|
'பள்ளிப் பருவத்திலே' திரைப்படம் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என அதன் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் கூறியுள்ளார். ஒரு தலைமை ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவர்களை படிப்பிலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்குகிறார்.
அவரிடம் படித்த அத்தனை மாணவர்களும் …
[ Full reading ]
Comments: 0
இந்தப் படத்தை மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் படங்களை இயக்கிய துளசிதாஸ் என்பவர் இயக்குகிறார். இவர் தமிழுக்கு அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.குமார் பாடல்களுக்கு இசையமைக்க ஆரோல் கொரோலி பின்னணி இசையமைக்கிறார்.
இப்படத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இப்படத்தில் ஒரேயொரு காட்சியில் கூட ஆண்கள் நடிக்கவில்லை என்பதுதான்.
கதையின் போக்கில் ஏற்படும் சம்பவங்கள் உண்மை சம்பவங்களாக மாறுகிறது. இதன் பின்னணியில் திரில்லர் கதையோட்டத்துடன் சஸ்பென்ஸ், அதிரடி கலந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இம்மாதம் இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments: 0
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. இவரின் சாதனையை பிரதமர் உட்பட பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில், நடிகர் ரஜினியும் சிந்துவைப் பாராட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், 'சிந்து நான் உங்கள் ரசிகர் …
[ Full reading ]
Comments: 0
கெட்டப்புகளாகட்டும், நடிப்பாகட்டும் வித்தியாசத்தை நாடுபவர் உலக நாயகன் கமல் ஹாஸன். இந்நிலையில் அவருக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளது.
இதையடுத்து ட்விட்டரில் கமலுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.
Comments: 0
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் எனப் பலமொழிகளில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் கமல். தமிழில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
ஏற்கனவே, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூசன் மற்றும் மாநில அரசின் கலைமாமணி போன்ற விருதுகளைப் பெற்றவர் கமல். இதுதவிர தேசிய விருது 3 முரையும், 19 முறை பிலிம்பேர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
மிக உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாச்சாரத்துறை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பாற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
முன்னதாக கடந்த 1997ம் ஆண்டு மறைந்த நடிகர் சிவாஜிகணேன் இந்த விருது பெற்றார். தற்போது அவரது கலையுலக வாரிசாகக் கருதப்படும் கமலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
செவாலியே விருது குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து கமலுக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கமல் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments: 0
இந்தியாவில் இந்த விருதை சினிமா பிரபலங்களான நான்கு பேர் இதுவரை பெற்றுள்ளனர். ஐந்தாவதாக இந்த விருதுப் பட்டியலில் கமல் தற்போது இணைந்துள்ளார். இதேபோல், தமிழில் இந்த விருது கடந்த 1997ம் ஆண்டு மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கு கிடைத்தது. தற்போது அவரது கலையுலக வாரிசான கமலுக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் செவாலியே விருது பெறும் இரண்டாவது நடிகர் என்ற பெருமையையும் கமல் பெற்றுள்ளார்.
இதுவரை செவாலியே விருது பெற்ற இந்திய திரைப்பிரபலங்களின் விபரமாவது:
1987ம் ஆண்டு வங்காளத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே
1997ம் ஆண்டு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
2007ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப்
2014ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான்
2016 ஆண்டு நடிகர் கமல்ஹாசன்
Comments: 0
நீண்ட நாட்களாக கிடப்பிலிருந்த படம் இது நம்ம ஆளு. சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான படம் இது.
பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பல முறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட இந்தப் படம் ஒருவழியாக இன்று வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை திரையிட தடை விதிக்கக் கோரி புரசைவாக்கத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார் லால்வானி …
[ Full reading ]
Comments: 0
அடுத்து இப்போது மீரா ஜாக்கிரதை. இந்த படத்தில், பாபிசிம்ஹா முக்கிய வேடத்தில் நடித்து இருப்பதாக அவரது படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், ‘மீரா ஜாக்கிரதை' படத்தில் நான் …
[ Full reading ]
Comments: 0
தேர்தல் பரபரப்பு காலத்தில் தியேட்டர்களுக்கு கூட்டம் வராது என்பதால், பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை திரைக்கு கொண்டு வரும் தேதியை சில வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். விஜய்யின் ‘தெறி,' உதயநிதியின் ‘மனிதன்,' சூர்யாவின் ‘24' ஆகிய படங்கள் மட்டும் தேர்தலுக்கு மத்தியில் வெளியானது. தற்போது தேர்தல் முடிந்ததை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட பல படங்கள் திரைக்கு வருகின்றன. விஷாலின் ‘மருது' படம் ஓட்டு எண்ணிக்கை முடிந்த மறுநாளான கடந்த 20-ந்தேதி வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
‘இது நம்ம ஆளு,' ‘உரியடி,' …
[ Full reading ]
Comments: 0
சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, ஜெய், சூரி இணைந்து நடித்திருக்கும் இப்படத்துக்கு குறளரசன் இசையமைத்திருக்கிறார்.
பாண்டிராஜ்-டி.ராஜேந்தர் இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்நிலையில் பாக்ஸ் ஆபீஸில் இப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும்.
3 வருடங்கள் கடந்தாலும் கூட சிம்பு-நயன்தாராவின் கெமிஸ்ட்ரியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருவரும் ஏற்கனவே நிஜமான காதலர்கள் என்பது தான் ரசிகர்களின் இந்த அபரிமிதமான …
[ Full reading ]
Comments: 0
மருதுவைத் தொடர்ந்து விஷால் தற்போது சுராஜ் இயக்கத்தில் 'கத்திச்சண்டை' படத்தில் நடித்து வருகிறார்.இதில் விஷாலுடன் இணைந்து தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கியபோது விஷாலின் தோள்பட்டையில் அவருக்கு அடிபட்டது. இதனைத் தொடர்ந்து அருகிலிருந்த மருத்துவமனையில் விஷாலுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. காயம் பட்டாலும் கூட படப்பிடிப்பில் விஷால் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இந்த விபத்து குறித்து விஷால் ''தோள்பட்டையில் அடிபட்டுள்ளது. பெரிய அளவில் காயமில்லை. மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். அடிபட்டும் விஷால் படப்பிடிப்பில் கலந்து கொண்டது படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்றொருபுறம் விஷாலின் மருது, 'ராயுடு' என்ற பெயரில் இன்று தெலுங்கு மொழியிலும் வெளியாகியிருக்கிறது. 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ராயுடுவுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Comments: 0
பாண்டிராஜ் இயக்கம், சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி போன்ற காரணங்களால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. பல்வேறு தடைகளைத் தாண்டி வெளியான இது நம்ம ஆளு ரசிகர்களைக் கவர்ந்ததா? என்று பார்க்கலாம்.
'சண்டைக் காட்சி இல்லாவிட்டாலும் இது நம்ம ஆளு படம் நன்றாக இருக்கிறது. சிம்பு நாயகனாக ஜெயித்து விட்டார்' என்று ராஜேஷ் பாராட்டியிருக்கிறார்.
'சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி சூப்பர். மொத்தத்தில் இது நம்ம ஆளு நன்றாக இருக்கிறது' என விஜேஷ் கூறியிருக்கிறார். 'சிம்பு-சூரி காமெடியும், சுவாரசியமான திரைக்கதையும் சூப்பர்' என ஜோஷ் மனமாரப் பாராட்டியிருக்கிறார்.
'கண்ணாமூச்சி ரே ரே' அஜீத் ரெபரன்ஸ் படத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி மகிழ்ந்திருக்கிறார் அஜித்சதா.
'இது நம்ம ஆளு முதல் பாதி ஜாலியா இருக்கு. குறிப்பா சூரி-சிம்பு காமெடி சூப்பர்' என்று மகிழ்ச்சியுடன் ஹரி திவாகர் கூறியிருக்கிறார். மொத்தத்தில் 'இது நம்ம ஆளு' நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மேலும் பல ரசிகர்களின் பதிவுகளால் #idhunammaaalu ஹெஷ்டேக் தற்போது தேசிய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments: 0
அங்கிருந்து அவர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், "சபாஷ் நாயுடு' என்ற எங்கள் புதிய திரைப்பட படப்பிடிப்புக்கு நானும், எங்கள் திரைக்குழுவை சேர்ந்தவர்களும் லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து சேர்ந்திருக்கிறோம். எங்களுக்கு மிகுந்த உற்சாகமளிக்கும் இந்த தயாரிப்பின் தொடக்க கட்டங்களே முழுவீச்சில் அமைந்துள்ளன.
திரைத்துறையின் ஏறத்தாழ அனைத்து திரைப்பட …
[ Full reading ]
Comments: 0
தமிழில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் ஒக்கடு, சிம்ஹத்ரி, குஷி போன்ற வெற்றிப் படங்களினால் தெலுங்கின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
திருமணத்திற்குப் பின் இவரின் மார்க்கெட் சரிந்து விட்டது. இதனால் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் குணச்சித்திர நடிகையாக பூமிகா நடித்து வருகிறார். தற்போது கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்(M.S. Dhoni: The Untold Story), டோணியின் அம்மாவாக பூமிகா நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர், ''இப்படம் எனக்கு நல்ல திருப்புமுனைப் படமாக அமையும்,'' என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
டோணியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை நீரஜ் பாண்டே இயக்கி வருகிறார். இதில் டோணியாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தும், விராட் கோலியாக பவத் கானும், ஜாகீர் கானாக கவுதம் குலாட்டியும் நடித்துள்ளனர். இது தவிர சுரேஷ் ரெய்னா வேடத்தில் ராம் சரணும், டோணியின் நண்பராக ஜான் ஆப்ரகாமும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.
Comments: 0
ரஜினி நடிப்பில் இப்போது கபாலி படம் முடிந்துள்ளது. வரும் ஜூலை முதல் வாரம் படம் வெளியாகவிருக்கிறது.
ரஜினி நடித்து வரும் இன்னொரு படம் 2.ஓ. இந்தப் படத்தை ஷங்கர் இயக்குகிறார். இருகட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லியில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் கோடை விடுமுறையைக் கழிக்க ரஜினியும் குடும்பத்தினரும் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு இரு வாரங்கள் ஓய்வெடுத்த பிறகு, சென்னை திரும்பும் ரஜினி, கபாலி இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார்.
அதன் பிறகு மீண்டும் 2.0 படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.
Comments: 0
றெக்க என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அவருக்கு இதில் ஜோடி போட்டிருப்பவர் லட்சுமி மேனன். படப்பிடிப்பு காரைக்குடிக்குப் பக்கத்தில் கானாடுகாத்தான் கிராமத்தில் நடந்து வருகிறது.
காரைக்குடிக்கு வந்த சில சுற்றுலாப் பயணிகள் கானாடு காத்தானில் உள்ள கோவிலுக்குப் போயுள்ளனர். அப்போது நடை சாத்தப்பட்டிருந்ததால் என்ன செய்யலாம் …
[ Full reading ]
Comments: 0
10 ஆண்டுகளுக்கு மேல் நடித்தும் இன்னும் சொந்தக் குரலில் தமிழ்ப் பேசத் தெரியாத நடிகைகளுக்கு மத்தியில் தமன்னாவின் தமிழ்ப் பற்று வியக்க வைத்துள்ளது.
எது செய்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என நினைப்பேன். அப்படித்தான் இது நடந்தது. நான் தமிழ் பேசுவதை கண்டு பலர் ஆச்சரியமாக கேட்டிருக்கிறார்கள். பரவசத்துடன் பார்த்தவர்களும் உண்டு.
தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும் போது, நிச்சயம் ஒரு நாள் தமிழில் பேச வேண்டும் என எண்ணினேன். அதற்கான பயிற்சிகளை தினம் தினம் எடுத்து வந்தேன். அதனால்தான் இந்தளவுக்கு என்னால் பேச முடிகிறது.
என்னைப் பொருத்தவரை எளிதில் கற்றுக் கொள்ள கூடிய மொழி தமிழ்தான். இது நான் உணர்ந்தது. மற்றவர்களும் உணர்ந்தால் தமிழில் பேசலாம்.
இப்போது மலையாளம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என தென்னகத்து மொழிகளில் பேசுவது எனக்கு கை வந்த கலை.
கிளாமர், நடனம் என்று மட்டுமே ஆடுவது ஹீரோயினின் வேலையாக இருக்க முடியாது. டப்பிங் பேசினால் அதில் ஒரு பூரணம் கிடைக்கும். அதனால்தான் இந்த முயற்சி".
Comments: 0
பெரும் வெற்றிப் பெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் இது. எந்திரன் பெயரைப் பயன்படுத்தாமல் 2.0 என்ற புதுத் தலைப்பைச் சூட்டியுள்ளார் ஷங்கர்.
இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பணம், லொகேஷன்கள் என எதிலும் சமரசமில்லாமல், ஷங்கர் கேட்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து படத்தை எடுத்து …
[ Full reading ]
Comments: 0
நாடக நடிகை, காமெடி நடிகை, பாடகி, வில்லி, தயாரிப்பாளர் என்று பன்முகங்கள் கொண்டவர்.
தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் 1500க்கும் அதிகமான படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.
5 முதல்வர்களுடன் சேர்ந்து நடித்தவர், 5 தலைமுறையினரை தனது நடிப்பால் மகிழ்வித்தவர் என்ற பெருமை இவருக்குண்டு.
4 தலைமுறை நடிக, நடிகையருடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.
நடிகையாக அறிமுகமான முதல் படம் மாலையிட்ட மங்கை. …
[ Full reading ]
Comments: 0
சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், "ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டார் பற்றி எல்லாரும் நிறைய சொல்லிக் கேட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன். ஆனால் அந்த மனிதருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்பேன்.
இப்படி ஒரு நடிகரை, மனிதரை, அற்புதமான மனிதாபிமானியை நான் எங்கும் பார்த்ததில்லை. என் வாழ்க்கையில் இப்படி ஒருவரை இனியும் பார்ப்பேனா என்று தெரியவில்லை.
எளிமை என்பதற்கு அர்த்தத்தை அவரைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நான் ஒன்றும் பெரிய நடிகை இல்லை. தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு இடம் கூட இல்லை.
ஆனால் கபாலி முதல் நாள் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள நான் சென்றபோது, என்னை வரவேற்க சூப்பர் ஸ்டார் ரஜினி சார் கேரவனுக்கு வெளியில் காத்திருந்தார். எனக்கு நடுக்கமாகிவிட்டது. அவரோ நான் இயல்பு நிலைக்கு வரும் வரை காத்திருந்து, நடிக்கச் சொன்னார். அதான் சூப்பர் ஸ்டார்!
நான் இதுவரை பார்த்த ரஜினி படங்களிலிலிருந்து வேறு லெவலில் இருக்கும் கபாலி. ரஜினி புதுப் பரிமாணம் காட்டியுள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரும் விருந்தாக இருக்கும்," என்று கூறியுள்ளார்.
Comments: 0
சர்ச்சை நாயகன் சிம்பு நடிப்பில், வருமா வராதா என்று கேள்வியுடன் இன்னும் பெட்டிக்குள் இருக்கும் படம் இது நம்ம ஆளு. கடைசியா மே 27 ரிலீஸ் தேதி என்று அறிவித்துள்ளனர்.
இந்தப் படம் குறித்து சிம்பு தந்துள்ள பேட்டி இது: 'இது நம்ம ஆளு' போன்ற உணர்ச்சிகரமான காதல் கதையில் நான் பயணித்தது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு முழு காரணாமாக செயல்பட்டு, பல கடினமான தருணங்களில் பொறுமையைக் கையாண்ட இயக்குநர் பாண்டிராஜுக்கு எனது நன்றிகளை …
[ Full reading ]
Comments: 0
பல்வேறு தடைகளைத் தாண்டி 'இது நம்ம ஆளு' நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. காதல் முறிவிற்குப் பின் சிம்பு-நயன்தாரா முதன்முறையாக இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். பாண்டிராஜின் முதல் நகரத்துக் காதல் கதையாக 'இது நம்ம ஆளு' உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்த சில விஷயங்களை நடிகர் சிம்பு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இப்படம் குறித்து …
[ Full reading ]
Comments: 0
இந்த நிலையில் இந்தப் படம் குறித்து சில தகவல்களைத் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். இந்தப் படத்தில் நடிக்கும் நாயகர்களில் இவரும் ஒருவர். இவருடன் அதர்வா, அர்விந்த்சாமி, ராணா டக்குபதி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்போது கத்திச் சண்டை படத்தில் நடித்து வரும் விஷால், இந்தப் படம் முடிந்த பிறகு ஒரு ரீமேக் படத்தில் நடிக்கிறார். அதன் பிறகு தனது முழு கால்ஷீட்டையும் பாலாவுக்குத் தந்திருக்கிறாராம்.
இந்தப் படம் ஜனவரி 2017-ல் தொடங்குகிறதாம்.
Comments: 0
சபிரா ஹுசைன் (21) என்பவர் மாடலிங், நிகழ்ச்சி தொகுப்பாளர், மார்கெட்டிங் என பல்வேறு வேலைகள் செய்துவருகிறார். அவர் பல்வேறு விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் தான் தற்கொலை செய்யப்போவதாக கூறி வீடியோ ஒன்றை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
அதில் ஒருவேளை நான் தற்கொலை செய்துகொண்டால், எனது தற்கொலைக்கு காரணம் தனது காதலன் நிர்ஜார் தான் என தெரிவித்துள்ளார். சபிரா ஹுசைன், காதலன் நிர்ஜார் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென சபிரா ஹுசைனை திருமணம் செய்ய அவரது காதலர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சபிரா ஹுசன் தனது அபார்ட்மென்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், அபார்ட்மன்டில் இருந்து சபிரா ஹுசனின் உடலை போலீசார் மீட்டனர். இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments: 0
ஆனால், அப்படியிருந்தும் திடீரென திரையுலகில் இருந்து விலகி வேறு துறையில் கால் பதித்து அதிலும் வெற்றிபெற்றார். சில காலம் அரவிந்த்சாமி என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்து. விபத்துள்ளாகி கவலைக்கிடமாவும் இருந்தார் அரவிந்த்சாமி. மிக குறுகிய நட்பு வட்டார …
[ Full reading ]
Comments: 0
விழாவில் நடிகர் சீனிவாசன் பேசும்போது ''சினிமாவில் முன்பெல்லாம் சில்க்கை அதிகமாக கூப்பிட்டார்கள்.இப்போது என்னை அதிகமாக கூப்பிடுகிறார்கள். இதனால் நான் ஆம்பள சில்க்கா இல்லை பொம்பள சில்க்கா என்று எனக்கே தெரியவில்லை. இன்று நான் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நான் பட்ட கஷ்டங்கள் தான். இப்போது எனக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனைப் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இதனால் சினிமாவிற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றுகிறது. சினிமாவில் எனக்குப் போட்டியாக நான் கருதுவது ரஜினியைத் தான். ரஜினி இன்று இந்த நிலையில் இருக்க அவர் பட்ட கஷ்டங்களே காரணம் என்பது எனக்குத் தெரியும். அவர் போலவே நானும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்'' என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான சீனிவாசன் சமீபத்தில் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Comments: 0
"இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவைப் பொழுதுபோக்குப் படம். யாரும் முகம் சுழிக்காத வகையில் காமெடிக் காட்சிகளை அமைத்துள்ளோம். தற்போது பேய்க் கதைகள், போலீஸ் கதைகள், காதல் கதைகள் என எல்லா வகையான படங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
…
[ Full reading ]
Comments: 0
இந்த நேரத்தில் அவரின் நகைச்சுவை வசனங்களிலிருந்து ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.
'நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும் .. நாம ரெண்டு பேரு யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்...
'பத்த வச்சிட்டியே பரட்டை..'
'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..'
*"ஏன்டா, எவன கேட்டாலும் மலேசியாவுல இருந்து காசு வருது, …
[ Full reading ]
Comments: 0
இந்நிலையில், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘மறைந்த திரைப்பட மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் இரண்டு மாணவர்களின் கல்விச்செலவை நடிகர் சங்கம் ஏற்றுக்கொண்டது' எனத் தெரிவித்தார். அதோடு, இந்த சந்திப்பின் போது, ‘எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடவிருக்கிறோம். நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவிற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை அழைக்கவிருக்கிறோம்''என்றார்.
Comments: 0
அதில், "பல கோடி முதலீடு செய்து தயாரிக்கப்படும் திரைப்படம் தியேட்டரில் ரசிகர்கள் ரசித்தால் மட்டுமே போட்ட முதலீட்டை திரும்ப எடுக்க முடியும்! இதில் தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் திருட்டு விசிடி ஆகியவற்றின் பாதிப்புகளை மீறி வெற்றி பெற போராட வேண்டிய நிலை, இது திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினர்களுக்கும் சவாலாக உள்ளது.
இந்நிலையில் தனியார் பேருந்துகளில் சட்டவிரோதமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது சமீபகாலங்களில் சர்வ சாதாரணமாகி விட்டது. அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களை மீறிப் பேருந்தை ஓட்டுவதும், பயண சீட்டு எடுக்காமல் பயணம் செய்வதும் எப்படி சட்டவி ரோதமானதோ, அது போலவே திருட்டு விசிடியை பஸ்களில் ஒளிபரப்புவதும் சட்ட விரோதமானதே!
அதனால், திரை உலகை காப்பாற்ற நாங்கள் பல நிலைகளில் போராடி வருகிறோம். அதற்காக தமிழகமெங்கும் எங்கள் நடிகர்களின் ரசிகர் மன்றங்களின் மூலமாக பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை தங்கள் கவனத்தை மீறி ஓட்டுநர்களால் இந்த தவறு நடந்திருந்தால் இனிமேல் இது நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம். இதற்கு தங்களுடைய முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார்.
Comments: 0
கவுண்டமணி பேசிய பல வசனங்கள் காலம் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில் கவுண்டமணியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் #hbdgoundamani என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் தாண்டி வேறு மொழியில் நடிக்காத கவுண்டமணியின் பிறந்த நாள் இன்று தேசிய அளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.
Comments: 0
விழாவில் இயக்குநர் எழில் மாறன் பேசியது, "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் எனக்கும் நாயகன் விஷ்ணு விஷாலுக்கும், இசையமைப்பாளர் சத்யாவிற்கும் 10 ஆவது …
[ Full reading ]
Comments: 0
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 24 விளம்பரப்படங்களில் பிரியங்கா சோப்ரா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.இதற்காக தொடர்ந்து 40 நாட்களை அவர் ஒதுக்கியிருக்கிறார். இந்த விளம்பரப் படங்களின் மூலம் பிரியங்காவிற்கு வரும் வருமானம் சுமார் 100 கோடிகள் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் குறுகிய நாட்களில் 100 கோடிகளுக்கு அதிபதியாக பிரியங்கா மாறப் போகிறார்.
ஹாலிவுட் சீரியல்+ பட வாய்ப்புகள், ஆஸ்கர் விழா, ஒபாமா விருந்து போன்ற காரணங்களால் பிரியங்கா சோப்ராவின் புகழ் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு விளம்பரக் கம்பெனிகளும் பிரியங்காவை தங்களின் விளம்பரத் தூதுவராக நியமிக்க போட்டிபோட்டு வருகின்றன.
Comments: 0
தூங்காவனம் படத்துக்குப் பிறகு கமல் ஹாஸன் நடிக்கும் புதிய படம் சபாஷ் நாயுடு. தசாவதாரம் படத்தில் வரும் பல்ராம் நாயுடு பாத்திரத்தை விரிவாக்கி கமல் உருவாக்கியுள்ள திரைக்கதை இது.
இந்தப் படத்தில் கமலுடன் அவர் மகள் ஸ்ருதி முதல் முறையாக இணைந்து நடிக்கிறார். பிரமானந்தம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படம் முழுக்க கமலுடன் பயணிக்கும் பாத்திரம் அவருக்கு.
கடந்த மே 14-ம் தேதியே கமல் ஹாஸன் தன் குழுவினருடன் அமெரிக்கா செல்லவிருந்தார். ஆனால் தேர்தல் காரணமாக தனது பயணத்தைத் தள்ளி வைத்தார்.
அந்த இடைவெளியில் படக்குழுவினருடன் திரைக்கதை வாசிப்பு முகாமில் ஈடுபட்டார். ஸ்ருதிஹாஸன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். படத்தின் திரைக்கதையை ஒருவருக்கொருவர் படித்துக் காட்டிக் கொள்வதுதான் இந்த முகாமின் நோக்கம்.
இப்போது அனைத்து முன் தயாரிப்பு வேலைகளும் முடிந்துவிட்டதால், படப்பிடிப்புக்காக திங்கள்கிழமை இரவு லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டனர்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகிறது. நேரடிப் படம் என்பதால் மூன்று மொழிகளுக்கும் மூன்று ஸ்க்ரிப்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கமல் கூறுகையில், மூன்று ஸ்க்ரிப்டுகள் தயார். மூன்றையும் எடுத்துக் கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டுவிட்டோம். இதற்கு மேல் தாமதம் செய்தால் அமெரிக்க படப்பிடிப்பு திட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுவிடும்," என்றார்.
Comments: 0
இந்நிலையில் தம்பி கார்த்தி, தந்தை சிவகுமாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக்காக நான் காத்திருக்கிறேன் என்று சூர்யா கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் ''ஏற்கனவே 'மனம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நாங்கள் மூவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.ஆனால் ஒரு ரீமேக் படத்தில் நடிப்பதை விட புதிய கதையில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
ஏனெனில் நாங்கள் மூவரும் இணைந்து நடிக்கும் படம் எனது வாழ்வில் மறக்க முடியாத படமாக இருக்கும்'' என்று கூறியிருக்கிறார். 'சிங்கம்', 'சிங்கம் 2' வெற்றியைத் தொடர்ந்து அதன் 3 வது பாகமான 'எஸ் 3' படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.இதனைத் தொடர்ந்து 'கபாலி' ரஞ்சித்தின் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
Comments: 0
அக்கடையில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வீடியோ பைரசி கண்காணிப்பாளர் ஜெயலக்ஷ்மி ஐ.பி.எஸ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் மதுரையில் உள்ள பாலரங்கபுரம் என்னும் பகுதியில் உள்ள குடோனில் இந்த கும்பலை போலீசார் பிடித்தனர். அத்துடன் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள கணினி இயந்திரங்களும் மற்றும் புதிய படங்களை பதிவு செய்துள்ள டிவிடிகளைும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் ஒரு குடோனில் 20 பேர் திருட்டு டி.வி.டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இங்கிருந்துதான் தர்மபுரி , சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பத்து மாவட்டத்துக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் கிடைத்து. இதுகுறித்து விஷால் மற்றும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் புகாரின் அடிப்படையில் அங்குள்ள திருட்டு டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் கிச்சாபாளையம் பகுதில் இயங்கி வந்த திருட்டு டி.வி.டி தயாரிக்கும் இடமும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
Comments: 0
முன்னணி நடிகையான சமந்தா பற்றி கடந்த சில தினங்களாக தொடர்ந்து சர்ச்சை செய்திகள் வலம் வருகின்றன.
அவர் சினிமாவிலிருந்து விலகப் போவதாகவும், விரைவில் திருமணம் நடக்கப் போவதாகவும் சிலர் செய்தி வெளியிட்டிருந்தனர். ஒரு இளம் நாயகனைக் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்று சமந்தாவே பேட்டி கொடுத்ததாக ஒரு நாளிதழ் தெரிவித்ததுதான் லேட்டஸ்ட்.
இந்த செய்திகளுக்கு ஒவ்வொரு முறையும் சமந்தா மறுப்பு தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது. அவர் மறுப்பு தெரிவித்த அடுத்த நாள் வேறொரு வதந்தி கிளம்பும்.
இந்த திருமண வதந்திக்கும் சமந்தா ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், "நானாக சொல்லும் முன் என் திருமணம் குறித்துப் பேச வேண்டாம். நான் நான் நான் சமந்தாவாகிய நானே சொல்கிறேன். நன்றி," எனக் குறிப்பிட்டுள்ளார்.
Comments: 0
அஜீத்தின் 'தீனா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.
2 வது முறையாக இருவரும் இணையவிருந்த 'மிரட்டல்' ஒருசில காரணங்களால் கைவிடப்பட்டது.இந்நிலையில் மீண்டும் இருவரும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜீத்-சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான இப்படம் அஜீத் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அஜீத்திற்கு முதன்முதலில் தல என்ற அடையாளத்தைக் கொடுத்தவர் என்ற பெருமையும் முருகதாஸுக்கு உண்டு.
தீனாவைத் தொடர்ந்து மிரட்டல் என்ற …
[ Full reading ]
Comments: 0
கார்த்திக்கு மெக்ஸிகன் உணவு வகைகள் என்றால் கொள்ளைப் பிரியமாம். அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட ரெஸ்ட்ரெண்டில் கிடைக்கும் இவ்வகை உணவுகளின் ருசி வேறெங்கும் வராது என்று நண்பர்களிடம் ரசித்துச் சொல்வார்.
நிறங்களில் கருப்பு, வெள்ளை, ஊதா போன்ற 3 நிறங்களும் கார்த்திக்கு மிகவும் பிடித்தவை. கார்த்தியின் பெரும்பாலான உடைகள் இந்த நிறங்களின் அடிப்படையில் தான் அமைந்திருக்கும்.
ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது கார்த்தியின் வழக்கம்.
இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் கார்த்தி முதன்முதலாக வாங்கிய சம்பளம் 5௦௦௦ ரூபாய்.
நடிகராவதற்கு முன் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவும், அமெரிக்காவில் பார்ட் டைம் கிராபிக் டிசைனராகவும் வேலை பார்த்திருக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் கார்த்தியை ரசிகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்தலாம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி...
Comments: 0
இந்தப் படத்தில் முற்றிலும் வித்தியாசமான கூட்டணி அமைந்திருப்பதால், படத்துக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. அதை மேலும் அதிகரித்துவிட்டது, சமீபத்தில் வெளியான கபாலி டீசர். 2 கோடி பார்வைகளைப் பெற்று இந்த டீசர் சர்வதேச அளவில் பிரபலமாகிவிட்டது.
இதனைத் தொடர்ந்து கபாலியின் மலாய் மொழி டீசரை வெளியிட்டுள்ளனர். இந்த டீசருக்கு மலேசிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் முறையாக மலாய் மொழியில் டப் செய்யப்பட்ட இந்தியப் படம் என்ற பெருமை கபாலிக்கு கிடைத்துள்ளது. இந்தப் படம் மலேசியாவில் ஏராளமான திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
Comments: 0
1970-ம் ஆண்டு திரையுலகில் கால் பதித்த இவரை இன்று வரை இந்த திரையுலகமே கொண்டாடுகின்றது. இன்றைக்கும் என்றைக்கும் அவருக்கு நிகர் அவரே..
இன்று அவரது பிறந்தநாளினை ஒட்டி அவரை பற்றிய ஒரு சில நீங்கா நினைவுகள், தருணங்கள் மற்றும் ஒருசில சுவாரஸ்யமான தகவல்களையும் …
[ Full reading ]
Comments: 0
இதைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் பொன்ராம், ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்தடுத்து இவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த 2 படங்களையும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கப் போவதாக கூறப்படுகிறது. 'இன்று நேற்று நாளை' படத்தின் முதல் பாகத்தில் ஆர்யா ஒரு காட்சியில் நடித்திருந்தார்.
இதனால் அப்படத்தின் 2 வது பாகத்தில் ஆர்யா நாயகனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.தற்போது சிவகார்த்திகேயனை ரவிக்குமார் இயக்கப் போவதாக கூறுகின்றனர். மற்றொருபுறம் பொன்ராம்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. இதனால் 3 வது முறையாக இவர்கள் இணையும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments: 0
அஜீத்-திரிஷா நடித்த கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஜய். கிரீடத்தில் விஜய் முத்திரை பதிக்கவில்லை எனினும் 'மதரசாப்பட்டினம்', 'தெய்வத் திருமகள்' ஆகியவை இவருக்கு சொல்லிக் கொள்ளும் படங்களாக அமைந்தன. வெற்றி, தோல்வி என மாறிமாறி பயணிக்கும் விஜய் …
[ Full reading ]
Comments: 0
பல்வேறு காரணங்களால் தள்ளிப் போன 'இது நம்ம ஆளு' வருகின்ற 27ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நல்ல படம் அமைந்தால் மீண்டும் நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து சிம்பு ''சண்டையே இல்லாமல் நான் நடித்த முதல் படம் 'இது நம்ம ஆளு'.
பொருத்தமான கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் நானும், நயன்தாராவும் மீண்டும் சேர்ந்து நடிப்போம். இது நம்ம ஆளு படம் தள்ளிப் போனதால் தான் ஒரு பாடலுக்கு நயன்தாராவால் ஆட முடியவில்லை. இதனால் எனக்கும் அவருக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.
'இது நம்ம ஆளு' படம் தாமதமானதற்கு யாரையும் காரணம் என்று சொல்ல முடியாது. பொதுவாக படம் நன்றாக வந்திருக்கிறது. அந்த வகையில் படக்குழுவில் உள்ள அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்.
எனக்குத் திருமணம் நடப்பது என்னுடைய கையில் இல்லை. அதனை கடவுள் பார்த்துக் கொள்வார். எப்போது திருமணம் நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அப்போது கண்டிப்பாக நடக்கும்'' என்று கூறியிருக்கிறார். இது சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி நடித்திருக்கும் 'இது நம்ம ஆளு' வருகின்ற 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Comments: 0
கதைப்படி மாவட்ட ஆட்சியர் வேடமாம் அவருக்கு. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் 4 படங்கள் நடித்து வரும் நயன்தாரா, இந்தப் படங்களை முடித்ததும் தன் சொந்தப் படத்தில் நடிக்கப் போகிறாராம். முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜெகன், இப்படத்தை இயக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் பின்னர் பெரும் சிக்கலுக்குள்ளானது சொந்தப் படம் தயாரித்ததால்தான்.
நயன்தாரா சூதானமா இருந்தா சரி!
Comments: 0
இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் நாம் எதிர்பார்த்திருந்த அந்த வரலாற்றுத் தினம் வந்தே விட்டது என சந்தோஷத்தில் திளைக்க ஆரம்பித்தனர். விஷாலின் 'மருது'வுடன், 'இது நம்ம ஆளு' மோதும் என உறுதியாக படக்குழு சார்பில் அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 'இது நம்ம ஆளு' தள்ளிப் போயிருக்கிறது. தற்போது வந்த தகவலின்படி மே 27ம் தேதி இப்படம் வெளியாகும் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதவிர தமிழக அரசின் வரிச்சலுகையும் இப்படத்திற்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் தள்ளிப்போன காரணம் விஷாலின் 'மருது' என ஒருபுறமும், மற்றொருபுறம் வரிச்சலுகை கிடைக்காததால் இப்படம் தள்ளிப் போனதாகவும் கூறுகின்றனர்.
Comments: 0
ஆனால் இப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் இது குறித்து நடிகர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘நான் கடந்த மூன்று வருடங்களாக தென்னிந்த நடிகர் …
[ Full reading ]
Comments: 0
இப்படத்தில் மலேசியாவின் டான் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். தன்ஷிகா, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட …
[ Full reading ]
Comments: 0
சமீபத்தில் அவர் பாடியிருப்பது விக்ரம பிரபுவுக்காக.
அவர் இப்போது நடித்து வரும் வீரசிவாஜி படத்தில் தாறு மாறு தக்காளி சோறு... எனும் குத்துப் பாடலைப் பாடியுள்ளார்.
இந்தப் படத்தை நந்தகோபாலின் மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படத்தைத் தயாரித்த நிறுவனம் இது.
வீரசிவாஜி படத்தில் விக்ரம்பிரபு, ஷாமிலி நடித்துள்ளனர், கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார். இமான் இசையமைக்கிறார்.
டங்கா மாரி ஊதாரி மற்றும் எங்க தல எங்க தல பாடல்களை எழுதிய ரோகேஷ்தான் இந்த தாறு மாறு தக்காளி சோறு.. பாடலையும் எழுதியுள்ளார்.
Comments: 0
ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'பென்சில்' ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் 2 வது நாளே இப்படத்துக்கு திருட்டி சிடி வெளியாகியிருப்பது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜி.வி.பிரகாஷின் அறிமுகப்படமான 'பென்சில்' நீண்ட 3 வருடங்கள் கழித்து ஒருவழியாக கடந்த வெள்ளியன்று வெளியானது. ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் இப்படம் …
[ Full reading ]
Comments: 0
இந்நிலையில் வருகின்ற ஜூன் 15 ம் தேதி இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, ஆண்ட்ரியா என 2 ஹீரோயின்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் 2 பாகங்களை ஒரே நேரத்தில் இயக்கி முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டிருக்கிறாராம். அதனால் தான் தனது கேரியரில் தொய்வு விழுந்துவிடக்கூடாது என தனுஷ் அடுத்தடுத்த படங்களை ஒப்புக் கொண்டதாக கூறுகின்றனர்.
'புதுப்பேட்டை' போல 'வடசென்னை'யில் தனுஷுக்கு வெவ்வேறு தோற்றங்கள் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Comments: 0
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்து வரும் படம் 'இருமுகன்'.விக்ரம் இதில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.
அதில் ஒரு வேடத்தில் வில்லனாக விக்ரம் நடித்து வருவதாக தகவல்கள் அடிபடுகின்றன.
சமீபத்தில் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலடித்தது. இது தவிர விக்ரம் 2 வேடங்களில் நடிப்பது, நயன்தாரா-விக்ரம் இணையும் முதல் படம் என படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ''பில்லா' படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்களைக் கவர்ந்த நயன்தாரா இப்படத்திலும் அதுபோல ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வருகிறாராம். விக்ரமிற்கு இணையாக நயன்தாரா கதாபாத்திரத்தையும் இயக்குநர் வடிவமைத்துள்ளதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் விக்ரம் இப்படத்தில் வில்லனாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் இதுவரை பார்க்காத மிரட்டலான ஒரு விக்ரமை பார்க்கலாம் என்று கூறுகின்றனர். இதுவரை விக்ரம் எந்தப் படத்திலும் வில்லனாக நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரும் வில்லனாக நடித்து விட்டனர். தற்போது 'இருமுகன்' படத்தின் மூலம் விக்ரமும் இந்த வில்லாதி வில்லன்கள் வரிசையில் இணையப் போகிறார். ஹீரோ விக்ரம் வில்லனாக மிரட்டுவாரா?
Comments: 0
அனைவரும் ரசிக்கும்படி ஜனரஞ்சகமாய் எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வசூலைப் பெற்றது. இயக்குநருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.
தற்போது மஞ்சப்பை படத்தின் கன்னட பதிப்பு 'மிஸ்டர் மமகா' (மிஸ்டர் பேரன்) என்ற தலைப்பில் இம்மாதம் வெளியாகவுள்ளது. கன்னடத்திலும் ராகவாவே இயக்கியுள்ளார்.
ரவி கௌடா, ஒவியா, ரங்கயனா ரகு ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.
இந்தப் படம் தவிர, தமிழில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா, கேத்ரின் தெரசா நடிக்கும் படத்தையும் இயக்குகிறார் இயக்குநர் ராகவா. முதல் கட்டப் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளா வனப் பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விரைவில் தொடங்கவுள்ளது.
Comments: 0
மறுபுறம் ஜி.வி.பிரகாஷின் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.
இன்று 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் கலந்து கொண்டார். பாடல் வெளியீட்டிற்குப்பின் அக்ஷய் குமாரிடம் 'கபாலி' படத்தின் டீசரை லைக்கா நிர்வாகிகளில் ஒருவரான ராஜு மகாலிங்கம் போட்டுக் காண்பித்தார்.
டீசரைப் பார்த்த அக்ஷய்குமார் 'கபாலி 'படத்தின் முதல்நாள் முதல் காட்சியை(FDFS), சென்னையில் ரசிகர்களுடன் காண விரும்புவதாகக் கூறியிருக்கிறார்.
Comments: 0
சூர்யா, சமந்தா, நித்யாமேனன் கடந்த வாரம் வெளியான '24' படம் உலகம் முழுவதும் இப்படம் வசூலைக் குவித்து வருகிறது. இந்நிலையில் படம் வெளியான முதல்நாளே இப்படத்தின் சிடி வெளியாகிவிட்டது என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சூர்யா-சமந்தா நடிப்பில் வெளியான 24 படத்துக்கு முதல்நாளே திருட்டு சிடி வெளியாகி இருக்கிறது. அதைவிட இந்த சிடி பெங்களூரில் உள்ள பிரபலமான தியேட்டர் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது …
[ Full reading ]
Comments: 0
ரஜினிக்கு புத்தகங்கள் பரிசளித்த பாலகுமாரன், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பு குறித்த படங்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் 'இன்று காலை சூப்பர் ஸ்டார் ஶ்ரீ ரஜினிகாந்தோடு பேசி களித்தேன்' என்ற குறிப்போடு பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்தின் பாட்ஷா படத்துக்கு வசனம் எழுதியவர் பாலகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments: 0
வருகின்ற 16ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அனைவரும் வாக்களிப்பதற்கு வசதியாக அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 16 ம் தேதி நடிக, நடிகையர் வாக்களிபதற்கு வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மே 16ம் தேதி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினைப் பதிவு செய்யவுள்ளார். அதேநேரம் கமல் வெளிநாட்டுப் படப்பிடிப்பில் இருப்பதால் அன்றைய தினம் வாக்களிக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கமல் திங்கட்கிழமை சென்னையில் இருந்தால் ஓட்டுப் போடுவேன் என்று கூறியிருக்கிறார்.
விஜய், அஜீத், விக்ரம், கார்த்தி, விஷால் என திரையுலகில் இருக்கும் மொத்த நடிக, நடிகையரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றத் தயாராகி வருகின்றனர். கார்த்தி காஷ்மீர் படபிடிப்புத் தளத்தில் இருந்தாலும் தனது வாக்கினைப் பதிவு செய்திட அவர் சென்னை வருகிறார்.
அதே நேரம் சூர்யா தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் இருப்பதால், அவர் தனது வாக்கினைப் பதிவு செய்திட வரமாட்டார் என்று கூறப்படுகிறது. கமலும் சூர்யா வரிசையில் இணைவாரா? என்பது தெரியவில்லை.
Comments: 0
இதன் மூலம் அனிருத்தின் தனி இசை ஆல்பங்கள், இசை நிகழ்ச்சிகளின் உரிமை சோனிக்கு கைமாறுகிறது.
விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இப்போது அனிருத்தான் இசை அமைப்பாளர். தற்போது அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு அனிருத்தான் இசையமைக்கிறார்.
இவருடைய இசையில் தற்போது ‘ரெமோ', ‘ரம்' ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் மோகன் ராஜா இயக்கும் படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி தனிப்பாடல் தொகுப்புகள் மற்றும் வெளிநாடுகளில் நேரடி இசை நிகழ்ச்சிகளும் செய்து வருகிறார் அனிருத்.
இந்நிலையில் அனிருத்தின் தனிப்பாடல்கள் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளின் உரிமைகளை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த பாடல்களை உலக அளவில் பிரபலமாக்க சோனி நிறுவனம் ஒப்பந்தத்தை போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments: 0
கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில் டி.ராஜேந்தருடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். 'தனி ஒருவன்' புகழ் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர். இதுகுறித்து படக்குழு ''இப்படத்தில் நடிக்க மஞ்சிமா மோகன் கிட்டதட்ட சம்மதித்து விட்டதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும்'' என்றும் தெரிவித்துள்ளனர். ரத்தின சிவாவின் 'றெக்க' படத்துக்குப்பின் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.
சிம்புவுடன் இணைந்து நடித்த 'அச்சம் என்பது மடமையடா' இன்னும் வெளியாகவில்லை எனினும், அடுத்தடுத்த வாய்ப்புகள் மஞ்சிமாவைத் தேடிச்செல்வது குறிப்பிடத்தக்கது.
Comments: 0
என்னுடைய 'மருது' திரைப்படத்திற்கு சிடி வெளியானால் நானே களத்தில் இறங்கி நடவடிக்கை எடுப்பேன், என நடிகர் விஷால் சமீபதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு பெங்களூரில் இருந்து சென்னை வந்த தனியார் சொகுசுப் பேருந்தில் 'தெறி' திரைப்படம் ஓடுவதாக, விஷாலுக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிடி தடுப்புப் பிரிவு போலீசாருக்கு விஷால் தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்தப் பேருந்தை சென்னை, மதுரவாயல் அருகே மடக்கிப்பிடித்து சிடி, டிவியைப் பறிமுதல் செய்து டிரைவரைக் கைது செய்தனர்.
Comments: 0
இந்நிலையில் குழந்தைகள் பற்றி நஸ்ரியா கூறுகையில், பஹத் அன்பான கணவர் மட்டும் அல்ல அவரது பெற்றோருக்கு நல்ல மகனாகவும் உள்ளார். என் குழந்தைகள் என்னை போன்று இல்லாமல் அவரை போன்று இருக்க வேண்டும். என் 4 பிள்ளைகளில் பஹத் தான் நல்ல பிள்ளை என்று என் மாமியார் கூறுவார். நான் குழந்தையாக இருக்கையில் வாலாக இருந்தேன். அதனால் என் குழந்தைகள் என் போன்று இல்லாமல் பஹத் போன்று சமத்துப் பிள்ளையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
Comments: 0
[ Full reading ]
Comments: 0
கல்வி வியாபாரத்தை கதைக் களமாகக் கொண்டு எடுத்திருக்கிறார்கள். வினோத்குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரைலரை இன்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் வெளியிட்டார்.
"அச்சமின்றி டீசரை இப்போதுதான் பார்த்தேன். எந்த டாபிக்கை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியதாக இப்போதுதான் சொன்னார்கள். கண்டிப்பாக இந்தப் படம் அனைவரையும் கவனிக்க வைக்கும். இந்த ட்ரைலரில் நண்பன் விஜய் வசந்தின் தோற்றம் எனக்குப் பிடித்திருந்தது. இன்னொரு நண்பன் பிரேம்ஜி இசையமைத்துள்ளார். படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்," என்றார் விஷால்.
Comments: 0
சிவராஜ்குமார், வேதிகாவை வைத்து பி.வாசு இயக்கிய 'சிவலிங்கா' திரைப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திரில்+கிரைம் என்ற ரீதியில் உருவான இப்படத்தில் நடிகர் சக்திவேல் வாசுவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் தற்போது சந்திரமுகி-2 என்ற பெயரில் உருவாகவுள்ளது.
இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, தற்போது லாரன்ஸ் நடிப்பது உறுதியாகியுள்ளது. லாரன்ஸுடன் இணைந்து முக்கிய வேடத்தில் வடிவேலுவும் நடிக்கவிருக்கிறார். சிவலிங்காவை கன்னடத்தில் இயக்கிய வாசுவே தமிழிலும் இயக்குகிறார்.
தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா, இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிப்பார் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் காமெடி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.தற்போது சந்திரமுகி 2 விலும் வடிவேலு நடிக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கான நடிக, நடிகையர் தேர்வு முடிந்தவுடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக சந்திரமுகி-2 குறித்து அறிவிக்க திட்டமிட்டுள்ளது.
Comments: 0
கோலிவுட்டில் அண்மை காலமாக பேய் படங்கள் தான் கல்லா கட்டி வருகின்றன. அது மட்டும் அல்ல பேய் என்றால் பெண் பேயாக உள்ளது என்பதால் ஹீரோயினுக்கு தான் படத்தில் அதிக முக்கியத்துவம். அதனால் பேயாக நடிக்க ஹீரோயின்கள் போட்டா போட்டி போடுகிறார்கள்.
நயன்தாரா, ஹன்சிகா என்று ஆளாளுக்கு பேய் படத்தில் நடித்து ஹிட் கொடுத்ததை பார்த்த த்ரிஷாவுக்கும் பேய் மோகம் பிடித்தது. இகையடுத்து அவர் பேயாக நடித்த அரண்மனை 2 படம் சூப்பர் ஹிட்டானது.
ஆஹா, பேய் படத்தில் நடித்தால் நமக்கு முக்கியத்துவத்திற்கு முக்கியத்துவமும், ஹிட்டுக்கு ஹிட்டாகவும் உள்ளது என்பதை உணர்ந்த த்ரிஷா தற்போது நாயகி படத்தில் மீண்டும் பேயாட்டம் போடுகிறார்.
எத்தனை பேய் படங்கள் வந்தாலும் தியேட்டருக்கு படையெடுத்து அவற்றை ஹிட்டாக்காமல் விட மாட்டோம் என்று கோலிவுட் ரசிகர்கள் உள்ளனர். அதனால் நாயகி படம் நிச்சயம் ஹிட் என்று தற்போதே கூறலாம்.
Comments: 0
சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் தயாரிக்கும் படம் அந்தமான். கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்கள். இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, சாம்ஸ், மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை, சாம்ஸ், நெல்லை சிவா, போன்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், …
[ Full reading ]
Comments: 0
இதுகுறித்து படக்குழு ''பாஸ்போர்ட் வழங்கும் விஷயங்களில் உள்ள முரண்பாடுகள், அதனால் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. பாஸ்போர்ட் விஷயத்தை கையிலெடுத்திருப்பதால் சீரியஸ் படம் என்று எண்ணிவிட வேண்டாம். பொழுதுபோக்கு அம்சங்களுடன் எல்லோரையும் கவர்கின்ற படமாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளனர்.
'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை' என 2 படங்களுக்குப் பின் மணிகண்டன் இயக்கும் படம், விஜய் சேதுபதி, ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பது போன்ற காரணங்களால் இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் மக்கள் செல்வன் என்ற அடைமொழியோடு விஜய் சேதுபதியின் 'றெக்க' பர்ஸ்ட் லுக் நாளை வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Comments: 0
இந்நிலையில் 'மருது' படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யூ/ஏ சான்றிதழை வழங்கியுள்ளனர்.'மருது' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, படத்தை தணிக்கை அதிகாரிகளுக்கு படக்குழு அனுப்பி வைத்தது. இப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் சண்டைக் காட்சிகள் அதிகம் இருப்பதால் யூ/ஏ சான்றிதழை வழங்கியிருக்கின்றனர். மேலும் படத்தின் ஒருசில வசனங்களை நீக்கியிருப்பதாக விஷால் தெரிவித்திருக்கிறார்.
தணிக்கையில் யூ/ஏ சான்றிதழைப் பெற்றதன் மூலம் தமிழக அரசின் வரிவிலக்கை இப்படம் இழந்திருக்கிறது. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படத்திற்கு திருட்டு விசிடி வெளியானால், நான் எனது நண்பர்களுடன் இணைந்து களத்தில் இறங்கி நடவடிக்கை எடுப்பேன் என்று விஷால் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Comments: 0
இந்நிலையில் மே 16 ல் ஓட்டுப் போட்டால் 2 டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என புதுமையான முறையில் இப்படத்தை படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. ''மே 16 அன்று வாக்களிப்பவர்கள், வாக்களித்த விரல் மையுடன் ஒரு செல்பி மற்றும் உங்கள் முகவரியை 8682888038 என்கிற எண்ணுக்கு வாட்ஸப் அனுப்பினால் குலுக்கல் முறையில் 500 வாக்காளர்களுக்கு கோ 2 படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் வீடு தேடி வரும்'' என்று கூறியுள்ளனர். வருகின்ற 13ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது.
Comments: 0
விஷாலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு, கோவை, ஈரோடு, …
[ Full reading ]
Comments: 1
அந்த சந்தோஷத்துடன் ட்விட்டரில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதில், "இன்று நிம்மதியாகத் தூங்குவேன். இந்தக் கோடையின் …
[ Full reading ]
Comments: 0
மேலும் 100% வாக்குப்பதிவிற்காக விழிப்புணர்வு விளம்பரங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஓட்டுக்கு பணம் வாங்குவதற்கு தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் ''May 16 ஓட்டு போடுவதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும்போது அடையாளம் கொள்க, அவன் வருங்கால திருடன் என்று" என கூறியிருக்கிறார்.
Comments: 0
பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய கஞ்சா கருப்பு, "என்னை யாராவது அரசியல் கட்சியில் சேர அழைப்பு விடுத்தால் நாலே நாலு நாட்களுக்கு மட்டும் முதலமைச்சர் பதவியை கேட்டுப் பெறுவேன். அதற்குள் செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிடலாம். நான் முதலமைச்சர் ஆனால் பள்ளியில் மதிய உணவுக்கு மாணவர் ஒருவருக்கு முழு கோழி ஒன்று வழங்கப்படும். இது நகைச்சுவைக்காக நான் சொல்லவில்லை. சீரியசாத்தான் சொல்றேன்.
சுயேட்சை வேட்பாளர் முத்துமணி வெற்றி பெற்றால் அனைத்து நதிகளும் இணைக்கப்படும். பல்வேறு கட்சிகள் எனக்கும் அழைப்பு விடுத்தன. ஆனால் நான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. முத்துமணி கட்சி ஆரம்பித்தால் நானும், நடிகை ஷகிலாவும் முதல் நபர்களாக கட்சியில் இணைவோம். நான் படிக்காமல் போனதால் என்னை பலரும் ஏமாற்றிவிட்டார்கள். கோடிக்கணக்கில் பணத்தை இழந்துவிட்டேன். எனவே நான் முதலமைச்சரானால் கல்வி முற்றிலும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பேன்," என்றார்.
Comments: 0
இந்தப் பிரச்சினையை ஒரு திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜபாண்டி. என்னமோ நடக்குது என்ற சூப்பர் ஹிட் படத்தைத் தந்தவரின் அடுத்த படைப்பு இது. அதே விஜய் வசந்த், தயாரிப்பாளர் வினோத்குமார், இசையமைப்பாளர் பிரேம்ஜி இந்தப் …
[ Full reading ]
Comments: 0
கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்ட சில படங்களை மட்டுமே திரையிடுவார்கள். அந்த திரைப்பட விழாவில் ஒரு படம் திரையிடப்படுவது அந்த படக்குழுவினருக்கு கிடைத்த கௌரவமாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் வசூலை அள்ளிக் குவித்த ராஜமவுலியின் பாகுபலி படம் திரையிடப்படுகிறது. பாகுபலி வரும் 16ம் தேதி இரவு 8.30 மணிக்கு திரையிடப்படுகிறது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பாகுபலி படத்தின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி, தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா ஆகியோர் பிரான்ஸ் செல்கிறார்கள். அங்கு வி.ஆர்.(virtual relaity)குறித்து நடக்கும் கலந்தாய்வில் ராஜமவுலி கலந்து கொள்கிறார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சோனம் கபூர் ஆகியோர் ஏற்கனவே பிரான்ஸ் கிளம்பிச் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments: 0
இப்படத்தின் பூஜையின் போது, நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு ரூ.1 கோடி தருவதாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து லைக்கா நிறுவன சென்னை நிர்வாகி ராஜு மகாலிங்கம் இன்று அந்த ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் மற்றும் பொருளார் கார்த்தி ஆகியோரை சந்தித்து வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் மற்றும் நிர்வாகிகளான ஐசரி கணேஷ், நடிகர் ராஜா ஆகியோரும் உடனிருந்தனர்.
Comments: 0
இப்போது சாரல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் அவர், தனது பெயரை ஸ்ரீ ஜா என மாற்றிக் கொள்ளக் காரணம் கேட்டபோது, 'ப்ரியங்கா என்ற பெயரில் இங்கே ஏற்கெனவே சில நடிகைகள் இருந்தது, இருப்பது இப்போதுதான் எனக்கே தெரிந்தது. பெயர்க் குழப்பம் வேண்டாமே என்பதற்காகத்தான் ஸ்ரீ ஜா-வாகிவிட்டேன். இன்னொன்று நியூமராலஜிபடியும் எனக்கு இந்தப் பெயர் சரியாக இருக்கும் என்றார்கள். நான் நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படம் சாரல். படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தப் படத்தின் ரிலீசுக்காகக் காத்திருக்கிறேன்.
இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ரீங்காரம் படம் ஷூட்டிங் முடிந்து, இறுதிக் கட்ட வேலைகள் நடக்கின்றன. இன்னொரு படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இவை தவிர இன்னும் சில படங்களுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். கதையைப் பொறுத்து முடிவு செய்யலாம் என காத்திருக்கிறேன். நான் நடிக்கவிருக்கும் திருப்பதி லட்டு படம் இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கிறது," என்றார். பெயர் மாற்றம் ஸ்ரீ ஜாவுக்கு கோலிவுட்டில் பெரிய இடத்தைப் பெற்றுத் தர வாழ்த்துவோம்!
Comments: 0
இதுவும் 'நாயகி' போல திகில் படம்தான் எனவும், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் இருந்து துவங்கும் என்றும் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் ''முதன்முறையாக ஒரு திகில் படத்திற்கு இசையமைக்கவிருக்கிறோம். இது மிகவும் சவாலாக இருக்கும் என்று தெரிகிறது. இப்படத்தில் 4 பாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர்.இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments: 0
இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று மாலை நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் விஷால் பேசுகையில்: தமிழில் மருது என்ற பெயரிலும், தெலுங்கில் ராயுடு …
[ Full reading ]
Comments: 0
இதுவரை ரவுடி, போலீஸ், டாக்டர் வேடங்களில் நடித்த விஜய் சேதுபதி இப்படத்தில் முதன்முறையாக வக்கீலாக நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி 2 வில்லன்களுடன் இப்படத்தில் மோதப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'வேதாளம்' படத்தில் அஜீத்துக்கு வில்லனாக நடித்த கபீர் சிங் மற்றும் 'விஜய் 60' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் ஹரிஷ் உத்தமன் ஆகிய இருவரும் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கப் போகிறார்களாம். இந்த வார இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments: 0
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கதாநாயகி ஸ்ரீதிவ்யா பேசுகையில், "மருது' படம் நடிக்கும் போதே எனக்குத் தெரிந்தது இது நிச்சமாக வெற்றிப்படமாக அமையும் என்று. அப்படிப்பட்ட ஒரு சிறப்பான கதை. நடிகர் சூரியின் எமோஷனலான நடிப்பைப் பார்த்து நான் 'மெர்சலாயிட்டேன்.' படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நிச்சயமாக ஒரு வெற்றிப்படமாக இது அமையும்," என்றார்.
படத்தின் இயக்குநர் முத்தையா பேசுகையில், "மருது' மண்மனம் மாறாத ஒரு கிராமிய திரைப்படமாக இருக்கும். ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதைதான் 'மருது'. எனக்கு சென்டிமெண்ட் படங்களைத்தான் இயக்கத் தெரியும். நான் நகரம் சார்ந்த கதையமைப்பில் படம் செய்தாலும் அதிலும் சென்டிமெண்ட் இருக்கும். 'மருது' கதாபாத்திரத்துக்கு விஷால் சார் மிகச்சரியாக பொருந்தி இருந்தார். அவருடைய உடல் அமைப்பும், நிறமும் இந்த கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தியது.
படத்தின் கதாநாயகி ஸ்ரீ திவ்யா. இக்கதைக்கு ஸ்ரீ திவ்யா அழகாக பொருந்தி வந்ததால் அவரை இக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்தோம். அதுமட்டுமல்லாமல் இசையமைப்பாளர் இமானுடன் எனக்கு முதல் படத்தில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உண்டு. இந்த படத்தின் மூலம் அது நிறைவேறி உள்ளது எனக்கு மகிழ்ச்சி. படத்தில் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது. நடிகர் சூரி, அவர் இப்படத்தில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் குணசித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார்," என்றார்.
Comments: 0
சூர்யா,சமந்தா, நித்யாமேனன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 24 திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் மகிழ்ந்துபோன சூர்யா இப்படத்திற்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார்.
சூர்யா-சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் '24'. முதல் படமான '36 வயதினிலே' படத்தை 3 கோடியிலும், 'பசங்க 2' படத்தை 5 கோடியிலும் சூர்யா தயாரித்திருந்தார். இரண்டு பட்ஜெட் …
[ Full reading ]
Comments: 0
இதுகுறித்து அவர் '' இன்று இரவு நிம்மதியாகத் தூங்குவேன். இந்த கோடை காலத்தின் கடைசி படமும் வெளியாகி விட்டது. கடந்த 8 மாதங்களாக ஓய்வின்றி உழைத்து வந்தேன். அந்த நாட்கள் மிகவும் கடினமாக இருந்தன. சோர்வு காரணமாக என்னால் முடியாது என்னும் நிலை வந்தபோதும், அந்த இக்கட்டான நிலைமைகளை நான் சமாளித்து விட்டேன்.
இந்த 8 மாதங்களில் என்னால் ஒரு நல்ல மகளாக, தோழியாக இருக்க முடியவில்லை. இதனை சரிக்கட்ட இனிமேல் புதிய படங்கள் எதையும் நான் ஒப்புக் கொள்ள போவதில்லை. இந்தக் கடுமையான நாட்களில் எனக்கு ஆதரவளித்த எனது குடும்பத்துக்கு நன்றி'' என்று கூறியிருக்கிறார். சமந்தாவின் இந்த அதிரடி முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Comments: 0
முனீஸ்வரன் சிலைக்கு முன் பேயாக வந்து அவர் பண்ண ரகளை இன்றும் மறக்க முடியாதது. அந்த முனிதான் பிறகு காஞ்சனா, காஞ்சனா 2 என கலக்கியது. அதிலும் 'காஞ்சனா 2' திரைப்படம் 100 கோடிகள் வரை வசூலித்து சாதனை புரிந்தது. தொடர் வெற்றிகளால் லாரன்ஸை நாயகனாக தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் பலரும் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் 'முனி' படத்தின் தொடர்ச்சியாக 'நாகா' என்ற படத்தை உருவாக்கி வருகிறார் லாரன்ஸ். இது முனியின் 4வது பாகம். இதில்தான் ராஜ்கிரணை லாரன்ஸ் மீண்டும் நடிக்க வைக்கப் போகிறாராம்.
9 வருடங்களுக்குப்பின் இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று கூறுகின்றனர். வேந்தர் மூவிஸ் தயாரிக்கும் இப்படம் லாரன்ஸின் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் முடிந்ததும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments: 0
தொடர் வழிப்பறி கொள்ளைகளை வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் சிரிஷ் நாயகனாகவும், பாபி சிம்ஹா வில்லனாகவும் நடித்திருக்கின்றனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து இப்படத்தை தணிக்கைக்கு படக்குழு அனுப்பி வைத்தது. ஆனால் வன்முறைக் காட்சிகள் அதிகம் உள்ளது என்று கூறி இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை அதிகாரிகள் மறுத்து விட்டனர். தணிக்கை அதிகாரிகளின் மறுப்பால் 'மெட்ரோ' குழு மறுதணிக்கைக்கு சென்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு ஏ சான்றிதழை வழங்கியிருக்கின்றனர்.
இதுகுறித்து படக்குழு '' செயின் கொள்ளைகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை மற்றும் காட்சிகளை அமைத்திருக்கிறோம். உண்மையில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு என்பதால் காட்சிகள் தத்ரூபமாக அமைந்துள்ளன. அதனால் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர். தற்போது மறுதணிக்கையில் ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. வருகின்ற ஜூன் மாதம் இப்படத்தை வெளியிடவிருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
Comments: 0
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன்படி வருகின்ற ஜூன் 9 ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அனிருத்தின் தீம் மியூசிக்குடன் வெளியாகவுள்ளது.
இதில் சிவகார்த்திகேயன் 3 வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் இப்படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தற்போது பர்ஸ்ட்லுக்குடன் இணைந்து தீம் மியூசிக் வெளியாவது சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால் #remofirstlook, #RemoThemeMusic போன்ற ஹெஷ்டேக்குகளை உருவாக்கி அவற்றை தேசியளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Comments: 0
இந்த சாதனை ட்ரைலரை உருவாக்கிய பா ரஞ்சித்திடம் அதுபற்றிக் கேட்டால், "உண்மையில் நான் பயந்து கொண்டிருந்தேன், இந்த ட்ரைலரை ரஜிடி ரசிகர்கள் எப்படி வரவேற்கப் போகிறார்களோ என்று. தாணு சாரிடம் இதைச் சொன்னபோது, அவர் அமைதியாக சிரித்துக் கொண்டே தைரியமா பண்ணுங்க என்றார். டீசர் ரிலீசான வேகத்தில் ரசிகர்கள் அதைக் கொண்டாடிய விதத்தைப் பார்த்து கண்ணீரே வந்துவிட்டது. ரொம்ப மகிழ்ச்சியாகிவிட்டது. இப்போது படம் குறித்து மிகுந்து நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்றார்.
மே இறுதியில் ஆடியோ ரிலீஸை வைத்திருக்கிறார்கள். அதற்கடுத்த சில தினங்களிலேயே கபாலி ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள்.
Comments: 0
இதில் முக்கிய வேடத்தில் நடிப்பவர் ராஜ்கிரண். முனி முதல் பாகத்தில் நடித்தவர் ராஜ்கிரண்தான். இப்போது மீண்டும் லாரன்சுடன் இணைகிறார்.
முனி படத்திலிருந்து ராகவா லாரன்சின் அனைத்துப் படங்களிலும் அவருக்கு அம்மாவாக நடித்து வருபவர் கோவை சரளா. இந்தப் படத்தில் கோவை சரளாவை பேயாக்கி, காமெடி பண்ணப் போகிறாராம் லாரன்ஸ்.
கோவை சரளா இதுவரை எந்தப் படத்திலும் பேய் வேடம் போட்டதில்லை. ஒரு மாறுதலுக்கு பேயாக வந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கப் போகிறார் என்கிறது நாகா யூனிட்.
இந்தப் படத்துக்குப் பிறகு முனி படத்தின் 5-ம் பாகத்தையும் உருவாக்கப் போகிறாராம் லாரன்ஸ். தமிழ் சினிமாவில் ஒரு படத்துக்கு இரண்டாம் பாகம் என்பதே பெரிய விஷயம். ராகவா லாரன்ஸ்தான் முதல் முறையாக 5 பாகங்கள் வரை எடுக்கப் போகிறார்.
Comments: 0
'மதகஜராஜா' படத்தை விஷால் வாங்கி வெளியிட முன்வந்தார். அப்போதும் 'கடல்' படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் பிரச்சினை செய்யவே, பட வெளியீட்டை கைவிட்டார் விஷால். அதன் பிறகு விஷால் நடித்த ஆறேழு படங்கள் வந்துவிட்டன.
விஷாலும் நடிகர் சங்க செயலாளராகி, திரையுலகில் முக்கிய ஆளுமையாகிவிட்டார். இந்த நிலையில் படத்தை வரும் மே 13-ம் தேதி வெளியிடப் போவதாக விளம்பரங்கள் வெளியிட்டனர். ஆனால் இப்போது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் வெறுத்துப் போன விஷால், "மதகஜராஜா' எப்போது வெளியாகும் என்பது கடவுளுக்குக் கூட தெரியாது" என்று கமெண்ட் அடித்துள்ளார். விஷால் நடித்த இன்னொரு படம் 'மருது' வரும் மே 20ம் தேதி வெளியாகிறது.
Comments: 0
மறுபுறம் மக்களை 100% வாக்களிக்க வைப்பதற்கு தேர்தல் கமிஷன் பல்வேறு வழிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான சிம்பு வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை எழுதி வருகிறார். தற்போது அப்பாடலின் ஒருசில வரிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்
ஓட்டு போட வேண்டியது உன் கடமை
போடலைன்னா அது உன் மடமை
எதுக்குடா போடணும்னு நினைக்கிறது கொடுமை
அதனாலத் தான் நம்ம நாட்டுல இவ்வளவு வறுமை
நான் ஒருத்தன் போடலைன்னா என்னனு நீ நினைப்ப
உனக்கு வேண்டிய மாற்றத்தை நீயே தான் தடுப்ப
எவன் ஜெயிச்சா எனக்கு என்னனு நீ இருப்ப
தமிழ் நாட்டோட வளர்ச்சியை நீயே தான் கெடுப்ப
போடாம விட்டது பலவாட்டி
போட்டுத்தான் பாருடா இந்த வாட்டி
போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு
போடுங்கடா ஓட்டு அதுக்குத்தான் இந்த பாட்டு
இதுகுறித்து சிம்பு ''தந்தை டி.ராஜேந்தர் பாணியில் எதுகை, மோனையுடன் ஒரு பாடாலை எழுதவேண்டும் என்ற என்னுடைய ஆசை இப்பாடலின் மூலம் நிறைவேறியிருக்கிறது. இன்னும் ஒருசில நாட்களில் இப்பாடல் வெளியாகும்'' என கூறியிருக்கிறார்.
Comments: 0
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை சி.வி.குமார் தனது திருக்குமரன் எண்டெர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து இப்படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைத்தனர். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் எந்தக் காட்சியையும் நீக்காமல் இப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழை வழங்கி இருக்கின்றனர்.இதையடுத்து வருகின்ற ஜூன் 3ம் தேதி இப்படத்தை வெளியிடவிருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருக்கிறார்.
இதன் மூலம் 'பீட்சா', 'ஜிகர்தண்டா' வரிசையில் இறைவி'யும் இணைந்திருக்கிறது தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் பெறும் படங்களுக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments: 0
'டார்லிங்' புகழ் சாம் ஆண்டன் இயக்கி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' இசை வெளியீட்டு விழா வருகின்ற 12ம் தேதி நடைபெறுகிறது.
இப்பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் கலந்துகொண்டு, பாடல்களை வெளியிடவுள்ளார். அக்ஷய்குமார் தற்போது ஷங்கர் இயக்கி வரும் '2.ஓ' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார். '2.ஓ' மற்றும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என 2 படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்றொருபுறம் ஜி.வி.பிரகாஷின் அறிமுகப் படமான 'பென்சில்' வருகின்ற 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments: 0
அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் ஜெயலலிதாவுக்கு உள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பொய் தகவல்களை வெளியிட்டு மக்களை திசை திருப்ப முயற்சி செய்து வருகிறது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. அதிமுகவில் சேர்ந்த நாளில் இருந்து கட்சிக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன்.
எனக்கு பதவி ஆசையே இல்லை என பொய் சொல்ல மாட்டேன். அந்த ஆசை உள்ளது. தேமுதிக, த.மா.கா.-மக்கள் நலக் கூட்டணி நிலையானது அல்ல. அதனால் எதையும் செய்ய முடியாது. ஸ்டாலின் பிரச்சாரத்தின்போது பொய் பேசுகிறார். அவர் துணை முதல்வராக இருந்தபோது ஏன் நமக்கு நாமே பயணத்தை மேற்கொள்ளவில்லை? என்றார்.
Comments: 0
'வா டீல்' படத்தை இயக்கிய ரத்தினசிவா இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் …
[ Full reading ]
Comments: 0
சூர்யா நடிப்பில் உருவான '24' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டைம் டிராவல் கதை என்றாலும் விக்ரம் குமார் தங்களைக் குழப்பவில்லை என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
டைம் டிராவலை மையமாகக்கொண்டு நேற்று முன்தினம் வெளியான படம் '24'. சூர்யா, சமந்தா, நித்யாமேனன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரின் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதன்முறையாக …
[ Full reading ]
Comments: 0
கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த கோவிலின் புகைப்படத்தையும் ராஜஸ்தானில் வடிவமைக்கப் பட்டுக் கொண்டிருக்கும் தனது தாயாரின் சிலையின் புகைப்படத்தையும் இன்று அன்னையர் தினத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
…
[ Full reading ]
Comments: 0
இந்நிலையில் தனக்கு ஏற்ற கதை அமைந்தால் போலீஸ் வேடங்களில் நடிக்கத் தயார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் உதயநிதி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து உதயநிதி '' 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்குபின் 'மனிதன்' திரைப்படம் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இப்படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக பலரும் பாராட்டுகின்றனர்.
குறிப்பாக இப்படத்தைப் பார்த்த பின் எனது தந்தை என்னை கட்டியணைத்துப் பாராட்டினார்.இப்படத்தின் பெயர் தமிழ்ச்சொல் அல்ல என்று கூறி வரிவிலக்கு வழங்க மறுக்கின்றனர். வரிவிலக்கு வழங்குவதில் தற்போதைய அரசு பாரபட்சம் காட்டுகின்றது. 'கெத்து' படத்திற்கு போராடி வரிவிலக்கு பெற்றேன். அதேபோல இப்படத்திற்கும் போராட வேண்டும் என நினைக்கிறேன்.நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் போலீஸ் வேடங்களில் நடிக்கவும் ஆர்வம் கொண்டுள்ளேன். தற்போதைய சூழ்நிலையில் படத்தைத் தயாரித்து, சொந்தமாக வெளியிடுவது தான் பெரிய சாதனையாக இருக்கிறது'' என்று கூறியிருக்கிறார்.
Comments: 0
'சுப்ரமணியபுரம்' ஜெயிச்ச நேரம். வீட்டுக்கு வந்தேன். 'அதான் ஒரு டைரக்டரா ஜெயிச்சிட்டியேப்பா... இனியும் அங்கபோயி …
[ Full reading ]
Comments: 0
உலகத்தில் உழைக்கும் வர்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் …
[ Full reading ]
Comments: 0
No user |
|
|