நல்ல ஆதரவு தருவதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல் ஹாசன், ‘சபாஷ் நாயுடு' படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார்.

அங்கிருந்து அவர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், "சபாஷ் நாயுடு' என்ற எங்கள் புதிய திரைப்பட படப்பிடிப்புக்கு நானும், எங்கள் திரைக்குழுவை சேர்ந்தவர்களும் லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து சேர்ந்திருக்கிறோம். எங்களுக்கு மிகுந்த உற்சாகமளிக்கும் இந்த தயாரிப்பின் தொடக்க கட்டங்களே முழுவீச்சில் அமைந்துள்ளன.

திரைத்துறையின் ஏறத்தாழ அனைத்து திரைப்பட …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 17:08
-

அம்மா வேடத்தில் பூமிகா... எம்எஸ் டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி!

மும்பை: 37 வயதான நடிகை பூமிகா சாவ்லா மகேந்திர சிங் டோணியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், டோணிக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். விஜய் நடிப்பில் வெளியான 'பத்ரி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூமிகா சாவ்லா. தொடர்ந்து 'ரோஜாக்கூட்டம்', 'சில்லுன்னு ஒரு காதல்' போன்ற படங்கள் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றன.

Films of India - Sign of Cinema - Portal 2n8swh5


தமிழில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் ஒக்கடு, சிம்ஹத்ரி, குஷி போன்ற வெற்றிப் படங்களினால் தெலுங்கின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

திருமணத்திற்குப் பின் இவரின் மார்க்கெட் சரிந்து விட்டது. இதனால் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் குணச்சித்திர நடிகையாக பூமிகா நடித்து வருகிறார். தற்போது கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்(M.S. Dhoni: The Untold Story), டோணியின் அம்மாவாக பூமிகா நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர், ''இப்படம் எனக்கு நல்ல திருப்புமுனைப் படமாக அமையும்,'' என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

டோணியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை நீரஜ் பாண்டே இயக்கி வருகிறார். இதில் டோணியாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தும், விராட் கோலியாக பவத் கானும், ஜாகீர் கானாக கவுதம் குலாட்டியும் நடித்துள்ளனர். இது தவிர சுரேஷ் ரெய்னா வேடத்தில் ராம் சரணும், டோணியின் நண்பராக ஜான் ஆப்ரகாமும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 16:49
-

கோடை ஓய்வுக்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த்!

சென்னை: கோடை விடுமுறையை ஓய்வில் கழிப்பதற்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
ரஜினி நடிப்பில் இப்போது கபாலி படம் முடிந்துள்ளது. வரும் ஜூலை முதல் வாரம் படம் வெளியாகவிருக்கிறது.

ரஜினி நடித்து வரும் இன்னொரு படம் 2.ஓ. இந்தப் படத்தை ஷங்கர் இயக்குகிறார். இருகட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லியில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Films of India - Sign of Cinema - Portal 2uj2ihg


இந்த நிலையில் கோடை விடுமுறையைக் கழிக்க ரஜினியும் குடும்பத்தினரும் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு இரு வாரங்கள் ஓய்வெடுத்த பிறகு, சென்னை திரும்பும் ரஜினி, கபாலி இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார்.

அதன் பிறகு மீண்டும் 2.0 படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 16:27
-

குமுதாவை மட்டும் அல்லாமல் ரசிகர்களையும் ஹேப்பியா வச்சுக்க வேணாமா அண்ணாச்சி?

காரைக்குடி: மக்கள் செல்வன்.. இது விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய பட்டம். ஆனால் இந்தப் பட்டத்துக்கேற்றார் போல அவர் செயல்படுவதில்லை, மக்களை அதாவது தனது ரசிகர்களை மதிப்பதில்லை என்று புகார் கிளம்பியுள்ளது.

றெக்க என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அவருக்கு இதில் ஜோடி போட்டிருப்பவர் லட்சுமி மேனன். படப்பிடிப்பு காரைக்குடிக்குப் பக்கத்தில் கானாடுகாத்தான் கிராமத்தில் நடந்து வருகிறது.

காரைக்குடிக்கு வந்த சில சுற்றுலாப் பயணிகள் கானாடு காத்தானில் உள்ள கோவிலுக்குப் போயுள்ளனர். அப்போது நடை சாத்தப்பட்டிருந்ததால் என்ன செய்யலாம் …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 16:25
-

கத்துக்க எளிதான மொழி தமிழ்தான்!- 'தமிழச்சி' தமன்னா புகழாரம்

சென்னை: இருக்கும் மொழிகளிலேயே கற்றுக் கொள்ள எளிமையானது தமிழ்தான் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். தனது 16 வயதில் தமிழ் தெரியாமல் கேடி படத்தில் அறிமுகமானவர் தமன்னா. இப்போதோ சொந்தக் குரலில் டப்பிங் பேசும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்.

10 ஆண்டுகளுக்கு மேல் நடித்தும் இன்னும் சொந்தக் குரலில் தமிழ்ப் பேசத் தெரியாத நடிகைகளுக்கு மத்தியில் தமன்னாவின் தமிழ்ப் பற்று வியக்க வைத்துள்ளது.

Films of India - Sign of Cinema - Portal 14295qd


எது செய்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என நினைப்பேன். அப்படித்தான் இது நடந்தது. நான் தமிழ் பேசுவதை கண்டு பலர் ஆச்சரியமாக கேட்டிருக்கிறார்கள். பரவசத்துடன் பார்த்தவர்களும் உண்டு.

தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும் போது, நிச்சயம் ஒரு நாள் தமிழில் பேச வேண்டும் என எண்ணினேன். அதற்கான பயிற்சிகளை தினம் தினம் எடுத்து வந்தேன். அதனால்தான் இந்தளவுக்கு என்னால் பேச முடிகிறது.

என்னைப் பொருத்தவரை எளிதில் கற்றுக் கொள்ள கூடிய மொழி தமிழ்தான். இது நான் உணர்ந்தது. மற்றவர்களும் உணர்ந்தால் தமிழில் பேசலாம்.

இப்போது மலையாளம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என தென்னகத்து மொழிகளில் பேசுவது எனக்கு கை வந்த கலை.

Films of India - Sign of Cinema - Portal Akang0


கிளாமர், நடனம் என்று மட்டுமே ஆடுவது ஹீரோயினின் வேலையாக இருக்க முடியாது. டப்பிங் பேசினால் அதில் ஒரு பூரணம் கிடைக்கும். அதனால்தான் இந்த முயற்சி".


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 16:18
-

நான் ஏன் 2.0-வில் ரஜினியுடன் நடிக்க ஒப்புக்கல தெரியுமா? - கமல் ஹாஸன்

சென்னை: 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக என்னிடம் நடிக்கக் கேட்டது உண்மைதான். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அதற்கு காரணம் இருக்கிறது என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன். இந்தியாவின் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் என்ற சிறப்போடு ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வருகிறது 2.0.

பெரும் வெற்றிப் பெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் இது. எந்திரன் பெயரைப் பயன்படுத்தாமல் 2.0 என்ற புதுத் தலைப்பைச் சூட்டியுள்ளார் ஷங்கர்.

இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பணம், லொகேஷன்கள் என எதிலும் சமரசமில்லாமல், ஷங்கர் கேட்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து படத்தை எடுத்து …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 16:11
-

அரை நூற்றாண்டுகள் தமிழ் சினிமாவை ஆண்ட 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று!

சென்னை: 50 ஆண்டுகள் தமிழ் சினிமாவை ஆண்ட ஆச்சி மனோரமாவின் 78 வது பிறந்தநாளில், அவர் குறித்த சில விவரங்களை நினைவு கூறலாம்.

நாடக நடிகை, காமெடி நடிகை, பாடகி, வில்லி, தயாரிப்பாளர் என்று பன்முகங்கள் கொண்டவர்.

Films of India - Sign of Cinema - Portal I1hc2b


தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் 1500க்கும் அதிகமான படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

5 முதல்வர்களுடன் சேர்ந்து நடித்தவர், 5 தலைமுறையினரை தனது நடிப்பால் மகிழ்வித்தவர் என்ற பெருமை இவருக்குண்டு.

4 தலைமுறை நடிக, நடிகையருடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

நடிகையாக அறிமுகமான முதல் படம் மாலையிட்ட மங்கை. …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 16:10
-

கபாலி ஷூட்டிங்கில் என்னை வரவேற்க காத்திருந்தார் ரஜினி!- ராதிகா ஆப்தே

சென்னை: கபாலி படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் பங்கேற்க வந்த தன்னை வரவேற்பதற்காக கேரவன் வாயிலில் காத்திருந்தார் ரஜினி என்று கூறியுள்ளார் ராதிகா ஆப்தே. கபாலி படத்தில் ரஜினிக்கு நாயகியாக நடித்துள்ள ராதிகா ஆப்தே, தனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், "ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டார் பற்றி எல்லாரும் நிறைய சொல்லிக் கேட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன். ஆனால் அந்த மனிதருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்பேன்.

Films of India - Sign of Cinema - Portal Ibdjpz


இப்படி ஒரு நடிகரை, மனிதரை, அற்புதமான மனிதாபிமானியை நான் எங்கும் பார்த்ததில்லை. என் வாழ்க்கையில் இப்படி ஒருவரை இனியும் பார்ப்பேனா என்று தெரியவில்லை.

எளிமை என்பதற்கு அர்த்தத்தை அவரைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நான் ஒன்றும் பெரிய நடிகை இல்லை. தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு இடம் கூட இல்லை.

ஆனால் கபாலி முதல் நாள் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள நான் சென்றபோது, என்னை வரவேற்க சூப்பர் ஸ்டார் ரஜினி சார் கேரவனுக்கு வெளியில் காத்திருந்தார். எனக்கு நடுக்கமாகிவிட்டது. அவரோ நான் இயல்பு நிலைக்கு வரும் வரை காத்திருந்து, நடிக்கச் சொன்னார். அதான் சூப்பர் ஸ்டார்!

நான் இதுவரை பார்த்த ரஜினி படங்களிலிலிருந்து வேறு லெவலில் இருக்கும் கபாலி. ரஜினி புதுப் பரிமாணம் காட்டியுள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரும் விருந்தாக இருக்கும்," என்று கூறியுள்ளார்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 16:08
-

பெண்களைப் பெருமைப்படுத்தும் இது நம்ம ஆளு!- சிம்பு

சென்னை: காதலின் சிறப்பு மட்டுமின்றி, பெண்களை மகிமைப்படுத்தும் வகையிலும் இருக்கும் இது நம்ம ஆளு திரைப்படம், என்கிறார் சிலம்பரசன்.

சர்ச்சை நாயகன் சிம்பு நடிப்பில், வருமா வராதா என்று கேள்வியுடன் இன்னும் பெட்டிக்குள் இருக்கும் படம் இது நம்ம ஆளு. கடைசியா மே 27 ரிலீஸ் தேதி என்று அறிவித்துள்ளனர்.

இந்தப் படம் குறித்து சிம்பு தந்துள்ள பேட்டி இது: 'இது நம்ம ஆளு' போன்ற உணர்ச்சிகரமான காதல் கதையில் நான் பயணித்தது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு முழு காரணாமாக செயல்பட்டு, பல கடினமான தருணங்களில் பொறுமையைக் கையாண்ட இயக்குநர் பாண்டிராஜுக்கு எனது நன்றிகளை …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 16:01
-

'இது நம்ம ஆளு'வில் ஓபனிங் பாடல் இல்லாமல் நடித்தது புதிய அனுபவம் - சிம்பு

சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில் உருவாகியிருக்கும் 'இது நம்ம ஆளு' நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. டி.ராஜேந்தர்-பாண்டிராஜ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைத்துள்ளார்.

பல்வேறு தடைகளைத் தாண்டி 'இது நம்ம ஆளு' நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. காதல் முறிவிற்குப் பின் சிம்பு-நயன்தாரா முதன்முறையாக இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். பாண்டிராஜின் முதல் நகரத்துக் காதல் கதையாக 'இது நம்ம ஆளு' உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்த சில விஷயங்களை நடிகர் சிம்பு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படம் குறித்து …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 15:49
-

பாலாவின் அடுத்த படம் எப்போ? விஷால் தகவல்!

பாலாவின் அடுத்த படம் வரும் ஜனவரி 2017-ல் ஆரம்பமாகிறது என்று அதில் நடிக்கும் நாயகர்களில் ஒருவரான விஷால் தெரிவித்துள்ளார். தாரை தப்பட்டைக்குப் பிறகு பாலா இயக்கும் புதிய படம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால் எதுவும் அதிகாரப்பூர்வமானதாக இல்லை.

இந்த நிலையில் இந்தப் படம் குறித்து சில தகவல்களைத் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். இந்தப் படத்தில் நடிக்கும் நாயகர்களில் இவரும் ஒருவர். இவருடன் அதர்வா, அர்விந்த்சாமி, ராணா டக்குபதி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்போது கத்திச் சண்டை படத்தில் நடித்து வரும் விஷால், இந்தப் படம் முடிந்த பிறகு ஒரு ரீமேக் படத்தில் நடிக்கிறார். அதன் பிறகு தனது முழு கால்ஷீட்டையும் பாலாவுக்குத் தந்திருக்கிறாராம்.

இந்தப் படம் ஜனவரி 2017-ல் தொடங்குகிறதாம்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 13:03
-

பேஸ்புக்கில் தகவல் சொல்லி விட்டு தற்கொலை செய்து கொண்ட மாடல் அழகி!

டாக்கா: வங்கதேசத்தில் காதல் விவகாரத்தில் விரக்கி அடைந்த மாடல் அழகி ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக பேஸ்புக்கில் பதிவு போட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சபிரா ஹுசைன் (21) என்பவர் மாடலிங், நிகழ்ச்சி தொகுப்பாளர், மார்கெட்டிங் என பல்வேறு வேலைகள் செய்துவருகிறார். அவர் பல்வேறு விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் தான் தற்கொலை செய்யப்போவதாக கூறி வீடியோ ஒன்றை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

Films of India - Sign of Cinema - Portal 3304w8h


அதில் ஒருவேளை நான் தற்கொலை செய்துகொண்டால், எனது தற்கொலைக்கு காரணம் தனது காதலன் நிர்ஜார் தான் என தெரிவித்துள்ளார். சபிரா ஹுசைன், காதலன் நிர்ஜார் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென சபிரா ஹுசைனை திருமணம் செய்ய அவரது காதலர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சபிரா ஹுசன் தனது அபார்ட்மென்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், அபார்ட்மன்டில் இருந்து சபிரா ஹுசனின் உடலை போலீசார் மீட்டனர். இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 12:59
-

அரவிந்த்சாமி பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

தளபதியில் பூத்த ஆண் ரோஜா என்றே கூறலாம் அரவிந்த்சாமியை. ஆண்களே பொறாமைப்படும் அளவிற்கு என்றால் பெண்கள் பற்றி கூறவா வேண்டும். சிவந்த நிறம், அழகு தோற்றம், மணி ரத்னம் அறிமுகப்படுத்திய நவரத்தினம் அரவிந்த்சாமி, காதல், காமெடியில் தூள் கிளப்பி திரை துறையில் தனக்கான ஓர் தனி ரசிகைகள் கூட்டமே வைத்திருந்தார்.

ஆனால், அப்படியிருந்தும் திடீரென திரையுலகில் இருந்து விலகி வேறு துறையில் கால் பதித்து அதிலும் வெற்றிபெற்றார். சில காலம் அரவிந்த்சாமி என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்து. விபத்துள்ளாகி கவலைக்கிடமாவும் இருந்தார் அரவிந்த்சாமி. மிக குறுகிய நட்பு வட்டார …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 12:53
-

எனக்குப் போட்டியே ரஜினிதாங்க.. சொல்வது "சூப்பர் பவர்" சீனி!

சென்னை: எனக்குப் போட்டியே ரஜினிதான் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார். 'வாங்க வாங்க' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் அப்புக்குட்டி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் சீனிவாசன் பேசும்போது ''சினிமாவில் முன்பெல்லாம் சில்க்கை அதிகமாக கூப்பிட்டார்கள்.இப்போது என்னை அதிகமாக கூப்பிடுகிறார்கள். இதனால் நான் ஆம்பள சில்க்கா இல்லை பொம்பள சில்க்கா என்று எனக்கே தெரியவில்லை. இன்று நான் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நான் பட்ட கஷ்டங்கள் தான். இப்போது எனக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Films of India - Sign of Cinema - Portal 28l8bc2


இதனைப் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இதனால் சினிமாவிற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றுகிறது. சினிமாவில் எனக்குப் போட்டியாக நான் கருதுவது ரஜினியைத் தான். ரஜினி இன்று இந்த நிலையில் இருக்க அவர் பட்ட கஷ்டங்களே காரணம் என்பது எனக்குத் தெரியும். அவர் போலவே நானும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்'' என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான சீனிவாசன் சமீபத்தில் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 12:37
-

முத்தின கத்திரிக்காயில் இரட்டை அர்த்த வசனங்களா?

சுந்தர் சி படங்கள் என்றாலே குடும்பத்தோடு போய் வாய்விட்டுச் சிரிக்கலாம் என்பார்கள். ஆனால் அவர் அடுத்து நடிக்கும் முத்துன கத்திரிக்காய் படத்தில் ஆபாச வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக ஒரு செய்தி கசிந்தது. விஷயத்தை படத்தின் இயக்குநர் வெங்கட் ராகவனிடம் சொல்லி, 'மெய்யாலுமா?' என்றால், 'அக்மார்க் பொய்' என்றார்.

Films of India - Sign of Cinema - Portal Jaid4y


"இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவைப் பொழுதுபோக்குப் படம். யாரும் முகம் சுழிக்காத வகையில் காமெடிக் காட்சிகளை அமைத்துள்ளோம். தற்போது பேய்க் கதைகள், போலீஸ் கதைகள், காதல் கதைகள் என எல்லா வகையான படங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.



[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 12:32
-

கவுண்டமணியின் காலத்தால் அழியாத வசனங்கள்!

சென்னை: நகைச்சுவையின் மன்னர் என்று அழைக்கப்படும் நடிகர் கவுண்டமணி இன்று தனது 77 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதனை முன்னிட்டு தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் அவரின் நகைச்சுவை வசனங்களிலிருந்து ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.

'நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும் .. நாம ரெண்டு பேரு யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்...

'பத்த வச்சிட்டியே பரட்டை..'

'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..'

*"ஏன்டா, எவன கேட்டாலும் மலேசியாவுல இருந்து காசு வருது, …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 12:29
-

கல்விச் சேவையில் நடிகர் சங்கம். 2 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றது!

சென்னை: மறைந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் 2 மாணவர்களின் கல்விச்செலவை நடிகர் சங்கம் ஏற்றுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘மறைந்த திரைப்பட மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் இரண்டு மாணவர்களின் கல்விச்செலவை நடிகர் சங்கம் ஏற்றுக்கொண்டது' எனத் தெரிவித்தார். அதோடு, இந்த சந்திப்பின் போது, ‘எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடவிருக்கிறோம். நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவிற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை அழைக்கவிருக்கிறோம்''என்றார்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 12:26
-

சினிமாவைக் காப்பாத்த உதவி பண்ணுங்க! - விஷால்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அதன் பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் தனியார் பேருந்து (ஆம்னி பஸ்) உரிமையாளர்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் மூலமாக வேண்டுகோள் கடிதம் ஒன்று விடுத்துள்ளார்.
அதில், "பல கோடி முதலீடு செய்து தயாரிக்கப்படும் திரைப்படம் தியேட்டரில் ரசிகர்கள் ரசித்தால் மட்டுமே போட்ட முதலீட்டை திரும்ப எடுக்க முடியும்! இதில் தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் திருட்டு விசிடி ஆகியவற்றின் பாதிப்புகளை மீறி வெற்றி பெற போராட வேண்டிய நிலை, இது திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினர்களுக்கும் சவாலாக உள்ளது.

Films of India - Sign of Cinema - Portal 34ihbm8


இந்நிலையில் தனியார் பேருந்துகளில் சட்டவிரோதமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது சமீபகாலங்களில் சர்வ சாதாரணமாகி விட்டது. அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களை மீறிப் பேருந்தை ஓட்டுவதும், பயண சீட்டு எடுக்காமல் பயணம் செய்வதும் எப்படி சட்டவி ரோதமானதோ, அது போலவே திருட்டு விசிடியை பஸ்களில் ஒளிபரப்புவதும் சட்ட விரோதமானதே!

அதனால், திரை உலகை காப்பாற்ற நாங்கள் பல நிலைகளில் போராடி வருகிறோம். அதற்காக தமிழகமெங்கும் எங்கள் நடிகர்களின் ரசிகர் மன்றங்களின் மூலமாக பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை தங்கள் கவனத்தை மீறி ஓட்டுநர்களால் இந்த தவறு நடந்திருந்தால் இனிமேல் இது நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம். இதற்கு தங்களுடைய முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 12:25
-

'ஆல் இன் அழகுராஜா' கவுண்டமணி பிறந்த நாள்... ரசிகர்கள் வாழ்த்து மழை!

சென்னை: காமெடி கிங், மகான், ஆல் இன் ஆல் அழகுராஜா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நகைச்சுவை நாயகன் கவுண்டமணி இன்று தனது 77 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
கவுண்டமணி பேசிய பல வசனங்கள் காலம் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில் கவுண்டமணியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் #hbdgoundamani என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் தாண்டி வேறு மொழியில் நடிக்காத கவுண்டமணியின் பிறந்த நாள் இன்று தேசிய அளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 12:22
-

பத்தாவது படம்... விஷ்ணு விஷால், சத்யா

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்.... இது எழில் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படம். பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்க, எழில் மாறன் புரோடெக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இந்தப் படத்தின் அறிமுக செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் நாயகன் விஷ்ணு விஷால், நாயகி நிக்கி கல்ராணி, இயக்குநர் எழில், நடிகர் சூரி, ரவி மரியா, இசையமைப்பாளர் சி சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் எழில் மாறன் பேசியது, "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் எனக்கும் நாயகன் விஷ்ணு விஷாலுக்கும், இசையமைப்பாளர் சத்யாவிற்கும் 10 ஆவது …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 12:19
-

பணமழையில் நனையப் போகும் பிரியங்கா சோப்ரா! 40 நாட்களில் 100 கோடி..

மும்பை: விளம்பரங்களின் மூலமாக 40 நாட்களில் 100 கோடிகளை நடிகை பிரியங்கா சோப்ரா சம்பாதிக்கவிருக்கிறார். ஹாலிவுட் சென்றபிறகு பிரியங்கா சோப்ராவின் மதிப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது. குவாண்டிகோ சீரியலைத் தொடர்ந்து பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 24 விளம்பரப்படங்களில் பிரியங்கா சோப்ரா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.இதற்காக தொடர்ந்து 40 நாட்களை அவர் ஒதுக்கியிருக்கிறார். இந்த விளம்பரப் படங்களின் மூலம் பிரியங்காவிற்கு வரும் வருமானம் சுமார் 100 கோடிகள் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் குறுகிய நாட்களில் 100 கோடிகளுக்கு அதிபதியாக பிரியங்கா மாறப் போகிறார்.

ஹாலிவுட் சீரியல்+ பட வாய்ப்புகள், ஆஸ்கர் விழா, ஒபாமா விருந்து போன்ற காரணங்களால் பிரியங்கா சோப்ராவின் புகழ் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு விளம்பரக் கம்பெனிகளும் பிரியங்காவை தங்களின் விளம்பரத் தூதுவராக நியமிக்க போட்டிபோட்டு வருகின்றன.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 12:18
-

சபாஷ் நாயுடுவுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டார் கமல் ஹாஸன்!

சென்னை: சபாஷ் நாயுடு படப்பிடிப்புக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் புறப்பட்டார் கமல் ஹாஸன்.
தூங்காவனம் படத்துக்குப் பிறகு கமல் ஹாஸன் நடிக்கும் புதிய படம் சபாஷ் நாயுடு. தசாவதாரம் படத்தில் வரும் பல்ராம் நாயுடு பாத்திரத்தை விரிவாக்கி கமல் உருவாக்கியுள்ள திரைக்கதை இது.

இந்தப் படத்தில் கமலுடன் அவர் மகள் ஸ்ருதி முதல் முறையாக இணைந்து நடிக்கிறார். பிரமானந்தம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படம் முழுக்க கமலுடன் பயணிக்கும் பாத்திரம் அவருக்கு.

கடந்த மே 14-ம் தேதியே கமல் ஹாஸன் தன் குழுவினருடன் அமெரிக்கா செல்லவிருந்தார். ஆனால் தேர்தல் காரணமாக தனது பயணத்தைத் தள்ளி வைத்தார்.

அந்த இடைவெளியில் படக்குழுவினருடன் திரைக்கதை வாசிப்பு முகாமில் ஈடுபட்டார். ஸ்ருதிஹாஸன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். படத்தின் திரைக்கதையை ஒருவருக்கொருவர் படித்துக் காட்டிக் கொள்வதுதான் இந்த முகாமின் நோக்கம்.

இப்போது அனைத்து முன் தயாரிப்பு வேலைகளும் முடிந்துவிட்டதால், படப்பிடிப்புக்காக திங்கள்கிழமை இரவு லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டனர்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகிறது. நேரடிப் படம் என்பதால் மூன்று மொழிகளுக்கும் மூன்று ஸ்க்ரிப்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கமல் கூறுகையில், மூன்று ஸ்க்ரிப்டுகள் தயார். மூன்றையும் எடுத்துக் கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டுவிட்டோம். இதற்கு மேல் தாமதம் செய்தால் அமெரிக்க படப்பிடிப்பு திட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுவிடும்," என்றார்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 12:14
-

அப்பா, தம்பியுடன் இணைந்து நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்- சூர்யா

சென்னை: தந்தை சிவகுமார் தம்பி கார்த்தியுடன் சேர்ந்து நடிக்கக் காத்திருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார். சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான '24' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து 'எஸ்3' படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

இந்நிலையில் தம்பி கார்த்தி, தந்தை சிவகுமாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக்காக நான் காத்திருக்கிறேன் என்று சூர்யா கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் ''ஏற்கனவே 'மனம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நாங்கள் மூவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.ஆனால் ஒரு ரீமேக் படத்தில் நடிப்பதை விட புதிய கதையில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

Films of India - Sign of Cinema - Portal 1rdctc


ஏனெனில் நாங்கள் மூவரும் இணைந்து நடிக்கும் படம் எனது வாழ்வில் மறக்க முடியாத படமாக இருக்கும்'' என்று கூறியிருக்கிறார். 'சிங்கம்', 'சிங்கம் 2' வெற்றியைத் தொடர்ந்து அதன் 3 வது பாகமான 'எஸ் 3' படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.இதனைத் தொடர்ந்து 'கபாலி' ரஞ்சித்தின் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 12:12
-

ஒரு லட்சம் புதுப்பட டிவிடிகள் பறிமுதல்... நடிகர் சங்கத்தின் வேட்டை!

சென்னை: நடிகர் சங்கத்தின் தீவிர திருட்டு வீடியோ வேட்டையில் ஒரே நாளில் ஒரு லட்சம் திருட்டு டிவிடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷால் புகாரின் பேரில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் திருட்டு டிவிடி விற்கப்படும் கடையை போலீசார் நேற்று சோதனை செய்தனர்.

அக்கடையில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வீடியோ பைரசி கண்காணிப்பாளர் ஜெயலக்ஷ்மி ஐ.பி.எஸ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் மதுரையில் உள்ள பாலரங்கபுரம் என்னும் பகுதியில் உள்ள குடோனில் இந்த கும்பலை போலீசார் பிடித்தனர். அத்துடன் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள கணினி இயந்திரங்களும் மற்றும் புதிய படங்களை பதிவு செய்துள்ள டிவிடிகளைும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் ஒரு குடோனில் 20 பேர் திருட்டு டி.வி.டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இங்கிருந்துதான் தர்மபுரி , சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பத்து மாவட்டத்துக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் கிடைத்து. இதுகுறித்து விஷால் மற்றும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் புகாரின் அடிப்படையில் அங்குள்ள திருட்டு டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் கிச்சாபாளையம் பகுதில் இயங்கி வந்த திருட்டு டி.வி.டி தயாரிக்கும் இடமும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 12:10
-

என் கல்யாணம் பத்தி நானே சொல்றேங்க!- சமந்தா

சென்னை: எனது திருமணம் எப்போது, யாருடன் என்பதையெல்லாம் நானே சொல்கிறேன். அவசரப்படாதீர்கள் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
முன்னணி நடிகையான சமந்தா பற்றி கடந்த சில தினங்களாக தொடர்ந்து சர்ச்சை செய்திகள் வலம் வருகின்றன.

அவர் சினிமாவிலிருந்து விலகப் போவதாகவும், விரைவில் திருமணம் நடக்கப் போவதாகவும் சிலர் செய்தி வெளியிட்டிருந்தனர். ஒரு இளம் நாயகனைக் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்று சமந்தாவே பேட்டி கொடுத்ததாக ஒரு நாளிதழ் தெரிவித்ததுதான் லேட்டஸ்ட்.

இந்த செய்திகளுக்கு ஒவ்வொரு முறையும் சமந்தா மறுப்பு தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது. அவர் மறுப்பு தெரிவித்த அடுத்த நாள் வேறொரு வதந்தி கிளம்பும்.

இந்த திருமண வதந்திக்கும் சமந்தா ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், "நானாக சொல்லும் முன் என் திருமணம் குறித்துப் பேச வேண்டாம். நான் நான் நான் சமந்தாவாகிய நானே சொல்கிறேன். நன்றி," எனக் குறிப்பிட்டுள்ளார்.

Films of India - Sign of Cinema - Portal 653juo


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 12:07
-

தல 58: மீண்டும் இணையும் 'மிரட்டல்' கூட்டணி?

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ்-அஜீத் கூட்டணி மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜீத்தின் 'தீனா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.
2 வது முறையாக இருவரும் இணையவிருந்த 'மிரட்டல்' ஒருசில காரணங்களால் கைவிடப்பட்டது.இந்நிலையில் மீண்டும் இருவரும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜீத்-சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான இப்படம் அஜீத் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அஜீத்திற்கு முதன்முதலில் தல என்ற அடையாளத்தைக் கொடுத்தவர் என்ற பெருமையும் முருகதாஸுக்கு உண்டு.

தீனாவைத் தொடர்ந்து மிரட்டல் என்ற …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 11:17
-

'கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு'.. கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷல்!

சென்னை: சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி இன்று தன்னுடைய 39 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதனையொட்டி திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலமாக அவரை வாழ்த்தி வருகின்றனர்.

கார்த்திக்கு மெக்ஸிகன் உணவு வகைகள் என்றால் கொள்ளைப் பிரியமாம். அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட ரெஸ்ட்ரெண்டில் கிடைக்கும் இவ்வகை உணவுகளின் ருசி வேறெங்கும் வராது என்று நண்பர்களிடம் ரசித்துச் சொல்வார்.

நிறங்களில் கருப்பு, வெள்ளை, ஊதா போன்ற 3 நிறங்களும் கார்த்திக்கு மிகவும் பிடித்தவை. கார்த்தியின் பெரும்பாலான உடைகள் இந்த நிறங்களின் அடிப்படையில் தான் அமைந்திருக்கும்.

ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது கார்த்தியின் வழக்கம்.

இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் கார்த்தி முதன்முதலாக வாங்கிய சம்பளம் 5௦௦௦ ரூபாய்.

நடிகராவதற்கு முன் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவும், அமெரிக்காவில் பார்ட் டைம் கிராபிக் டிசைனராகவும் வேலை பார்த்திருக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் கார்த்தியை ரசிகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்தலாம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி...


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 11:11
-

மலாய் மக்களைக் கவர்ந்த ரஜினியின் கபாலி மலாய் டீசர்!

கபாலி படத்தின் மலாய் மொழி டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரஜினி நடிப்பில் இதுவரை வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்பு கபாலிக்கு ஏற்பட்டுள்ளது. ரஜினியின் முந்தைய படங்கள் கோச்சடையான், லிங்கா இரண்டுமே பெரும் சர்ச்சைகளைச் சந்தித்தன. வணிக ரீதியில் சரியாகப் போகவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில், கபாலி உருவானது.

இந்தப் படத்தில் முற்றிலும் வித்தியாசமான கூட்டணி அமைந்திருப்பதால், படத்துக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. அதை மேலும் அதிகரித்துவிட்டது, சமீபத்தில் வெளியான கபாலி டீசர். 2 கோடி பார்வைகளைப் பெற்று இந்த டீசர் சர்வதேச அளவில் பிரபலமாகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து கபாலியின் மலாய் மொழி டீசரை வெளியிட்டுள்ளனர். இந்த டீசருக்கு மலேசிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் முறையாக மலாய் மொழியில் டப் செய்யப்பட்ட இந்தியப் படம் என்ற பெருமை கபாலிக்கு கிடைத்துள்ளது. இந்தப் படம் மலேசியாவில் ஏராளமான திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 11:10
-

"கவுண்ட்டர் கிங்" கவுண்டமணி..!

ப்ப்பா.... நின்னா கவுண்டரு, உக்கார்ந்தா கவுண்டரு.... இந்த கவுண்டரு அடிக்கிறதையும், களாய்க்கிறதையும் யாருதான் கண்டுபிடிச்சா...? எப்படி யோசிச்சாலும், நம்ம தமிழ் சினிமாவிற்கு கிடைச்ச கவுண்டமணிக்கு நிகரான ஒரு பொக்கிசத்த யாரும் மறுபடியும் கொண்டு வர முடியாது. அந்தப் பெருமை படைத்த கவுண்டமணிக்கு இன்று பிறந்த நாள்.
1970-ம் ஆண்டு திரையுலகில் கால் பதித்த இவரை இன்று வரை இந்த திரையுலகமே கொண்டாடுகின்றது. இன்றைக்கும் என்றைக்கும் அவருக்கு நிகர் அவரே..
இன்று அவரது பிறந்தநாளினை ஒட்டி அவரை பற்றிய ஒரு சில நீங்கா நினைவுகள், தருணங்கள் மற்றும் ஒருசில சுவாரஸ்யமான தகவல்களையும் …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 11:07
-

'இன்று நேற்று நாளை' ரவிக்குமாருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?

சென்னை: 'இன்று நேற்று நாளை' புகழ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ரஜினிமுருகன்' ஹிட்டுக்குப் பின் 'ரெமோ' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் பொன்ராம், ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்தடுத்து இவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த 2 படங்களையும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கப் போவதாக கூறப்படுகிறது. 'இன்று நேற்று நாளை' படத்தின் முதல் பாகத்தில் ஆர்யா ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

இதனால் அப்படத்தின் 2 வது பாகத்தில் ஆர்யா நாயகனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.தற்போது சிவகார்த்திகேயனை ரவிக்குமார் இயக்கப் போவதாக கூறுகின்றனர். மற்றொருபுறம் பொன்ராம்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. இதனால் 3 வது முறையாக இவர்கள் இணையும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 11:06
-

முதன்முறையாக விஜய்யுடன் இணையும் ஜெயம் ரவி

சென்னை: ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பது உறுதியாகியுள்ளது. கடந்த ஆண்டில் ஹாட்ரிக் ஹிட்டடித்த ஜெயம் ரவி தற்போது, 'போகன்' படத்தில் அரவிந்த் சாமி-ஹன்சிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் சக்தி சவுந்தர் ராஜன், மோகன் ராஜா இயக்கத்திலும் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார்.

அஜீத்-திரிஷா நடித்த கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஜய். கிரீடத்தில் விஜய் முத்திரை பதிக்கவில்லை எனினும் 'மதரசாப்பட்டினம்', 'தெய்வத் திருமகள்' ஆகியவை இவருக்கு சொல்லிக் கொள்ளும் படங்களாக அமைந்தன. வெற்றி, தோல்வி என மாறிமாறி பயணிக்கும் விஜய் …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 11:05
-

நல்ல கதை அமைந்தால் நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பேன் - சிம்பு

'வல்லவன்' படத்தில் முதன்முறையாக ஜோடி சேர்ந்த சிம்பு-நயன்தாரா இருவரும் படம் முடிவதற்குள் காதலர்களாக மாறினார்கள். எதிர்பாராதவிதமாக அந்தக் காதல் முறிந்து போனது. தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பின் இருவரும் இணைந்து நடித்திருக்கும் 'இது நம்ம ஆளு' விரைவில் திரைக்கு வரவுள்ளது.

பல்வேறு காரணங்களால் தள்ளிப் போன 'இது நம்ம ஆளு' வருகின்ற 27ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நல்ல படம் அமைந்தால் மீண்டும் நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து சிம்பு ''சண்டையே இல்லாமல் நான் நடித்த முதல் படம் 'இது நம்ம ஆளு'.

பொருத்தமான கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் நானும், நயன்தாராவும் மீண்டும் சேர்ந்து நடிப்போம். இது நம்ம ஆளு படம் தள்ளிப் போனதால் தான் ஒரு பாடலுக்கு நயன்தாராவால் ஆட முடியவில்லை. இதனால் எனக்கும் அவருக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.

'இது நம்ம ஆளு' படம் தாமதமானதற்கு யாரையும் காரணம் என்று சொல்ல முடியாது. பொதுவாக படம் நன்றாக வந்திருக்கிறது. அந்த வகையில் படக்குழுவில் உள்ள அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்.

எனக்குத் திருமணம் நடப்பது என்னுடைய கையில் இல்லை. அதனை கடவுள் பார்த்துக் கொள்வார். எப்போது திருமணம் நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அப்போது கண்டிப்பாக நடக்கும்'' என்று கூறியிருக்கிறார். இது சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி நடித்திருக்கும் 'இது நம்ம ஆளு' வருகின்ற 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 26th 2016, 11:03
-

தயாரிப்பாளராகிறார் நயன்தாரா...

சென்னை: தென்னிந்தியாவின் முதல் நிலை நாயகியாகத் திகழும் நயன்தாரா, அடுத்து சொந்தப் படம் ஒன்றை தமிழில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் நயன்தாராவைச் சந்தித்த உதவி இயக்குநர் ஒருவர் சொன்ன கதை நயன்தாராவுக்குப் பிடித்துப் போனதால், அந்தக் கதையில் தானே நடித்து தயாரிக்க முடிவு செய்துவிட்டாராம்.

கதைப்படி மாவட்ட ஆட்சியர் வேடமாம் அவருக்கு. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் 4 படங்கள் நடித்து வரும் நயன்தாரா, இந்தப் படங்களை முடித்ததும் தன் சொந்தப் படத்தில் நடிக்கப் போகிறாராம். முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜெகன், இப்படத்தை இயக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் பின்னர் பெரும் சிக்கலுக்குள்ளானது சொந்தப் படம் தயாரித்ததால்தான்.

நயன்தாரா சூதானமா இருந்தா சரி!


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 16th 2016, 17:49
-

மீண்டும் தள்ளிப் போனது 'இது நம்ம ஆளு'

சென்னை: சிம்பு-நயன்தாராவின் 'இது நம்ம ஆளு 'வெளியீட்டுத் தேதி மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது. பாண்டிராஜின் பசங்க புரொடக்ஷன்ஸ் மற்றும் டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'இது நம்ம ஆளு'. 3 வருடமானாலும் சிம்பு-நயனின் கெமிஸ்ட்ரிக்காக துளியும் ஆர்வம் குறையாமல் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் மே 20ம் தேதி இது நம்ம ஆளு' படம் வெளியாகும் என இயக்குநர் பாண்டிராஜ் அறிவித்தார்.

இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் நாம் எதிர்பார்த்திருந்த அந்த வரலாற்றுத் தினம் வந்தே விட்டது என சந்தோஷத்தில் திளைக்க ஆரம்பித்தனர். விஷாலின் 'மருது'வுடன், 'இது நம்ம ஆளு' மோதும் என உறுதியாக படக்குழு சார்பில் அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 'இது நம்ம ஆளு' தள்ளிப் போயிருக்கிறது. தற்போது வந்த தகவலின்படி மே 27ம் தேதி இப்படம் வெளியாகும் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதவிர தமிழக அரசின் வரிச்சலுகையும் இப்படத்திற்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் தள்ளிப்போன காரணம் விஷாலின் 'மருது' என ஒருபுறமும், மற்றொருபுறம் வரிச்சலுகை கிடைக்காததால் இப்படம் தள்ளிப் போனதாகவும் கூறுகின்றனர்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 16th 2016, 17:45
-

மீரா ஜாக்கிரதை... மீண்டும் சர்ச்சையில் பாபி சிம்ஹா!

சென்னை: மீரா ஜாக்கிரதை என்ற படத்தில் நான் நடிக்கவே இல்லை. ஆனால் என் படத்தைப் போட்டு விளம்பரம் செய்கிறார்கள் என நடிகர் பாபி சிம்ஹா நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளார். பாபி சிம்ஹா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கோ 2'. இந்தப் படத்துக்கு அடுத்து பாபி சிம்ஹா நடித்த ‘மீரா ஜாக்கிரதை' என்னும் படம் மே 27ம் தேதி வெளியாக இருப்பதாக விளம்பரம் வெளியாகியுள்ளது.

ஆனால் இப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் இது குறித்து நடிகர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘நான் கடந்த மூன்று வருடங்களாக தென்னிந்த நடிகர் …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 15th 2016, 17:32
-

ஜூலை 1-ல் பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் கபாலி!

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் என்ற எல்லை தாண்டி, சர்வதேச அளவில் எதிர்ப்பாப்புக்குரிய படமாகிவிட்ட கபாலியின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஜூலை 1-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. பா ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினி மூன்றுவிதமான கெட்டப்புகளில் வருகிறார். அவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Films of India - Sign of Cinema - Portal 2nio0lk


இப்படத்தில் மலேசியாவின் டான் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். தன்ஷிகா, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 15th 2016, 17:29
-

சிம்புவின் குரலில் 'தாறு மாறு தக்காளி சோறு'!

வெளிப் படங்களில் பாடுவதை அதிகரித்து வருகிறார் சிம்பு. அதுவும் பிரபல நடிகர்களுக்கு குரல் கொடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.
சமீபத்தில் அவர் பாடியிருப்பது விக்ரம பிரபுவுக்காக.

அவர் இப்போது நடித்து வரும் வீரசிவாஜி படத்தில் தாறு மாறு தக்காளி சோறு... எனும் குத்துப் பாடலைப் பாடியுள்ளார்.
இந்தப் படத்தை நந்தகோபாலின் மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படத்தைத் தயாரித்த நிறுவனம் இது.

வீரசிவாஜி படத்தில் விக்ரம்பிரபு, ஷாமிலி நடித்துள்ளனர், கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார். இமான் இசையமைக்கிறார்.

டங்கா மாரி ஊதாரி மற்றும் எங்க தல எங்க தல பாடல்களை எழுதிய ரோகேஷ்தான் இந்த தாறு மாறு தக்காளி சோறு.. பாடலையும் எழுதியுள்ளார்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 15th 2016, 17:28
-

திருட்டு சிடியால் கோடிக்கணக்கில் நஷ்டம்- ஜி.வி.பிரகாஷ்

சென்னை: 'பென்சில்' படத்தின் திருட்டு சிடியால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படக் கூடும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'பென்சில்' ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் 2 வது நாளே இப்படத்துக்கு திருட்டி சிடி வெளியாகியிருப்பது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜி.வி.பிரகாஷின் அறிமுகப்படமான 'பென்சில்' நீண்ட 3 வருடங்கள் கழித்து ஒருவழியாக கடந்த வெள்ளியன்று வெளியானது. ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் இப்படம் …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 15th 2016, 17:27
-

தனுஷ்-வெற்றிமாறனின் 'வடசென்னை'... ஜூன் 15ல் துவக்கம்

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'விசாரணை' படங்களைத் தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் 'வடசென்னை' படத்தில் இணைகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தேதி பலமுறை தள்ளிப்போனதால் வடசென்னை தொடங்கப்படுமா? என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுந்தது.

இந்நிலையில் வருகின்ற ஜூன் 15 ம் தேதி இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, ஆண்ட்ரியா என 2 ஹீரோயின்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் 2 பாகங்களை ஒரே நேரத்தில் இயக்கி முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டிருக்கிறாராம். அதனால் தான் தனது கேரியரில் தொய்வு விழுந்துவிடக்கூடாது என தனுஷ் அடுத்தடுத்த படங்களை ஒப்புக் கொண்டதாக கூறுகின்றனர்.

'புதுப்பேட்டை' போல 'வடசென்னை'யில் தனுஷுக்கு வெவ்வேறு தோற்றங்கள் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 14th 2016, 12:24
-

இருமுகன்: வில்லன் ஆசை விக்ரமையும் விட்டு வைக்கலையே!

சென்னை: 'இருமுகன்' படத்தில் நடிகர் விக்ரம் வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்து வரும் படம் 'இருமுகன்'.விக்ரம் இதில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.
அதில் ஒரு வேடத்தில் வில்லனாக விக்ரம் நடித்து வருவதாக தகவல்கள் அடிபடுகின்றன.

சமீபத்தில் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலடித்தது. இது தவிர விக்ரம் 2 வேடங்களில் நடிப்பது, நயன்தாரா-விக்ரம் இணையும் முதல் படம் என படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ''பில்லா' படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்களைக் கவர்ந்த நயன்தாரா இப்படத்திலும் அதுபோல ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வருகிறாராம். விக்ரமிற்கு இணையாக நயன்தாரா கதாபாத்திரத்தையும் இயக்குநர் வடிவமைத்துள்ளதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் விக்ரம் இப்படத்தில் வில்லனாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் இதுவரை பார்க்காத மிரட்டலான ஒரு விக்ரமை பார்க்கலாம் என்று கூறுகின்றனர். இதுவரை விக்ரம் எந்தப் படத்திலும் வில்லனாக நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரும் வில்லனாக நடித்து விட்டனர். தற்போது 'இருமுகன்' படத்தின் மூலம் விக்ரமும் இந்த வில்லாதி வில்லன்கள் வரிசையில் இணையப் போகிறார். ஹீரோ விக்ரம் வில்லனாக மிரட்டுவாரா?


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 14th 2016, 12:12
-

கன்னடத்தில் ரீமேக்காகும் 'மஞ்சப்பை'! மிஸ்டர் மமகா

2014ம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் சற்குணம் சினிமாஸ் தயாரிப்பில், விமல், ராஜ்கிரன், லட்சுமி மேனன் நடிப்பில் ராகவா இயக்கத்தில் வெளிவந்த படம் 'மஞ்சப்பை'.

அனைவரும் ரசிக்கும்படி ஜனரஞ்சகமாய் எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வசூலைப் பெற்றது. இயக்குநருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.

தற்போது மஞ்சப்பை படத்தின் கன்னட பதிப்பு 'மிஸ்டர் மமகா' (மிஸ்டர் பேரன்) என்ற தலைப்பில் இம்மாதம் வெளியாகவுள்ளது. கன்னடத்திலும் ராகவாவே இயக்கியுள்ளார்.
ரவி கௌடா, ஒவியா, ரங்கயனா ரகு ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

இந்தப் படம் தவிர, தமிழில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா, கேத்ரின் தெரசா நடிக்கும் படத்தையும் இயக்குகிறார் இயக்குநர் ராகவா. முதல் கட்டப் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளா வனப் பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விரைவில் தொடங்கவுள்ளது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 14th 2016, 12:10
-

'கபாலி' முதல் நாள் முதல் காட்சி பார்க்கணும் - அக்ஷய்குமார்

சென்னை: 'கபாலி' முதல்நாள் முதல் காட்சியை பார்க்க விரும்புவதாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தெரிவித்திருக்கிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் அக்ஷய்குமார் தற்போது '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தை மிக அதிகமான பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

மறுபுறம் ஜி.வி.பிரகாஷின் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

இன்று 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் கலந்து கொண்டார். பாடல் வெளியீட்டிற்குப்பின் அக்ஷய் குமாரிடம் 'கபாலி' படத்தின் டீசரை லைக்கா நிர்வாகிகளில் ஒருவரான ராஜு மகாலிங்கம் போட்டுக் காண்பித்தார்.

டீசரைப் பார்த்த அக்ஷய்குமார் 'கபாலி 'படத்தின் முதல்நாள் முதல் காட்சியை(FDFS), சென்னையில் ரசிகர்களுடன் காண விரும்புவதாகக் கூறியிருக்கிறார்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 14th 2016, 12:08
-

சூர்யாவின் '24' திருட்டு சிடிக்கு முன்னணி திரையரங்கம் உடந்தையா?

சென்னை: '24' படத்தின் திருட்டு சிடி விவகாரத்திற்கு முன்னணி தியேட்டர் ஒன்று உடந்தையாக இருந்த விவரம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சூர்யா, சமந்தா, நித்யாமேனன் கடந்த வாரம் வெளியான '24' படம் உலகம் முழுவதும் இப்படம் வசூலைக் குவித்து வருகிறது. இந்நிலையில் படம் வெளியான முதல்நாளே இப்படத்தின் சிடி வெளியாகிவிட்டது என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

சூர்யா-சமந்தா நடிப்பில் வெளியான 24 படத்துக்கு முதல்நாளே திருட்டு சிடி வெளியாகி இருக்கிறது. அதைவிட இந்த சிடி பெங்களூரில் உள்ள பிரபலமான தியேட்டர் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 14th 2016, 12:06
-

ரஜினியுடன் எழுத்தாளர் பாலகுமாரன் சந்திப்பு!

நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் இன்று எழுத்தாளர் பாலகுமாரன் சந்தித்தார். எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான பாலகுமாரன், தனது இரு மனைவியருடன் இன்று காலை ரஜினிகாந்தின் இல்லம் சென்றார். இந்த சந்திப்பின் நோக்கம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

ரஜினிக்கு புத்தகங்கள் பரிசளித்த பாலகுமாரன், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பு குறித்த படங்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் 'இன்று காலை சூப்பர் ஸ்டார் ஶ்ரீ ரஜினிகாந்தோடு பேசி களித்தேன்' என்ற குறிப்போடு பகிர்ந்துள்ளார்.

ரஜினிகாந்தின் பாட்ஷா படத்துக்கு வசனம் எழுதியவர் பாலகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 14th 2016, 12:05
-

மே 16ம் தேதி சென்னையில் இருந்தால் ஓட்டுப் போடுவேன் - கமல்ஹாசன்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 16ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைவரும் வாக்களிப்பதற்கு வசதியாக அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

வருகின்ற 16ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அனைவரும் வாக்களிப்பதற்கு வசதியாக அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 16 ம் தேதி நடிக, நடிகையர் வாக்களிபதற்கு வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மே 16ம் தேதி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினைப் பதிவு செய்யவுள்ளார். அதேநேரம் கமல் வெளிநாட்டுப் படப்பிடிப்பில் இருப்பதால் அன்றைய தினம் வாக்களிக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கமல் திங்கட்கிழமை சென்னையில் இருந்தால் ஓட்டுப் போடுவேன் என்று கூறியிருக்கிறார்.

விஜய், அஜீத், விக்ரம், கார்த்தி, விஷால் என திரையுலகில் இருக்கும் மொத்த நடிக, நடிகையரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றத் தயாராகி வருகின்றனர். கார்த்தி காஷ்மீர் படபிடிப்புத் தளத்தில் இருந்தாலும் தனது வாக்கினைப் பதிவு செய்திட அவர் சென்னை வருகிறார்.

அதே நேரம் சூர்யா தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் இருப்பதால், அவர் தனது வாக்கினைப் பதிவு செய்திட வரமாட்டார் என்று கூறப்படுகிறது. கமலும் சூர்யா வரிசையில் இணைவாரா? என்பது தெரியவில்லை.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 14th 2016, 12:03
-

சோனி நிறுவனத்துடன் அனிருத் ஒப்பந்தம்!

மிகக் குறுகிய காலகட்டத்தில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழும் அனிருத், முன்னணி இசை நிறுவனமான சோனியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதன் மூலம் அனிருத்தின் தனி இசை ஆல்பங்கள், இசை நிகழ்ச்சிகளின் உரிமை சோனிக்கு கைமாறுகிறது.

விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இப்போது அனிருத்தான் இசை அமைப்பாளர். தற்போது அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு அனிருத்தான் இசையமைக்கிறார்.

இவருடைய இசையில் தற்போது ‘ரெமோ', ‘ரம்' ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் மோகன் ராஜா இயக்கும் படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி தனிப்பாடல் தொகுப்புகள் மற்றும் வெளிநாடுகளில் நேரடி இசை நிகழ்ச்சிகளும் செய்து வருகிறார் அனிருத்.

இந்நிலையில் அனிருத்தின் தனிப்பாடல்கள் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளின் உரிமைகளை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த பாடல்களை உலக அளவில் பிரபலமாக்க சோனி நிறுவனம் ஒப்பந்தத்தை போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 14th 2016, 12:02
-

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மஞ்சிமா மோகன்?

சென்னை: விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில் டி.ராஜேந்தருடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். 'தனி ஒருவன்' புகழ் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர். இதுகுறித்து படக்குழு ''இப்படத்தில் நடிக்க மஞ்சிமா மோகன் கிட்டதட்ட சம்மதித்து விட்டதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும்'' என்றும் தெரிவித்துள்ளனர். ரத்தின சிவாவின் 'றெக்க' படத்துக்குப்பின் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.

சிம்புவுடன் இணைந்து நடித்த 'அச்சம் என்பது மடமையடா' இன்னும் வெளியாகவில்லை எனினும், அடுத்தடுத்த வாய்ப்புகள் மஞ்சிமாவைத் தேடிச்செல்வது குறிப்பிடத்தக்கது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 14th 2016, 11:57
-

தனியார் பேருந்தில் தெறி: சிடி, டிவியுடன் டிரைவரையும் சேர்த்துத் தூக்கிய போலீஸ்!

சென்னை: தனியார் சொகுசு பேருந்தில் 'தெறி' திரைப்படம் ஓடுவதைக் கண்டுபிடித்த விஷால், சிடி தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்து சிடியைப் பறிமுதல் செய்ய வைத்திருக்கிறார்.

என்னுடைய 'மருது' திரைப்படத்திற்கு சிடி வெளியானால் நானே களத்தில் இறங்கி நடவடிக்கை எடுப்பேன், என நடிகர் விஷால் சமீபதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு பெங்களூரில் இருந்து சென்னை வந்த தனியார் சொகுசுப் பேருந்தில் 'தெறி' திரைப்படம் ஓடுவதாக, விஷாலுக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிடி தடுப்புப் பிரிவு போலீசாருக்கு விஷால் தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்தப் பேருந்தை சென்னை, மதுரவாயல் அருகே மடக்கிப்பிடித்து சிடி, டிவியைப் பறிமுதல் செய்து டிரைவரைக் கைது செய்தனர்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 14th 2016, 11:56
-

என் குழந்தைகள் என்னை மாதிரி மட்டும் இருக்கக் கூடாது: நஸ்ரியா

திருவனந்தபுரம்: தனக்கு பிறக்கும் குழந்தைகள் தன்னை போன்று இருக்கக் கூடாது என்கிறார் நடிகை நஸ்ரியா. நஸ்ரியா நடிக்க வந்த வேகத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா படங்களில் நடிக்காமல் உள்ளார். அவர் தொடர்ந்து நடிப்பதை தான் தடுக்கவில்லை என்று பஹத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குழந்தைகள் பற்றி நஸ்ரியா கூறுகையில், பஹத் அன்பான கணவர் மட்டும் அல்ல அவரது பெற்றோருக்கு நல்ல மகனாகவும் உள்ளார். என் குழந்தைகள் என்னை போன்று இல்லாமல் அவரை போன்று இருக்க வேண்டும். என் 4 பிள்ளைகளில் பஹத் தான் நல்ல பிள்ளை என்று என் மாமியார் கூறுவார். நான் குழந்தையாக இருக்கையில் வாலாக இருந்தேன். அதனால் என் குழந்தைகள் என் போன்று இல்லாமல் பஹத் போன்று சமத்துப் பிள்ளையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 14th 2016, 11:55
-

'சாய்ந்தாடு' ட்ரைலர் வெளியானது!

கசாலி இயக்கியுள்ள மருத்துவ அறிவியல் த்ரில்லர் படம் சாய்ந்தாடு. ஒரு டாக்டர் ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடிக்கிறார். அந்த முக்கியமான மருந்தை ஆராய்ச்சி செய்ய 'கிளினிக்கல் டிரையல்' என்ற மருத்துவ ஆராய்ச்சிக்காக 25 வயதுக்குட்பட்ட வாலிபர்களைக் கடத்தி மருந்தைச் செலுத்தி ஆராய்கிறார். 'ஓ' நெகட்டிவ், 'பி' நெகட்டிவ் மற்றும் 'ஏபி' நெகட்டிவ் ரத்த குரூப் உள்ள வாலிபர்கள் மருந்தினால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு முகம், உடலெல்லாம் கொப்புளம் வந்து வீங்கி செத்துப் போகிறார்கள். 'ஏ' நெகட்டிவ் பிளட் குரூப் உலகத்தில் மிக அரிதான ரத்த வகை. அது படத்தின் …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 14th 2016, 11:51
-

அச்சமின்றி ட்ரைலரை வெளியிட்டார் விஷால்!

அச்சமின்றி படத்தின் ட்ரைலரை இன்று நடிகர் சங்க பொதுச் செயலர் விஷால் வெளியிட்டார். ராஜபாண்டி இயக்கத்தில் விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே, சமுத்திரக்கனி, ராதா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அச்சமின்றி.

கல்வி வியாபாரத்தை கதைக் களமாகக் கொண்டு எடுத்திருக்கிறார்கள். வினோத்குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரைலரை இன்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் வெளியிட்டார்.

"அச்சமின்றி டீசரை இப்போதுதான் பார்த்தேன். எந்த டாபிக்கை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியதாக இப்போதுதான் சொன்னார்கள். கண்டிப்பாக இந்தப் படம் அனைவரையும் கவனிக்க வைக்கும். இந்த ட்ரைலரில் நண்பன் விஜய் வசந்தின் தோற்றம் எனக்குப் பிடித்திருந்தது. இன்னொரு நண்பன் பிரேம்ஜி இசையமைத்துள்ளார். படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்," என்றார் விஷால்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 14th 2016, 11:49
-

லாரன்ஸ்- வடிவேலு கூட்டணியில் உருவாகிறது 'சந்திரமுகி 2'

சென்னை: சந்திரமுகி-2 வில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து வடிவேலு நடிப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 2005 ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த படம் சந்திரமுகி. ரஜினியுடன் இணைந்து பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு, மாளவிகா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

சிவராஜ்குமார், வேதிகாவை வைத்து பி.வாசு இயக்கிய 'சிவலிங்கா' திரைப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திரில்+கிரைம் என்ற ரீதியில் உருவான இப்படத்தில் நடிகர் சக்திவேல் வாசுவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் தற்போது சந்திரமுகி-2 என்ற பெயரில் உருவாகவுள்ளது.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, தற்போது லாரன்ஸ் நடிப்பது உறுதியாகியுள்ளது. லாரன்ஸுடன் இணைந்து முக்கிய வேடத்தில் வடிவேலுவும் நடிக்கவிருக்கிறார். சிவலிங்காவை கன்னடத்தில் இயக்கிய வாசுவே தமிழிலும் இயக்குகிறார்.

தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா, இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிப்பார் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் காமெடி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.தற்போது சந்திரமுகி 2 விலும் வடிவேலு நடிக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கான நடிக, நடிகையர் தேர்வு முடிந்தவுடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக சந்திரமுகி-2 குறித்து அறிவிக்க திட்டமிட்டுள்ளது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 14th 2016, 11:47
-

ரசிகர்களை கலங்கடிக்கும் மூடிலேயே இருக்கும் அழகுப் பேய் த்ரிஷா

சென்னை: த்ரிஷாவுக்கும், பேய்ப் படத்திற்கும் ஒர்க் அவுட்டான தைரியத்தில் நாயகி படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷாவின் முன்னாள் மேனேஜரான கிரிதர் தயாரிப்பில் கோவி இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் பேய் படம் தான் நாயகி. வழக்கமாக அழகுப் பதுமையாக வரும் த்ரிஷா இதில் ரசிகர்களை கலங்கடிக்கும் பேயாக வருகிறார். த்ரிஷா என்ன இப்படி பேயாக கிளம்பிட்டாங்களே என நீங்கள் நினைக்கலாம். அதற்கு காரணம் உள்ளது.

கோலிவுட்டில் அண்மை காலமாக பேய் படங்கள் தான் கல்லா கட்டி வருகின்றன. அது மட்டும் அல்ல பேய் என்றால் பெண் பேயாக உள்ளது என்பதால் ஹீரோயினுக்கு தான் படத்தில் அதிக முக்கியத்துவம். அதனால் பேயாக நடிக்க ஹீரோயின்கள் போட்டா போட்டி போடுகிறார்கள்.

நயன்தாரா, ஹன்சிகா என்று ஆளாளுக்கு பேய் படத்தில் நடித்து ஹிட் கொடுத்ததை பார்த்த த்ரிஷாவுக்கும் பேய் மோகம் பிடித்தது. இகையடுத்து அவர் பேயாக நடித்த அரண்மனை 2 படம் சூப்பர் ஹிட்டானது.

Films of India - Sign of Cinema - Portal Mio13t


ஆஹா, பேய் படத்தில் நடித்தால் நமக்கு முக்கியத்துவத்திற்கு முக்கியத்துவமும், ஹிட்டுக்கு ஹிட்டாகவும் உள்ளது என்பதை உணர்ந்த த்ரிஷா தற்போது நாயகி படத்தில் மீண்டும் பேயாட்டம் போடுகிறார்.

எத்தனை பேய் படங்கள் வந்தாலும் தியேட்டருக்கு படையெடுத்து அவற்றை ஹிட்டாக்காமல் விட மாட்டோம் என்று கோலிவுட் ரசிகர்கள் உள்ளனர். அதனால் நாயகி படம் நிச்சயம் ஹிட் என்று தற்போதே கூறலாம்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 11th 2016, 17:10
-

‘அந்தமான்’ கப்பலில் ஒரு களேபரம்! அதிர வைத்த ஹீரோயின்!!

பொதுவாக ஹீரோக்களுடன்தான் ஹீரோயின்கள் ஆட்டம் போடுவார்கள்.. டூயட் பாடுவார்கள். அந்தமான் படத்தில் இதை உல்டாவாகக் காட்டியிருக்கிறார்கள். தன்னைக் கடத்திச் செல்லும் வில்லனுக்கு சோப்புப் போட்டு குளியல் போட்ட நாயகியைப் பார்த்து 'அடக் கருமேந்திரா' என அதிர்ந்து போனாராம் ஹீரோ.

சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் தயாரிக்கும் படம் அந்தமான். கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்கள். இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, சாம்ஸ், மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை, சாம்ஸ், நெல்லை சிவா, போன்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 11th 2016, 17:06
-

பாஸ்போர்ட் பிரச்சினையைக் கையிலெடுக்கும் 'காக்கா முட்டை' மணிகண்டன்

சென்னை: பாஸ்போர்ட் விஷயங்களில் உள்ள முரண்பாடுகளை மையமாகக் கொண்டு, விஜய் சேதுபதியின் 'ஆண்டவன் கட்டளை' உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 'காக்கா முட்டை' மணிகண்டன் விஜய் சேதுபதி- ரித்திகா சிங்கை வைத்து 'ஆண்டவன் கட்டளை' படத்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் படத்தின் கதைக்களம் தற்போது வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து படக்குழு ''பாஸ்போர்ட் வழங்கும் விஷயங்களில் உள்ள முரண்பாடுகள், அதனால் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. பாஸ்போர்ட் விஷயத்தை கையிலெடுத்திருப்பதால் சீரியஸ் படம் என்று எண்ணிவிட வேண்டாம். பொழுதுபோக்கு அம்சங்களுடன் எல்லோரையும் கவர்கின்ற படமாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளனர்.

'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை' என 2 படங்களுக்குப் பின் மணிகண்டன் இயக்கும் படம், விஜய் சேதுபதி, ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பது போன்ற காரணங்களால் இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் மக்கள் செல்வன் என்ற அடைமொழியோடு விஜய் சேதுபதியின் 'றெக்க' பர்ஸ்ட் லுக் நாளை வெளியாவது குறிப்பிடத்தக்கது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 11th 2016, 17:02
-

'மருது' திரைப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது தணிக்கைக் குழு

சென்னை: விஷாலின் 'மருது' திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. 'குட்டிப்புலி', 'கொம்பன்' படங்களைத் தொடர்ந்து முத்தையா இயக்கியிருக்கும் படம் 'மருது'.விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. வழக்கம்போல கிராமத்துப் பின்னணியில் இப்படத்தை முத்தையா இயக்கியிருக்கிறார். படத்தை வாங்கியிருக்கும் ஐங்கரன் நிறுவனம் மே 20 ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

இந்நிலையில் 'மருது' படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யூ/ஏ சான்றிதழை வழங்கியுள்ளனர்.'மருது' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, படத்தை தணிக்கை அதிகாரிகளுக்கு படக்குழு அனுப்பி வைத்தது. இப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் சண்டைக் காட்சிகள் அதிகம் இருப்பதால் யூ/ஏ சான்றிதழை வழங்கியிருக்கின்றனர். மேலும் படத்தின் ஒருசில வசனங்களை நீக்கியிருப்பதாக விஷால் தெரிவித்திருக்கிறார்.

தணிக்கையில் யூ/ஏ சான்றிதழைப் பெற்றதன் மூலம் தமிழக அரசின் வரிவிலக்கை இப்படம் இழந்திருக்கிறது. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படத்திற்கு திருட்டு விசிடி வெளியானால், நான் எனது நண்பர்களுடன் இணைந்து களத்தில் இறங்கி நடவடிக்கை எடுப்பேன் என்று விஷால் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 11th 2016, 16:42
-

ஓட்டுப் போடுங்க..'கோ 2' படத்தை இலவசமா பாருங்க!

சென்னை: ஓட்டுப் போட்டால் 'கோ 2' படத்தின் 2 டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என படக்குழு விளம்பரம் செய்திருக்கிறது. பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கோ 2'. சரத் இயக்கியிருக்கும் இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.

Films of India - Sign of Cinema - Portal T6tna1


இந்நிலையில் மே 16 ல் ஓட்டுப் போட்டால் 2 டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என புதுமையான முறையில் இப்படத்தை படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. ''மே 16 அன்று வாக்களிப்பவர்கள், வாக்களித்த விரல் மையுடன் ஒரு செல்பி மற்றும் உங்கள் முகவரியை 8682888038 என்கிற எண்ணுக்கு வாட்ஸப் அனுப்பினால் குலுக்கல் முறையில் 500 வாக்காளர்களுக்கு கோ 2 படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் வீடு தேடி வரும்'' என்று கூறியுள்ளனர். வருகின்ற 13ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 11th 2016, 16:34
-

வருமானமே இல்லாத தியேட்டர்ல திருட்டு விசிடி எடுக்கத்தான் செய்வான்!- திருப்பூர் சுப்பிரமணியம்

சென்னை: வருமானமே இல்லாத ஒரு சில தியேட்டர்களில் திருட்டு விசிடி எடுக்கத்தான் செய்வார்கள்... என்ன செய்வது? என்று விநியோகஸ்தரும் தியேட்டர் உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியன் கேட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் நடந்த மருது திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷால் திருட்டு வீடியோ வெளியாகக் காரணம் தியேட்டர்கள்தான். எல்லா ப்ரிண்டும் தியேட்டர்களிலிருந்துதான் வெளியில் போகிறது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்களும் பொறுப்பு. தயாரிப்பாளர்கள் தான் திருட்டைத் தடுக்க உதவ முன்வர வேண்டும்," என்றார்.

விஷாலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு, கோவை, ஈரோடு, …


[ Full reading ]

Comments: 1

 
 
-Selva Kumar Share this topic

-on May 11th 2016, 16:30
-

'சினிமாவுக்கு முழுக்குப் போடுகிறேன் என்று நான் சொன்னேனா..?'- சீறும் சமந்தா

சென்னை: சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கப் போவதாக நான் ஒருபோதும் சொல்லவில்லை. அதிகப் படங்களில் நடிக்காமல், தேர்ந்தெடுத்து நிதானமாக நடிக்கப் போகிறேன் என்றுதான் சொன்னேன். அது புரியாமல் எனக்கு ஓய்வு கொடுத்துவிட்டன பத்திரிகைள் என்கிறார் நடிகை சமந்தா. தமிழில் சமந்தா நடித்த தெறி, 24 ஆகிய தமிழ்ப் படங்கள் சமீபத்தில் வெளியாகின. இரண்டுமே அவருக்கு வெற்றிப் படங்கள்தான். இதன் மூலம் சமந்தா நடித்தால் ஓடாது என்ற பழியிலிருந்து வெளிவந்துவிட்டார்.

அந்த சந்தோஷத்துடன் ட்விட்டரில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதில், "இன்று நிம்மதியாகத் தூங்குவேன். இந்தக் கோடையின் …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 11th 2016, 16:24
-

ஓட்டுக்கு பணம் கொடுப்பவன் வருங்கால திருடன் - ஏ.ஆர்.முருகதாஸ்

சென்னை: ஓட்டுப்போட பணம் கொடுப்பவன் வருங்கால திருடன் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் நெருங்கி வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. மற்றொருபுறம் பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது.

மேலும் 100% வாக்குப்பதிவிற்காக விழிப்புணர்வு விளம்பரங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஓட்டுக்கு பணம் வாங்குவதற்கு தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் ''May 16 ஓட்டு போடுவதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும்போது அடையாளம் கொள்க, அவன் வருங்கால திருடன் என்று" என கூறியிருக்கிறார்.


Comments: 0

 
 
-Films of India Share this topic

-on May 10th 2016, 15:45
-

நாலே நாலு நாளைக்கு நான் முதலமைச்சரா இருக்கணுங்க!- கஞ்சா கருப்பு

திருச்செங்கோடு: நாலே நாலு நாலைக்கு என்னை முதலமைச்சரா உட்கார வச்சா எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன் என்று நடிகர் கஞ்சா கருப்பு கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட அக்கட்சியின் திருச்சொங்கோடு ஒன்றிய முன்னாள் செயலாளர் முத்துமணி சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கஞ்சா கருப்பு பிரச்சாரம் செய்து வருகிறார்.

பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய கஞ்சா கருப்பு, "என்னை யாராவது அரசியல் கட்சியில் சேர அழைப்பு விடுத்தால் நாலே நாலு நாட்களுக்கு மட்டும் முதலமைச்சர் பதவியை கேட்டுப் பெறுவேன். அதற்குள் செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிடலாம். நான் முதலமைச்சர் ஆனால் பள்ளியில் மதிய உணவுக்கு மாணவர் ஒருவருக்கு முழு கோழி ஒன்று வழங்கப்படும். இது நகைச்சுவைக்காக நான் சொல்லவில்லை. சீரியசாத்தான் சொல்றேன்.

சுயேட்சை வேட்பாளர் முத்துமணி வெற்றி பெற்றால் அனைத்து நதிகளும் இணைக்கப்படும். பல்வேறு கட்சிகள் எனக்கும் அழைப்பு விடுத்தன. ஆனால் நான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. முத்துமணி கட்சி ஆரம்பித்தால் நானும், நடிகை ஷகிலாவும் முதல் நபர்களாக கட்சியில் இணைவோம். நான் படிக்காமல் போனதால் என்னை பலரும் ஏமாற்றிவிட்டார்கள். கோடிக்கணக்கில் பணத்தை இழந்துவிட்டேன். எனவே நான் முதலமைச்சரானால் கல்வி முற்றிலும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பேன்," என்றார்.


Comments: 0

 
 
-Films of India Share this topic

-on May 10th 2016, 15:43
-

கல்வி வியாபாரத்தை தோலுரித்துக் காட்ட வரும் 'அச்சமின்றி'!

உணவு, உடை, இருப்பிடம் என எந்த அடிப்படை வசதிகளில் குறை இருந்தாலும் பரவாயில்லை... எப்படியாவது பிள்ளைகளைப் படிக்க வைத்துவிட வேண்டும் என்ற நினைப்பு பெரும்பான்மை மக்கள் மனதில் இன்று வேரோடியிருக்கிறது. மக்களின் இந்த மனநிலையை அவர்களின் பலவீனமாகக் கருதி, கல்வி வியாபாரிகள் கடைப் பரப்பி கல்வியை கனஜோராக விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்தப் பிரச்சினையை ஒரு திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜபாண்டி. என்னமோ நடக்குது என்ற சூப்பர் ஹிட் படத்தைத் தந்தவரின் அடுத்த படைப்பு இது. அதே விஜய் வசந்த், தயாரிப்பாளர் வினோத்குமார், இசையமைப்பாளர் பிரேம்ஜி இந்தப் …


[ Full reading ]

Comments: 0

 
 
-Films of India Share this topic

-on May 10th 2016, 15:35
-

கேன்ஸ் திரைப்பட விழாவில் பாகுபலி: பிரான்ஸுக்கு பறக்கும் ராஜமவுலி

ஹைதராபாத்: வசூலில் கில்லியான பாகுபலி படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. பிரான்ஸில் உள்ள கேன்ஸில் ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நாளை துவங்கி வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் உலக திரைப்பட பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் வசூல் மன்னன் பாகுபலி அணிக்கும் ஒரு பெருமை கிடைத்துள்ளது.

Films of India - Sign of Cinema - Portal Bahu10


கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்ட சில படங்களை மட்டுமே திரையிடுவார்கள். அந்த திரைப்பட விழாவில் ஒரு படம் திரையிடப்படுவது அந்த படக்குழுவினருக்கு கிடைத்த கௌரவமாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் வசூலை அள்ளிக் குவித்த ராஜமவுலியின் பாகுபலி படம் திரையிடப்படுகிறது. பாகுபலி வரும் 16ம் தேதி இரவு 8.30 மணிக்கு திரையிடப்படுகிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பாகுபலி படத்தின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி, தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா ஆகியோர் பிரான்ஸ் செல்கிறார்கள். அங்கு வி.ஆர்.(virtual relaity)குறித்து நடக்கும் கலந்தாய்வில் ராஜமவுலி கலந்து கொள்கிறார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சோனம் கபூர் ஆகியோர் ஏற்கனவே பிரான்ஸ் கிளம்பிச் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 10th 2016, 11:08
-

நடிகர் சங்கத்துக்கு ரூ 1 கோடி... விஷாலிடம் நேரில் வழங்கியது லைகா நிறுவனம்!

நடிகர் சங்கக் கட்டட நிதிக்காக லைகா நிறுவனம் அறிவித்த ரூ 1 கோடிக்கான காசோலையை இன்று நேரில் விஷாலிடம் வழங்கப்பட்டது. கமல்ஹாசன் மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு' படத்தின் பூஜை சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் சில தினங்களுக்கு முன் நடந்தது. இப்படத்தை லைக்கா நிறுவனமும், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தின் பூஜையின் போது, நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு ரூ.1 கோடி தருவதாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து லைக்கா நிறுவன சென்னை நிர்வாகி ராஜு மகாலிங்கம் இன்று அந்த ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் மற்றும் பொருளார் கார்த்தி ஆகியோரை சந்தித்து வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் மற்றும் நிர்வாகிகளான ஐசரி கணேஷ், நடிகர் ராஜா ஆகியோரும் உடனிருந்தனர்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 10th 2016, 11:05
-

'ஸ்ரீ பிரியங்கா' தனது பெயரை 'ஸ்ரீ ஜா' என மாற்றினார்

கங்காரு, வந்தா மல, கோடை மழை படங்களின் நாயகி ஸ்ரீப்ரியங்கா தனது பெயரை ஸ்ரீ ஜா (Shree Ja) என மாற்றிக் கொண்டுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான ஸ்ரீஜா, வளர்ந்து வரும் நடிகைகளில் 'இயல்பாக நடிக்கத் தெரிந்தவர்' என மீடியாவால் பாராட்டப்படுபவர். தமிழ்ப் பெண்ணான தனக்கு தமிழ் சினிமாவில் உரிய இடம் வேண்டும் என உரிமையாகக் கேட்டு வருபவர்.

இப்போது சாரல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் அவர், தனது பெயரை ஸ்ரீ ஜா என மாற்றிக் கொள்ளக் காரணம் கேட்டபோது, 'ப்ரியங்கா என்ற பெயரில் இங்கே ஏற்கெனவே சில நடிகைகள் இருந்தது, இருப்பது இப்போதுதான் எனக்கே தெரிந்தது. பெயர்க் குழப்பம் வேண்டாமே என்பதற்காகத்தான் ஸ்ரீ ஜா-வாகிவிட்டேன். இன்னொன்று நியூமராலஜிபடியும் எனக்கு இந்தப் பெயர் சரியாக இருக்கும் என்றார்கள். நான் நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படம் சாரல். படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தப் படத்தின் ரிலீசுக்காகக் காத்திருக்கிறேன்.

இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ரீங்காரம் படம் ஷூட்டிங் முடிந்து, இறுதிக் கட்ட வேலைகள் நடக்கின்றன. இன்னொரு படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இவை தவிர இன்னும் சில படங்களுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். கதையைப் பொறுத்து முடிவு செய்யலாம் என காத்திருக்கிறேன். நான் நடிக்கவிருக்கும் திருப்பதி லட்டு படம் இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கிறது," என்றார். பெயர் மாற்றம் ஸ்ரீ ஜாவுக்கு கோலிவுட்டில் பெரிய இடத்தைப் பெற்றுத் தர வாழ்த்துவோம்!


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 10th 2016, 11:03
-

'மதுர' மாதேஷின் இயக்கத்தில் மீண்டும் பேயாக மாறும் திரிஷா?

சென்னை: 'நாயகி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பேய் படத்தில் திரிஷா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 13 வருடங்கள் தாண்டியும் தமிழ் சினிமாவில் வெற்றி நாயகியாக வலம் வரும் திரிஷா, தற்போது 'நாயகி' என்ற திகில் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தனுஷின் 'கொடி', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'போகி' ஆகிய படங்களும் திரிஷா கைவசம் உள்ளன. இந்நிலையில் 'மதுர' இயக்குநர் மாதேஷ் இயக்கும் புதிய படத்தில் திரிஷா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இதுவும் 'நாயகி' போல திகில் படம்தான் எனவும், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் இருந்து துவங்கும் என்றும் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் ''முதன்முறையாக ஒரு திகில் படத்திற்கு இசையமைக்கவிருக்கிறோம். இது மிகவும் சவாலாக இருக்கும் என்று தெரிகிறது. இப்படத்தில் 4 பாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர்.இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 10th 2016, 11:02
-

திருட்டு விசிடியைத் தடுக்க தனி ஆளாகப் போராடிக் கொண்டிருக்கிறேன்!- விஷால்

திருட்டு விசிடியைத் தடுக்க தனி ஆளாகப் போராடிக் கொண்டிருப்பதாக நடிகர விஷால் கூறினார். குட்டிப்புலி,கொம்பன் ஆகிய வெற்றிப்படங்களின் இயக்குனர் முத்தையாவின் அடுத்த படம் 'மருது'. கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக விஷால், கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று மாலை நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் விஷால் பேசுகையில்: தமிழில் மருது என்ற பெயரிலும், தெலுங்கில் ராயுடு …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 10th 2016, 11:00
-

றெக்க: 'தல தளபதி' வில்லன்களுடன் மோதும் விஜய் சேதுபதி

சென்னை: 'றெக்க' படத்தில் விஜய், அஜீத் பட வில்லன்களுடன் விஜய் சேதுபதி மோதப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'வா டீல்' புகழ் ரத்தினசிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போகும் புதிய படத்திற்கு 'றெக்க' என பெயர் சூட்டியிருக்கின்றனர். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கவுள்ளார்.

இதுவரை ரவுடி, போலீஸ், டாக்டர் வேடங்களில் நடித்த விஜய் சேதுபதி இப்படத்தில் முதன்முறையாக வக்கீலாக நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி 2 வில்லன்களுடன் இப்படத்தில் மோதப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'வேதாளம்' படத்தில் அஜீத்துக்கு வில்லனாக நடித்த கபீர் சிங் மற்றும் 'விஜய் 60' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் ஹரிஷ் உத்தமன் ஆகிய இருவரும் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கப் போகிறார்களாம். இந்த வார இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 10th 2016, 10:56
-

சூரி நடிப்பைப் பார்த்து மெர்சலாயிட்டேன்!- ஸ்ரீதிவ்யா

மருது படத்தில் சூரியின் குணச்சித்திர நடிப்பைப் பார்த்து நான் மெர்சலாயிட்டேன் என்றார் நடிகை ஸ்ரீதிவ்யா. முத்தையா இயக்கியுள்ள மருது படத்தின் அறிமுக விழா மற்றும் பிரஸ்மீட் நேற்று பிரசாத் லேபில் நடந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கதாநாயகி ஸ்ரீதிவ்யா பேசுகையில், "மருது' படம் நடிக்கும் போதே எனக்குத் தெரிந்தது இது நிச்சமாக வெற்றிப்படமாக அமையும் என்று. அப்படிப்பட்ட ஒரு சிறப்பான கதை. நடிகர் சூரியின் எமோஷனலான நடிப்பைப் பார்த்து நான் 'மெர்சலாயிட்டேன்.' படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நிச்சயமாக ஒரு வெற்றிப்படமாக இது அமையும்," என்றார்.

படத்தின் இயக்குநர் முத்தையா பேசுகையில், "மருது' மண்மனம் மாறாத ஒரு கிராமிய திரைப்படமாக இருக்கும். ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதைதான் 'மருது'. எனக்கு சென்டிமெண்ட் படங்களைத்தான் இயக்கத் தெரியும். நான் நகரம் சார்ந்த கதையமைப்பில் படம் செய்தாலும் அதிலும் சென்டிமெண்ட் இருக்கும். 'மருது' கதாபாத்திரத்துக்கு விஷால் சார் மிகச்சரியாக பொருந்தி இருந்தார். அவருடைய உடல் அமைப்பும், நிறமும் இந்த கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தியது.

படத்தின் கதாநாயகி ஸ்ரீ திவ்யா. இக்கதைக்கு ஸ்ரீ திவ்யா அழகாக பொருந்தி வந்ததால் அவரை இக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்தோம். அதுமட்டுமல்லாமல் இசையமைப்பாளர் இமானுடன் எனக்கு முதல் படத்தில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உண்டு. இந்த படத்தின் மூலம் அது நிறைவேறி உள்ளது எனக்கு மகிழ்ச்சி. படத்தில் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது. நடிகர் சூரி, அவர் இப்படத்தில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் குணசித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார்," என்றார்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 10th 2016, 10:49
-

24 படத்தை நேசித்த ரசிகர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி - சூர்யா

சென்னை: 24 படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான சூர்யா ரசிகர்கள் கொடுத்துவரும் அபார வரவேற்புக்கு நன்றி என கூறியிருக்கிறார்.

சூர்யா,சமந்தா, நித்யாமேனன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 24 திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் மகிழ்ந்துபோன சூர்யா இப்படத்திற்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார்.

சூர்யா-சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் '24'. முதல் படமான '36 வயதினிலே' படத்தை 3 கோடியிலும், 'பசங்க 2' படத்தை 5 கோடியிலும் சூர்யா தயாரித்திருந்தார். இரண்டு பட்ஜெட் …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 10th 2016, 10:45
-

இனிமேல் புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ள போவதில்லை- சமந்தா

சென்னை: டோலிவுட், கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா இனிமேல் புதிய படங்களை ஒப்புக் கொள்ளப்போவதில்லை என்று கூறியிருக்கிறார். 'தெறி', '24' என அடுத்தடுத்து 2 சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி நாயகிகளில் ஒருவராக சமந்தா உயர்ந்திருக்கிறார். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான '24' திரைப்படம் உலகெங்கும் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது. இந்நிலையில் புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என சமந்தா கூறியிருப்பது அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் '' இன்று இரவு நிம்மதியாகத் தூங்குவேன். இந்த கோடை காலத்தின் கடைசி படமும் வெளியாகி விட்டது. கடந்த 8 மாதங்களாக ஓய்வின்றி உழைத்து வந்தேன். அந்த நாட்கள் மிகவும் கடினமாக இருந்தன. சோர்வு காரணமாக என்னால் முடியாது என்னும் நிலை வந்தபோதும், அந்த இக்கட்டான நிலைமைகளை நான் சமாளித்து விட்டேன்.

இந்த 8 மாதங்களில் என்னால் ஒரு நல்ல மகளாக, தோழியாக இருக்க முடியவில்லை. இதனை சரிக்கட்ட இனிமேல் புதிய படங்கள் எதையும் நான் ஒப்புக் கொள்ள போவதில்லை. இந்தக் கடுமையான நாட்களில் எனக்கு ஆதரவளித்த எனது குடும்பத்துக்கு நன்றி'' என்று கூறியிருக்கிறார். சமந்தாவின் இந்த அதிரடி முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 10th 2016, 10:44
-

மீண்டும் ராஜ்கிரணுடன் ராகவா லாரன்ஸ்!

சென்னை: 9 வருடங்களுக்குப்பின் ராகவா லாரன்ஸ்-ராஜ்கிரண் இருவரும் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய பேய்ப் பட ட்ரெண்டுக்கு முக்கிய காரணமாக அமைந்தது ராகவா லாரன்ஸ் இயக்கிய 'முனி' படம். அந்தப் படத்தில் லாரன்சுடன் இணைந்து ராஜ்கிரண் முக்கியத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

முனீஸ்வரன் சிலைக்கு முன் பேயாக வந்து அவர் பண்ண ரகளை இன்றும் மறக்க முடியாதது. அந்த முனிதான் பிறகு காஞ்சனா, காஞ்சனா 2 என கலக்கியது. அதிலும் 'காஞ்சனா 2' திரைப்படம் 100 கோடிகள் வரை வசூலித்து சாதனை புரிந்தது. தொடர் வெற்றிகளால் லாரன்ஸை நாயகனாக தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் பலரும் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் 'முனி' படத்தின் தொடர்ச்சியாக 'நாகா' என்ற படத்தை உருவாக்கி வருகிறார் லாரன்ஸ். இது முனியின் 4வது பாகம். இதில்தான் ராஜ்கிரணை லாரன்ஸ் மீண்டும் நடிக்க வைக்கப் போகிறாராம்.

9 வருடங்களுக்குப்பின் இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று கூறுகின்றனர். வேந்தர் மூவிஸ் தயாரிக்கும் இப்படம் லாரன்ஸின் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் முடிந்ததும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 10th 2016, 10:40
-

போராடி தணிக்கை சான்றிதழைப் பெற்றது பாபி சிம்ஹாவின் 'மெட்ரோ'

சென்னை: மறுதணிக்கையில் ஏ சான்றிதழைப் பெற்றிருக்கிறது பாபி சிம்ஹாவின் 'மெட்ரோ' திரைப்படம். சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மெட்ரோ'. ஜோஹன் இசையமைத்திருக்கும் இப்படத்தை 'ஆள்' புகழ் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.

[img]Films of India - Sign of Cinema - Portal Rkmxhs[/img]


தொடர் வழிப்பறி கொள்ளைகளை வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் சிரிஷ் நாயகனாகவும், பாபி சிம்ஹா வில்லனாகவும் நடித்திருக்கின்றனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து இப்படத்தை தணிக்கைக்கு படக்குழு அனுப்பி வைத்தது. ஆனால் வன்முறைக் காட்சிகள் அதிகம் உள்ளது என்று கூறி இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை அதிகாரிகள் மறுத்து விட்டனர். தணிக்கை அதிகாரிகளின் மறுப்பால் 'மெட்ரோ' குழு மறுதணிக்கைக்கு சென்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு ஏ சான்றிதழை வழங்கியிருக்கின்றனர்.

இதுகுறித்து படக்குழு '' செயின் கொள்ளைகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை மற்றும் காட்சிகளை அமைத்திருக்கிறோம். உண்மையில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு என்பதால் காட்சிகள் தத்ரூபமாக அமைந்துள்ளன. அதனால் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர். தற்போது மறுதணிக்கையில் ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. வருகின்ற ஜூன் மாதம் இப்படத்தை வெளியிடவிருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 10th 2016, 10:36
-

பர்ஸ்ட் லுக்குடன் வெளியாகும் ரெமோ தீம் மியூசிக்..

சென்னை: ரெமோ படத்தின் பர்ஸ்ட்லுக் ஜூன் 9ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் 'ரெமோ'. அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தை '24 ஏஎம் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன்படி வருகின்ற ஜூன் 9 ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அனிருத்தின் தீம் மியூசிக்குடன் வெளியாகவுள்ளது.

இதில் சிவகார்த்திகேயன் 3 வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் இப்படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தற்போது பர்ஸ்ட்லுக்குடன் இணைந்து தீம் மியூசிக் வெளியாவது சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால் #remofirstlook, #RemoThemeMusic போன்ற ஹெஷ்டேக்குகளை உருவாக்கி அவற்றை தேசியளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 9th 2016, 16:31
-

கபாலி டீசரை பயந்து கொண்டேதான் தயார் செய்தேன்!- பா ரஞ்சித்

ரசிகர்கள் எப்படி வரவேற்கப் போகிறார்களோ என்ற பயத்துடன்தான் கபாலி டீசரை நான் உருவாக்கினேன். ஆனால் வெளியான பிறகு தலைவரின் ரசிகர்கள் கொண்டாடியதைப் பார்த்து எனக்கு கண்ணீரே வந்துவிட்டது, என்று இயக்குநர் பா ரஞ்சித் கூறினார். கபாலி டீசர் சர்வதேச அளவில் சாதனைப் படைத்து வருகிறது. இத்தனை குறுகிய காலத்தில் இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமாகப் பார்க்கப்பட்ட டீசர் கபாலிதான் என்கிறார்கள் திரையுலகில்.

இந்த சாதனை ட்ரைலரை உருவாக்கிய பா ரஞ்சித்திடம் அதுபற்றிக் கேட்டால், "உண்மையில் நான் பயந்து கொண்டிருந்தேன், இந்த ட்ரைலரை ரஜிடி ரசிகர்கள் எப்படி வரவேற்கப் போகிறார்களோ என்று. தாணு சாரிடம் இதைச் சொன்னபோது, அவர் அமைதியாக சிரித்துக் கொண்டே தைரியமா பண்ணுங்க என்றார். டீசர் ரிலீசான வேகத்தில் ரசிகர்கள் அதைக் கொண்டாடிய விதத்தைப் பார்த்து கண்ணீரே வந்துவிட்டது. ரொம்ப மகிழ்ச்சியாகிவிட்டது. இப்போது படம் குறித்து மிகுந்து நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்றார்.

மே இறுதியில் ஆடியோ ரிலீஸை வைத்திருக்கிறார்கள். அதற்கடுத்த சில தினங்களிலேயே கபாலி ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 9th 2016, 16:30
-

கோவை சரளாவை காமெடி பேயாகக் காட்டும் லாரன்ஸ்!

பேய்க் கதை மன்னன் என்று பெயர் வாங்காமல் ஓய மாட்டார் போலிருக்கிறது ராகவா லாரன்ஸ். அடுத்தடுத்து அவர் நடிப்பில், இயக்கத்தில் மூன்று பேயப் படங்கள் வரவிருக்கின்றன. இப்போது அவர் நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவாவுக்குப் பிறகு, நாகா படத்தை இயக்கி நடிக்கிறார். இது முனி படத்தின் நான்காம் பாகம் ஆகும்.

இதில் முக்கிய வேடத்தில் நடிப்பவர் ராஜ்கிரண். முனி முதல் பாகத்தில் நடித்தவர் ராஜ்கிரண்தான். இப்போது மீண்டும் லாரன்சுடன் இணைகிறார்.

முனி படத்திலிருந்து ராகவா லாரன்சின் அனைத்துப் படங்களிலும் அவருக்கு அம்மாவாக நடித்து வருபவர் கோவை சரளா. இந்தப் படத்தில் கோவை சரளாவை பேயாக்கி, காமெடி பண்ணப் போகிறாராம் லாரன்ஸ்.

கோவை சரளா இதுவரை எந்தப் படத்திலும் பேய் வேடம் போட்டதில்லை. ஒரு மாறுதலுக்கு பேயாக வந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கப் போகிறார் என்கிறது நாகா யூனிட்.

இந்தப் படத்துக்குப் பிறகு முனி படத்தின் 5-ம் பாகத்தையும் உருவாக்கப் போகிறாராம் லாரன்ஸ். தமிழ் சினிமாவில் ஒரு படத்துக்கு இரண்டாம் பாகம் என்பதே பெரிய விஷயம். ராகவா லாரன்ஸ்தான் முதல் முறையாக 5 பாகங்கள் வரை எடுக்கப் போகிறார்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 9th 2016, 16:28
-

மதகஜராஜா எப்போ வரும்னு கடவுளுக்குக் கூட தெரியாது! - விஷால் விரக்தி

மதகஜராஜா இனி திரைக்கு வரும் என்பதில் விஷாலுக்கே கூட நம்பிக்கை போய்விட்டது போலிருக்கிறது. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலெட்சுமி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'மதகஜராஜா'. ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. 'கடல்' படத்தை விநியோகம் செய்ததில் ஏற்பட்ட பெரும் நஷ்டம் காரணமாக, அவர்களால் மதகஜராஜாவை வெளியிட முடியவில்லை.

'மதகஜராஜா' படத்தை விஷால் வாங்கி வெளியிட முன்வந்தார். அப்போதும் 'கடல்' படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் பிரச்சினை செய்யவே, பட வெளியீட்டை கைவிட்டார் விஷால். அதன் பிறகு விஷால் நடித்த ஆறேழு படங்கள் வந்துவிட்டன.

விஷாலும் நடிகர் சங்க செயலாளராகி, திரையுலகில் முக்கிய ஆளுமையாகிவிட்டார். இந்த நிலையில் படத்தை வரும் மே 13-ம் தேதி வெளியிடப் போவதாக விளம்பரங்கள் வெளியிட்டனர். ஆனால் இப்போது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் வெறுத்துப் போன விஷால், "மதகஜராஜா' எப்போது வெளியாகும் என்பது கடவுளுக்குக் கூட தெரியாது" என்று கமெண்ட் அடித்துள்ளார். விஷால் நடித்த இன்னொரு படம் 'மருது' வரும் மே 20ம் தேதி வெளியாகிறது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 9th 2016, 16:23
-

'போடுங்கடா ஓட்டு... இல்லாட்டி வேட்டு' - 'பீப்' சர்ச்சைக்குப் பிறகு வந்திருக்கும் சிம்பு பாட்டு இது!

சென்னை: வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார் நடிகர் சிம்பு. தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 16 ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டி வருகின்றன.

மறுபுறம் மக்களை 100% வாக்களிக்க வைப்பதற்கு தேர்தல் கமிஷன் பல்வேறு வழிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான சிம்பு வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை எழுதி வருகிறார். தற்போது அப்பாடலின் ஒருசில வரிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்

ஓட்டு போட வேண்டியது உன் கடமை
போடலைன்னா அது உன் மடமை
எதுக்குடா போடணும்னு நினைக்கிறது கொடுமை
அதனாலத் தான் நம்ம நாட்டுல இவ்வளவு வறுமை
நான் ஒருத்தன் போடலைன்னா என்னனு நீ நினைப்ப
உனக்கு வேண்டிய மாற்றத்தை நீயே தான் தடுப்ப
எவன் ஜெயிச்சா எனக்கு என்னனு நீ இருப்ப
தமிழ் நாட்டோட வளர்ச்சியை நீயே தான் கெடுப்ப
போடாம விட்டது பலவாட்டி
போட்டுத்தான் பாருடா இந்த வாட்டி
போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு
போடுங்கடா ஓட்டு அதுக்குத்தான் இந்த பாட்டு

இதுகுறித்து சிம்பு ''தந்தை டி.ராஜேந்தர் பாணியில் எதுகை, மோனையுடன் ஒரு பாடாலை எழுதவேண்டும் என்ற என்னுடைய ஆசை இப்பாடலின் மூலம் நிறைவேறியிருக்கிறது. இன்னும் ஒருசில நாட்களில் இப்பாடல் வெளியாகும்'' என கூறியிருக்கிறார்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 9th 2016, 16:20
-

ஜூன் 3ல் வெளியாகிறது கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி'

சென்னை: ஜூன் 3ம் தேதி 'இறைவி' படத்தை வெளியிடவிருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருக்கிறார். 'பீட்சா', 'ஜிகர்தண்டா' வெற்றிப்படங்களுக்குப் பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் இறைவி'. இதில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, கமாலினி முகர்ஜி, அஞ்சலி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை சி.வி.குமார் தனது திருக்குமரன் எண்டெர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து இப்படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைத்தனர். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் எந்தக் காட்சியையும் நீக்காமல் இப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழை வழங்கி இருக்கின்றனர்.இதையடுத்து வருகின்ற ஜூன் 3ம் தேதி இப்படத்தை வெளியிடவிருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருக்கிறார்.

இதன் மூலம் 'பீட்சா', 'ஜிகர்தண்டா' வரிசையில் இறைவி'யும் இணைந்திருக்கிறது தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் பெறும் படங்களுக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 9th 2016, 16:19
-

ஜி.வி.பிரகாஷின் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'... பாடல்களை வெளியிடுகிறார் அக்ஷய் குமார்!

சென்னை: 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் பாடல்களை இந்தி நடிகர் அக்ஷய்குமார் வெளியிடுகிறார். ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, விடிவி கணேஷ் உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'.

'டார்லிங்' புகழ் சாம் ஆண்டன் இயக்கி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' இசை வெளியீட்டு விழா வருகின்ற 12ம் தேதி நடைபெறுகிறது.

இப்பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் கலந்துகொண்டு, பாடல்களை வெளியிடவுள்ளார். அக்ஷய்குமார் தற்போது ஷங்கர் இயக்கி வரும் '2.ஓ' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார். '2.ஓ' மற்றும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என 2 படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்றொருபுறம் ஜி.வி.பிரகாஷின் அறிமுகப் படமான 'பென்சில்' வருகின்ற 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 9th 2016, 16:18
-

பதவி ஆசை இல்லை என பொய் சொல்ல மாட்டேன்: நடிகர் செந்தில்

திருச்சி: எனக்கு பதவி ஆசையே இல்லை என பொய் சொல்ல மாட்டேன் என்று நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் செந்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். திருச்சிக்கு பிரச்சாரத்திற்காக வந்த அவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் ஜெயலலிதாவுக்கு உள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பொய் தகவல்களை வெளியிட்டு மக்களை திசை திருப்ப முயற்சி செய்து வருகிறது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. அதிமுகவில் சேர்ந்த நாளில் இருந்து கட்சிக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன்.

எனக்கு பதவி ஆசையே இல்லை என பொய் சொல்ல மாட்டேன். அந்த ஆசை உள்ளது. தேமுதிக, த.மா.கா.-மக்கள் நலக் கூட்டணி நிலையானது அல்ல. அதனால் எதையும் செய்ய முடியாது. ஸ்டாலின் பிரச்சாரத்தின்போது பொய் பேசுகிறார். அவர் துணை முதல்வராக இருந்தபோது ஏன் நமக்கு நாமே பயணத்தை மேற்கொள்ளவில்லை? என்றார்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 9th 2016, 16:16
-

போலீஸ், டாக்டர் அடுத்து வக்கீலாக ‘றெக்க’ கட்டும் விஜய் சேதுபதி

சென்னை: றெக்க படத்தில் விஜய் சேதுபதி வக்கீலாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரஞ்சு மிட்டாய் படத்துக்குப் பிறகு பி கணேஷ் தயாரிக்கும் படம் இது. அதாவது விஜய் சேதுபதியின் சொந்தப் படம். நானும் ரவுடிதான், சேதுபதி, காதலும் கடந்து போகும் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தந்த விஜய் சேதுபதி, அடுத்ததாக றெக்க என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் பூஜை நடைபெற்றது

'வா டீல்' படத்தை இயக்கிய ரத்தினசிவா இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 9th 2016, 16:14
-

அஜீத்துடன் இணைந்து நடிக்கக் காத்திருக்கிறேன்- சூர்யா

சென்னை: அஜீத் விருப்பம் தெரிவித்தால் அவருடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார்.

சூர்யா நடிப்பில் உருவான '24' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டைம் டிராவல் கதை என்றாலும் விக்ரம் குமார் தங்களைக் குழப்பவில்லை என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

டைம் டிராவலை மையமாகக்கொண்டு நேற்று முன்தினம் வெளியான படம் '24'. சூர்யா, சமந்தா, நித்யாமேனன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரின் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதன்முறையாக …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 9th 2016, 16:12
-

தாய்க்கு ஒரு கோவில். தாயின் சிலையே பரிசு! நெகிழ வைத்த ராகவா லாரன்ஸ்

தாய்ப் பாசத்தில் இவருக்கு நிகரில்லை யாரும் என்று இளம் தலைமுறைக்குச் சொல்ல வைக்கிறது ராகவா லாரன்ஸின் ஒவ்வொரு செயலும். ஏற்கனவே அம்பத்தூரில் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் கட்டி உள்ளார். அந்த கோவில் எதிரிலேயே அவரது தாய் கண்மணிக்கும் ஒரு கோயில் கட்டிக் கொண்டிருக்கிறார். அது முடிவடையும் கட்டத்தில் உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் திறக்கப்பட உள்ளது.

கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த கோவிலின் புகைப்படத்தையும் ராஜஸ்தானில் வடிவமைக்கப் பட்டுக் கொண்டிருக்கும் தனது தாயாரின் சிலையின் புகைப்படத்தையும் இன்று அன்னையர் தினத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.



[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 9th 2016, 16:09
-

போலீஸ் கெட்டப்புக்கு நானும் ரெடி..! - உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தற்போதைய சூழ்நிலையில் படத்தைத் தயாரித்து, சொந்தமாக வெளியிடுவது தான் பெரிய சாதனையாக இருக்கிறது என நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மனிதன்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் வக்கீலாக நடித்த உதயநிதியின் நடிப்பு பாராட்டப்பட தொடர்ந்து இதுபோன்ற படங்களில் நடிக்க உறுதி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனக்கு ஏற்ற கதை அமைந்தால் போலீஸ் வேடங்களில் நடிக்கத் தயார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் உதயநிதி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து உதயநிதி '' 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்குபின் 'மனிதன்' திரைப்படம் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இப்படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக பலரும் பாராட்டுகின்றனர்.

குறிப்பாக இப்படத்தைப் பார்த்த பின் எனது தந்தை என்னை கட்டியணைத்துப் பாராட்டினார்.இப்படத்தின் பெயர் தமிழ்ச்சொல் அல்ல என்று கூறி வரிவிலக்கு வழங்க மறுக்கின்றனர். வரிவிலக்கு வழங்குவதில் தற்போதைய அரசு பாரபட்சம் காட்டுகின்றது. 'கெத்து' படத்திற்கு போராடி வரிவிலக்கு பெற்றேன். அதேபோல இப்படத்திற்கும் போராட வேண்டும் என நினைக்கிறேன்.நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் போலீஸ் வேடங்களில் நடிக்கவும் ஆர்வம் கொண்டுள்ளேன். தற்போதைய சூழ்நிலையில் படத்தைத் தயாரித்து, சொந்தமாக வெளியிடுவது தான் பெரிய சாதனையாக இருக்கிறது'' என்று கூறியிருக்கிறார்.


Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 9th 2016, 16:08
-

பெத்தவங்ககிட்ட அதிகம் பேசுங்க!- சசிகுமார்

நான் சினிமாவை நோக்கிக் கிளம்பினப்ப, அதில் கொஞ்சம்கூட விருப்பம் இல்லாமல், ஆனாலும் என்னோட ஆசைக்கு குறுக்கே நிற்காமல் வழியனுப்பி வைச்சது அம்மாதான். எனக்குப் பிடிச்சதை நான் செய்யணும்கிறதில் ‪அம்மா‬ உறுதியா இருப்பாங்க. 'வீட்டுக்கு வாரப்ப சினிமாவைப் பத்தி யாரும் அவன்கிட்ட கேட்கக்கூடாது'ன்னு 'சுப்ரமணியபுரம்' படத்துக்கு முன்னாலேயே அம்மா சொல்லி வைச்ச சொல்... இன்னிக்கு வரைக்கும் அப்படியே இருக்கு. வீட்ல யாரும் என்கிட்ட சினிமா பத்தி பேசவே மாட்டாங்க.

'சுப்ரமணியபுரம்' ஜெயிச்ச நேரம். வீட்டுக்கு வந்தேன். 'அதான் ஒரு டைரக்டரா ஜெயிச்சிட்டியேப்பா... இனியும் அங்கபோயி …


[ Full reading ]

Comments: 0

 
 
-Selva Kumar Share this topic

-on May 9th 2016, 16:01
-

லோட்மேன் பாத்திரத்துக்குப் பொருத்தமானவர் விஷால்

மருது என் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மண்மனம் மாறாத மீண்டும் கிராமிய திரைப்படமாக இருக்கும். ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதைதான் மருது. தாய் தகப்பனை இழந்தவர்களுக்கு முதலில் கைகொடுப்பது பாட்டியாகத்தான் இருக்கும். அது மகன் வழி வந்த பேரன் பேத்தி ஆக இருந்தாலும் சரி, மகள் வழி வந்த பேரன் பேத்தி ஆக இருந்தாலும் சரி. நம்முடைய பெற்றோர்களை தாண்டி நம் பாட்டி நமக்கு வாங்கி கொடுக்கும் பொருட்கள் நிச்சயம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். பாட்டி பேரன் என்ற தவிர்க்க முடியாத உறவைப் பற்றி பேசும் படம்தான் மருது.

உலகத்தில் உழைக்கும் வர்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் …


[ Full reading ]

Comments: 0

Social bookmarking
Social bookmarking reddit      

Bookmark and share the address of FILMS OF INDIA on your social bookmarking website

Most active topic starters
Selva Kumar
Films of India - Sign of Cinema - Portal Vote_lcapFilms of India - Sign of Cinema - Portal Voting_barFilms of India - Sign of Cinema - Portal Vote_rcap 
Films of India
Films of India - Sign of Cinema - Portal Vote_lcapFilms of India - Sign of Cinema - Portal Voting_barFilms of India - Sign of Cinema - Portal Vote_rcap 
Admin
Films of India - Sign of Cinema - Portal Vote_lcapFilms of India - Sign of Cinema - Portal Voting_barFilms of India - Sign of Cinema - Portal Vote_rcap 

Top posting users this week
No user